தமிழ்நாட்டில் உள்ள 8 அரசு போக்குவரத்து கழகங்களில் 3274 ஓட்டுநர் நடத்துநர் காலிப் பணியிடங்கள் நியமன செய்யப்பட இருப்பதாகவும் இன்று முதல் அதற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் சாலை போக்குவரத்து நிறுவனம் அறிவித்துள்ளது
தமிழக அரசு போக்குவரத்து துறையின் கீழ் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் அரசு விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் விழுப்புரம், சேலம், கோவை, மதுரை, நெல்லை கோட்டங்களில் உள்ள போக்குவரத்து கழகம் என 8 போக்குவரத்துக் கழகங்கள் உள்ளன. இவற்றில் ஓட்டுநர் நடத்துநர் பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக சாலை போக்குவரத்து நிறுவனம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறி யிருப்பதாவது:
தமிழ்நாடு அரசின் 8 போக்குவரத்து கழகங்களில் உள்ள 25 மண்டலங்களில் 3274 ஓட்டுநர் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதன்படி சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 364 பணியிடங்களும், அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 318 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
விழுப்புரம், கும்பகோணம்
விழுப்புரம் கோட்ட போக்குவரத்து கழகத்தின் கீழ் உள்ள விழுப்புரம் மண்டலத்தில் 88 பணியிடங்கள் வேலூர் மண்டலத்தில் 50, காஞ்சிபுரம் மண்டலத்தில் 106 ,கடலூர் மண்டலத்தில் 41, திருவண்ணாமலை மண்டலத்தில் 37, இடங்கள் என மொத்தம் 322 ஓட்டுநர் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதே போன்று கும்பகோணம் கோட்டை போக்குவரத்து கழகத்தின் கீழ் செயல்படும் கும்பகோணம் மண்டலத்தில் 101 பணியிடங்கள், நாகப்பட்டினம் மண்டலத்தில் 136, திருச்சி மண்டலத்தில் 176, காரைக்குடி மண்டலத்தின் 185, புதுக்கோட்டை மண்டலத்தில் 110, கரூர் மண்டலத்தின் 48 என மொத்த 756 ஓட்டுநர் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
சேலம்,கோவை
மேலும், சேலம் கோட்டை போக்குவரத்து கழகத்தின் கீழே உள்ள சேலம் மண்டலத்தில் 382, இடங்கள் தர்மபுரி மண்டலத்தின் 104 என மொத்தம் 486 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. கோவை கோட்ட போக்குவரத்து கழகத்தில் கீழ் உள்ள கோவை மண்டலத்தில் 100,ஈரோடு மண்டலத்தின் 119,ஊட்டி மண்டலத்தில் 67, திருப்பூர் மண்டலத்தில் 58, என மொத்தம் 344 ஓட்டுநர் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
அதேபோன்று மதுரை போக்குவரத்து கழகத்தின் கீழ் உள்ள மதுரை மண்டலத்தில் 190, பணியிடங்கள் திண்டுக்கல் மண்டலத்தில் 60, விருதுநகர் மன்றத்தில் 72, என மொத்தம் 322 பணியிடங்களும் நெல்லை கோட்ட போக்குவரத்து கழகத்தின் கீழ் உள்ள நெல்லை மண்டலத்தில் 139, நாகர்கோவில் மண்டலத்தின் 129, தூத்துக்குடி மண்டலத்தில் 94, என மொத்தம் 362 ஓட்டுநர் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
3274 ஓட்டுநர் நடத்துநர் பணியிடங்கள்
8கோட்ட போக்குவரத்து கழகத்திலும் சேர்த்து நிரப்பப்பட இருக்கும் 3,274 ஓட்டுநர் நடத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் www.arasubus.tn.gov.inஎன்ற இணையதளத்தின் வழியாக 21ஆம் தேதி மதியம் ஒரு மணி முதல் ஏப்ரல் 21ஆம் தேதி மதியம் ஒரு மணி வரை விண்ணப்பிக்கலாம் விண்ணப்பத்தார்களுக்கான கல்வித்தகுதி வயதுவரம்பு தேர்வு கட்டணம் உள்ளிட்ட மேலும் விவரங்களையும் மேற்கண்ட இணையதளத்தல் பார்த்து தெரிந்து கொள்ளலாம் எழுத்து தேர்வு செய்முறை தேர்வு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் மேலும் ஹால் டிக்கெட் உள்ளிட்ட தேர்வு குறித்த விவரங்கள் அவ்வப்போது விண்ணப்ப பதிவு இணையதளத்தில் வெளியிடப்படும்.
0 கருத்துகள்