Ad Code

Ticker

6/recent/ticker-posts

கடவுள் நம்பிக்கை வெற்றியை பெற்றுத்தரும்

டவுள் மீது பக்தியுடன் வாழ்ந்த ஒரு மனிதன் இறந்து சொர்க்கம் சென்றான். அங்கிருந்த கலைக் கண்காட்சியில் கடவுள் பக்தியுடைய நல்லவர்கள் படங்களுக்கு மத்தியில் இவனுடைய படமும் மாட்டப்பட்டிருப்பதை கண்டான். அந்த படத்தை உற்று கவனித்து தனது படம்தான் என்று உறுதிப்படுத்திக் கொண்டான். அந்த படத்தில் தெரிந்தது. ஒரு கடற்கரை காட்சி. அவன் கடற்கரை மணலில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருக்கிறான். அவனுக்கு முன்னும், பின்னும் காலடிச்சுவடுகள் சில இடங்களில் இரண்டு ஜோடி காலணிகளும் சில இடங்களில் ஒரே ஒரு ஜோடி காலடிகளும் இருப்பதை அவன் கண்டான். அதன் அர்த்தம் என்ன என்று வியந்தான். பின் அவனுக்கு உதயமாயிற்று இன்னொரு ஜோடி காலடிகள் கடவுளுடையது. அவன் வாழ்க்கை முழுவதும் கடவுளை விடாது பிடித்துக் கொண்டிருந்தானே. பின் ஏன் சில இடங்களில் கடவுளின் காலடி சுவடுகள் காணப்படவில்லை. அந்த வண்ணப்படத்தையே உற்று பார்த்துக் கொண்டிருந்தான். ஒரே ஒரு காலடிச் சுவடு இருந்த இடத்தை கூர்ந்து கவனிக்கும் பொழுது அவனுக்கு நினைவு வந்தது. அவனுக்கு அப்போது வயது 18 தேர்வில் தோல்வியடைந்திருந்தான். பல இன்னல்களையும், துன்பங்களையும் சந்திக்க வேண்டியிருந்தது. ஒரே ஒரு காலடிச் சுவடுகள் தெரிந்த மற்றொரு இடம் அவனுடைய  முப்பத்தி இரண்டுக்கும் முப்பத்தி நான்கிற்கும் இடைப்பட்ட காலம். அவன் நோயுற்றிருந்தான்.அனைவரும் நம்பிக்கை இழந்து அவ்வளவுதான் அவன் என்று கைவிட்டப்போது எங்கே அவர்? அவர் எப்படி ஒரு பக்தனைப் இபடித் துன்ப காலங்களில் கைவிடலாம்?.

அந்த நல்லவனக்கு கடவுள் மீது கோபமும் கசப்பும் தோன்றியது. அவனுக்கு காத்திருந்து. கடவுளைப் பார்த்து திட்டக்கூட பொறுமையில்லை. முடிவாக அவனுக்கு கடவுளை தரிசனம் கிடைத்தது. அவரை பார்த்ததும் அவரிடம் அவருடைய நம்பிக்கைத் துரோகத்திற்காக சீறினான். ஆத்திரப்பட்டான். பொறுமையாக புன்னகையுடன் அவன் கோபம் தணிவதற்க்காக கடவுள் காத்திருந்தார். அவன் கோபம் அடங்கியவுடன் கடவுள் அவனிடம் "அந்த ஒரு ஜோடி காலடிகள் உன்னுடையது என்று யார் கூறினார்?" எனக் கேட்டார். "உன்னுடைய மகிழ்ச்சியான காலங்களில் சந்தோஷமாக உன்னுடன் கைகோர்த்துக் கொண்டு உனது அருகாமையில் நடந்துவந்துள்ளேன்.உனது துன்ப காலங்களில் ஒரே ஒரு ஜோடி காலணிகளளைத்தான்  நீ பார்க்க முடியும். ஏனென்றால் அது என்னுடையது. அத்தருணங்களில் உன்னை நான் எனது தோளில் சுமக்க வில்லையா?. இந்த கதை கேட்கும் பொழுது நம் கண்கள் கண்ணீரால் நிரப்பப்படுகிறது. நாம் கஷ்டப்படும் பொழுது கடவுள் மீது நம்பிக்கை இழந்து நிந்திக்கின்றோம். ஆனால் அப்படிப்பட்ட காலகட்டத்திலும் மறைவிலிருந்து ஒரு கை நம்மை காப்பாற்றுகிறது என்றால் அது கடவுளே இன்பம், துன்பம் இரண்டிலும் நம்முடன் இருப்பவர் அவர் ஒருவரே. இதை நாம் மனதில் கொண்டு எப்பொழுதும் கடவுள் மீது நம்பிக்கை இழக்காத இருத்தல் வேண்டும்.

அமைதியற்ற மனதை அமைதிப்படுத்துவது கடவுள் மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கையே. உடல் மனம் ஆத்மா மூன்றின் செயல்களை நாம் செய்யும்பொழுதும் அச்செயல் கடவுளை சந்தோசப்படுத்துவதற்காக செய்யப்படுகிறது என நாம் நம்புதல் வேண்டும். இப்படி நம்பினால், நம்பி ஒவ்வொரு காரியமும் செய்தால் விரைவில் கடவுளின் அருகாமையை ஒருவன் உணர்வான். கடவுள் மீது நாம் வைக்கும் நம்பிக்கையே நாம் எதிர்பார்ப்பின் உட்பொருள், காணமுடியாத பொருட்களின் சாட்சி என பைபிள் கூறுகிறது. கடவுள் மீது நம்பிக்கை வைத்து நல்ல காரியங்களை செய்தால் அவர் நம்மருகே உள்ளார் என்பதை அவர் நமக்கு செய்யும்
உதவியிலிருந்து கண்டுகொள்ளலாம். நாம் எடுக்கும் முயற்சியில் ஒருவேளை தோல்வியுற்றாலும் நாம் வைத்திருக்கும் நம்பிக்கை குறையாது. அவரை நினைத்துத் தியானித்து முயற்சி செய்தால் நாம் எதிர்பார்க்கும் பலனை விட அதிகமாகவே கிடைக்கும். கடவுளின் அருளைப் பெறுவதற்கு விடாமுயற்சி அவசியம். நாம் விரும்பியபடி காரியங்கள் நடக்கவில்லையெனில் நமக்கு ஆண்டவன் மீதுள்ள நம்பிக்கை குறைந்து முயற்சியை கைவிட்டு விடுவோம். இது தவறு  நம்பிக்கைக் குறையாது இருந்தால் நிச்சயமாக ஆண்டவன் அருள் இரட்டிப்பாக கிடைக்கும்.

கருத்துரையிடுக

1 கருத்துகள்