சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986ல் இயற்றப்பட்டது. இதன் நோக்கம் சுற்றுச்சூழலை பாதுகாத்து மேம்படுத்துதலாகும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் பொருந்தும். தாவரங்கள், விலங்குகள், மனிதன் மற்றும் உடமைகள் ஆகியவைகள் எவ்விதத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 4 அத்தியாயங்களையும் 26 பிரிவுகளையும் கொண்டுள்ளது.
அத்தியாயம் -1
இதில் சுற்றுச்சூழல், மாசுபடுதல், தீங்கிழைக்கக் கூடிய பொருட்கள் மேலும் பல சொற்கள் பற்றி வரையறுக்கப்பட்டுள்ளன.
அத்தியாயம்-2
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் மத்திய அரசுக்கு உள்ள அதிகாரத்தை பற்றி குறிப்பிடுகிறது. மேலும் இது அலுவலர்களின் நியமனம், அதிகாரம் பற்றி கூறுகிறது. நீர், காற்று மற்றும் மண் ஆய்விற்கான தரநிர்ணயம் பற்றியும், அதிகளவு மாசுபடுத்திகளை அனுமதிக்கக்கூடிய அளவு பற்றியும் நச்சுத்தன்மைவாய்ந்த கழிவுகளை அகற்றும் முறை பற்றியும், தொழிற்சாலை அமைவிடம் பற்றியும் விளக்குகிறது.
அத்தியாயம்-3
இது மாசுபடுதலைத் தவிர்க்கும் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகளைப் பற்றி விளக்குகிறது. எந்தவித மாசுபடுத்தியும் தர நிர்ணய அளவினை விட அதிகரிக்கக்கூடாது என்றும், மைய மற்றும் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரம் பற்றியும், அவை எந்த நேரத்திலும் எந்தவொரு தொழிற்சாலைக்கும் சென்று மாதிரி எடுத்து பரிசோதிக்கலாம் என்றும் அதில் அதிகளவு மாசுபடுத்திகள் தரநிர்ணய அளவினை விட அதிகரித்துருந்தால் அந்த ஸ்தாபனத்தை தண்டிக்கவும், அபராதம் விதிக்கவும் அதிகாரம் உள்ளதை விளக்குகிறது.
தண்டனை
விதியை மீறிபவருக்கு 5 வருடம் சிறை தண்டனை, அபராதம் ஒரு லட்சம் வரை அல்லது ஒரு நாளைக்கு ரூபாய் ஐந்தாயிரம் எனத் தவறினைப் பொருத்து நீட்டிக்கப்படலாம்.
அத்தியாயம்-4
இது பல்வேறு தலைப்புகளில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டி யதை விளக்குகிறது. மேலும் இது சம்பந்தமாக தொடர்புடைய கோரிக்கைகள் மற்றும் செய்திகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று விளக்குகிறது. இந்த அத்தியாயத்தின் படி மைய அரசு இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது கொண்டுவரும் விதிகளை பாராளுமன்றத்தில் முன்னதாகவே சமர்ப்பிக்க வேண்டும்.
0 கருத்துகள்