Ad Code

Ticker

6/recent/ticker-posts

வங்கி(Bank)

நவீன வங்கி முறை இத்தாலியில் தொடங்கப்பட்டதால், வங்கி என்ற சொல்லும் இத்தாலி மொழிக்குறியது. "பேங்க்"என்ற சொல் "பேங்கா" என்ற வார்த்தையில் இருந்து எடுக்கப்பட்டது. பேங்க்கா என்ற இத்தாலியம் ஜெர்மன் மொழியிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் 'குவியல்' ஆகும். பலர் இக்கருத்தை ஏற்றுக் கொள்கின்றனர். மற்றவர்கள் பேங்க் என்ற வார்த்தை "பேங்கர்ஸ்"அல்லது "பேங்கிஸ்" என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்டது என்று கருதுகிறார்கள். இந்த வார்த்தைகளின் அர்த்தம் இருக்கை என்பதாகும். பழங்காலத்தில் இவ்வாறான இருக்கைகளில் அமர்ந்து கொண்டு தான் பணம் மாற்றுபவர்கள் அல்லது வங்கியாளர்கள் பணத்தை மாற்றுவது வழக்கம் மற்றும் வங்கி ரீதியான மற்ற பரிமாற்றங்கள் ஆகியவற்றை செய்தார்கள். ஆடம் ஸ்மித் அவர்களின் கூற்றுப்படி அரசிற்கும் கடன் வழங்கும் அமைப்பாக வங்கிகள் உள்ளது.

முதல் பொது வங்கியாக வெனிஸ் வங்கி 1157 இல் நிறுவப்பட்டது. பார்சிலோனா வங்கி மற்றும் ஜெனோவா வங்கிகள் 1401 மற்றும் 1407 நிறுவப்பட்டன. வெனிஸ் வங்கி ஜெனோவா வங்கிகள் பதினெட்டாம் நூற்றாண்டின் முடிவு வரை இயங்கி வந்தன.இவ் வங்கிகளை நவீன வணிக வங்கிகளின் அங்கீகரிக்கப்பட்ட முன்னோடிகளாக கருதலாம். 1609-ல்  ஆம்ஸ்டர்டாம் வங்கியும் 1690-ல் ஹேம்பர்க் வங்கியும் நிறுவப்பட்ட பிறகு பரிமாற்ற வங்கிகள் வளர்ந்தன. தற்காலத்தில் வணிக  வங்கிகளுக்கு மூன்று முன்னோடிகள் இருந்தார்கள். அவர்களே வணிகர்கள் பொற்கொல்லர்கள் மற்றும் பணம் கடன் கொடுப்பவர்கள் ஆவர். வணிகர்கள் தொலை தூரங்களுக்கு கடன்களை செலுத்துபவர்களாகவும், பொற்கொல்லர்கள் மதிப்புமிக்க உலோகங்களை இருப்பு வைப்பார்களா கவரும், அவற்றை திருடர்களிடமிருந்து பாதுகாப்பலராகவும், பணம் கடன் கொடுப்பவர்கள் தொடர்ந்து கடனளிப்பவர்களாகவும்  பணம் பெறுபவர்களாகவும் கருதப்படுகின்றனர். இவர்கள் மூவரும் காகித உரிமை மூலம் பரிமாற்றம் செய்பவர்களாக இருந்து வந்தனர். இதுவரையிலும் காகித உரிமை மூலம் 100 சதவீதம் பரிவர்த்தனை செய்ததால் பண உருவாக்கம் நடைபெறவில்லை. ஆனால் பிறகு கையில் இருப்பு உள்ள நாணயங்கள் மற்றும் வணிகத்தில் மீதமுள்ள நாணயங்களை விட கூடுதலாக மேலும் கடன்களை வழங்க முடியும் என்பதை உணர்ந்தார்கள். இதன் விளைவாக நவீன துண்டு இருப்பு வங்கி முறை உதயமானது.

பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பொற்கொல்லர்கள்  முக்கிய பங்கு வகித்ததால் இங்கிலாந்தில் வங்கி முறைகளில் வளர்ச்சி ஆரம்பமானது. நவீன வங்கி முறை இங்கிலாந்தில் வளர்ந்த பெருமை இத்தாலியிலிருந்து இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா முழுவதும் இடம்பெயர்ந்த இத்தாலியின் லொம்பாரட்ஸ்யே சாரும். இங்கிலாந்து வங்கி முன்னதாகவே 1694 துவக்கப்பட்ட போதும் கூட்டுப் பங்கு வணிக வங்கி வளர்ச்சி 1833 சட்டத்திற்கு பிறகே தொடங்கியது. 19ஆம் நூற்றாண்டில்தான் உலகின் முன்னணி நாடுகளில் நவீன வங்கி முறை வளர்ச்சி பெற்றது. மற்ற நிதி நிறுவனங்களான சேமிப்பு வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் வட்டி  அமைப்புகள் மற்றும் பலவற்றின் செயல்பாடுகளிலிருந்து நவீன வணிக வங்கிகளின் செயல்பாடுகள் மிகைப்பட்டு வளர்ந்துள்ளன. ஆனால் அவைகள் கொள்கை அமைப்பில் துல்லியமாக மற்றும் நிறுவனங்களிடமிருந்து வேறுபட்டுள்ளன. மற்ற வணிக வங்கிகள் பண அளிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் தேவை வைப்புக்களை கையாளுகின்றன. ஆகையால் வங்கிகள் தேவை வைப்புகளை
நிர்வகிப்பவர்களாகவும் பணம் வழங்குபவராகவும் பிற அரசு சாரா நிறுவனங்களிலிருந்து வேறுபட்டு நிற்கின்றன. அவைகள் பண கையிருப்பின்  அளவில் தன் சக்தியை காட்டுவதோடு மட்டுமல்லாமல் நிதி ஒதுக்கீடு செய்வதன் மூலம் ஒரு அமைப்பில் வளங்களை பயன்படுத்தவும் இயக்கவும் வழி செய்கின்றன.

வணிக வங்கிகளுக்கு வணிகத்தை உருவாக்குவதிலும் சுருக்குவதிலும் மாபெரும் பங்கு உள்ளது ஏனென்றால் வணிக வங்கிகளுக்கு புதுப்பணத்தை உருவாக்குவதற்கும். அதை அழிப்பதற்கும் அபரிமிதமான கொள்திறன் உள்ளது. கடன் வழங்கும் போதும், முதலீட்டு பத்திரங்களை வாங்கும் போதும், தேவை வைய்ப்புகளை உருவாக்கி புதிய பணத்தை உருவாக்கலாம். கடன் பெறுவது முதலீட்டு பத்திரங்களை விற்பது ஆகியவற்றின் மூலம் தேவை வைப்புக்களை நிர்மூலமாக்கலாம் பணம் வங்கிகள் நிகழ்வுகளுக்கு இதயமாகவும், நவீன காகித பண அமைப்பின் மையமாகவும் திகழ்கின்றன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்