Ad Code

Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு இயற்கை பிரிவு|பத்தாம் வகுப்பு|சமூக அறிவியல் |மாணவர்களுக்கு ஆசிரியர் கூறவேண்டிய முக்கிய தகவல்கள்

 தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின் தென் முனையில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகும். தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படுகிறது. இம்மாநிலமானது, பரப்பளவில் இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாக மற்றும்  மக்கள்தொகை அடிப்படையில்  இந்தியாவின்  ஆறாவது பெரிய மாநிலமாகத  திகழ்கிறது. உலகின் பழம்பெரும  மொழிகளில்  ஒன்றான தமிழ் மொழி பேசும்  தமிழர் வாழும் பகுதியே தமிழ்நாடு என அழைக்கப்படுகிறது ப்படுகிறது. இதன் தலைநகரமாக சென்னை உள்ளது.



மாணவர்களே புவியியல் பிரிவில் முதல் ஐந்து பாடங்கள் நம் இந்தியாவை பற்றியது... அடுத்து வரும் இரண்டு பாடங்கள் நம் தமிழ்நாட்டைப்மாணவர்களே புவியியல் பிரிவில் முதல் ஐந்து பாடங்கள் நம் இந்தியாவை பற்றியது... அடுத்து வரும் இரண்டு பாடங்கள் நம் தமிழ்நாட்டைப் பற்றியது... இந்தியாவில் ஐந்து பாடங்களில் உள்ள கருத்துக்கள் இங்கு அப்படியே இரு பாடங்களில் வந்து உள்ளது... இந்தியாவின் இயற்கை அமைப்பு... காலநிலை காடுகள்... மண் வகைகள்... வேளாண் உற்பத்திகள்,.. கனிம வளங்கள்... அதனைப் பயன்படுத்தும் தொழிலகங்கள்... அதற்கு பயன்படும் போக்குவரத்துக்கள் என்று விரிவாக பார்த்தோம்... இங்கு அதேபோல் தமிழ்நாட்டைப் பார்க்க போகிறோம். 


பொதுவாக புவியில் சிறந்த குடிமகனாக வழங்குவதற்கு தங்கள் தாய் நாட்டில் உள்ள இயற்கை அமைப்பு மற்றும் அதன் சூழல்களை அறிவது அவசியம்... இதையேதான் அமெரிக்க மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் உங்கள் IT மாணவர்களுக்கு புவியியல் மற்றும் வரலாறுள பகுதியையும் கொஞ்சம் கற்றுக் கொடுங்கள் என்று கூறினார்... அண்ணா பல்கலைக்கழகமும் அதற்கு செவி சாய்த்து ஆலோசனை செய்தது.. பின்னர் அது ஏனோ அப்படியே நின்று விட்டது... ஆகவே தாங்கள்ATLAS ஐ அவ்வப்போது எடுத்து பார்த்து வர வேண்டும்...

தமிழ்நாட்டு அமைவிடம் மற்றும் பரப்பளவு... இந்தியாவின் தென்பகுதியில் அமைந்துள்ளது... கிழக்கில் கோடியக்கரை... மேற்கில் ஆனைமலை... வடக்கில் பழவேற்காடு ஏரி... கீழ் குமரிமுனை... தமிழகத்தின் பரப்பளவு 1,30,058 சதுர கிலோமீட்டர் ஆகும்.. இந்தியாவின் பரப்பளவில் 11 வது பெரிய மாநிலம்... இந்திய பரப்பளவில் சுமார் 4% கொண்டது

தமிழ்நாட்டின் எல்லைகள் மற்றும் அதன் அண்டை மாநிலங்கள் என்று பார்க்கும்போது கிழக்கே வங்காள விரிகுடா மேற்கே கேரளா வடக்கே ஆந்திர பிரதேசம் வடமேற்கே கர்நாடகா தெற்கே இந்திய பெருங்கடல் எல்லைகளாக அமைந்துள்ளன.... குஜராத் மற்றும் ஆந்திர மாநிலத்திற்கு அடுத்தபடியாக மூன்றாவது நீளமான கடற்கரையை கொண்ட மாநிலம்..

இயற்கை அமைப்பு... தீபகற்ப பீடபூமி எனப்படும் தக்காண பீட உமையில் தமிழ்நாடு அமைந்துள்ளது ‌ நிலத் தோற்றத்தின் அடிப்படையில் மேற்கு தொடர்ச்சி மலை கிழக்கு தொடர்ச்சி மலை பீடபூமிகள் கடற்கரை சமவெளிகள் மற்றும் உள்நாட்டு சமவெளிகள் என ஐந்து பெரும் பிரிவுகளைக் கொண்டது

இதில் உள்ள கணவாய்கள் பாலக்காட்டு கணவாய் செங்கோட்டை கணவாய் ஆரல்வாய்மொழி கணவாய் அச்சன்கோவில் கணவாய்..‌ இதில் உள்ள மலைகள் நீலகிரி மலை ஆனைமலை பழனி மலை ஏலக்காய் மலை வருசநாட்டு மழை பொதிகை மலை மற்றும் மகேந்திரகிரி மலை




 மேற்கு தொடர்ச்சி மலை...


இந்திய துணைக்கண்டத்தின் மேற்புறத்தில் அரபிக்கடலுக்கு இணையாக அமைந்துள்ள மலைத்தொடர் ஆகும். மேற்குத்தொடர்ச்சி மலை அரபிக்கடலில் இருந்து வரும் குளிர்ந்த காற்றைத் தடுத்து அதன் மேற்பகுதியில் அமைந்துள்ள கேரளா மற்றும் மேற்குகடற்ரையில் நல்ல மழையைத் தருகின்றது.

ஆனைமலை... கேரளாவிற்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே பாலக்காட்டு கணவாயில் அமைந்துள்ளது... ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறை மலை வாழிடம் ஆழியாறு மற்றும் திருமூர்த்தி அணைகள் உள்ளன.......

பழனி மலை... மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்கு பகுதியாகும்... இங்கு உள்ள சிகரம் வந்த ராவ்... கோடை வாழிடமான கொடைக்கானல் இங்கு தான் உள்ளது...

 ஏலக்காய் மலை.... தமிழ்நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள இ மலைகள் ஏழுமலை குன்றுகள் என அழைக்கப்படுகிறது... ஏலக்காய் அதிகம் விளைவதால் இப் பெயர் ஏற்பட்டது... இங்கு காப்பியும் விளைகின்றது...

நீலகிரி மலை... நாட்டின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது... இங்கு உள்ள சிகரம் தொட்டபெட்டா.... இங்கு உள்ள கோடை வாழிடங்கள் ஊட்டி குன்னூர்.... அரிய வகை தாவரங்கள் மற்றும் பூக்கள் உள்ள மலை... நீலகிரி வரையாடு இங்கு காணப்படுகிறது.

பொதிகை மலை... இம்மலையின் பெரும்பகுதி தென்காசி மாவட்டமாகும்... அகத்தியர் மலை மற்றும் தெற்கு கைலாயம் என்று அழைக்கப்படுகிறது.. இங்குதான் களக்காடு புலிகள் காப்பகம் உள்ளது

மகேந்திரகிரி மலைக்குன்றுகள்... கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களை கொண்டது... இம்மலை தான் மேற்கு தொடர்ச்சி மலையின் தென்பகுதி

வருசநாடு மற்றும் ஆண்டிபட்டி மலைக் குன்றுகள்.... இங்கு மேகமலை கழுகுமலை குரங்கணி மலை சுருளி மற்றும் கும்பக்கரை நீர்வீழ்ச்சிகள் உள்ளன... இம்மலையின் தெற்கு சரிவுகளில் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் மலை அணில் சரணாலயம் உள்ளது

ஜவ்வாது மலை.... இம்மலையில் உள்ள மாவட்டங்கள் திருவண்ணாமலை மட்டும் வேலூர்.... இதில் உள்ள சிகரம் மேல்பட்டு.... நீல நிற சாம்பல் கிரானைட் பாறைகளால் ஆனது.... பழங்கள் மரங்கள்.... மருத்துவ மூலிகைகள்... சந்தன மரங்கள் போன்றவை உள்ளன....... கல்வராயன் மலை..... கல்வராயன் என்ற பெயர் கரலர் என்ற பழங்குடியினர் பெயரில் வந்தது... தமிழ்நாட்டின் மிக முக்கிய மலை.... ஜவ்வாது மட்டும் சேர்வராயன் மலைகளுடன் இணைந்து காவிரி மட்டும் பாலாறு ஆற்றின் வடிநிலப் பகுதியை பிரிக்கிறது..... சேர்வராயன் மலை.... சேலம் நகருக்கு அருகே அமைந்துள்ளது... உள்ளூர் தெய்வமான சேர்வராயன் என்ற பெயரில் வந்தது... இதில் உள்ள சிகரம் சோலைக்கரடு... ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது... ஏற்காடு மலை வாழும் மலைத்தொடரில் அமைந்துள்ளது.

கொல்லிமலை.... நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள சிறிய மலைத்தொடர்... தென்னிந்தியாவின் கிழக்கு கடற்கரைக்கு இணையாகச் செல்லும் மலை... இம்மலையில் உள்ள புனிதத் தலம் அரப்பளீஸ்வரர்... பசுமை மாறாக் காடுகள் மற்றும் சோலைக்காடுகள் அதிகம் உள்ளன... காபி தோட்டங்கள் பழங்கள் பூக்கள் சவுக்கு பண்ணைகள் இங்கு அதிகம் உள்ளன.... பச்சைமலை...... திருச்சி மட்டும் பெரம்பலூர் சேலம் மாவட்டங்களில் உள்ள மலைத்தொடர்... பசுமை தாவரங்கள் அதிகம் உள்ளதால் பச்சை மலை என்று அழைக்கப்படுகிறது... இம்மலையில் பலாப்பழம் நன்றாக விளைகிறது..

 கிழக்கு தொடர்ச்சி மலை... தொடர்ச்சியற்ற மலைத்தொடர்... காரணம் வங்காள விரிகுடாவில் கலக்கும் ஆறுகளால் பிரிக்கப்பட்டுள்ளது..... இதில் உள்ள மலைகள் ஜவ்வாது சேர்வராயன் கல்வராயன் கொல்லிமலை மற்றும் பச்சை மலை.... தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளன......

பீடபூமிகள்.... தமிழ்நாட்டில் உள்ள பீடபூமிகள் மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளுக்கு இடையே அமைந்துள்ளது.... ஏறக்குறைய முக்கோண வடிவில் சுமார் 60 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது... வடமேற்கு பகுதியில் பாரமஹால் பீடபூமியானது தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அமைந்துள்ளது... கோயம்புத்தூர் பீடபூமியானது நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களுக்கு இடையே அமைந்துள்ளது... மோயர் ஆறு இப்பீடபூமியை மைசூர் பீடபூமியில் இருந்து பிரிக்கிறது... மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் ஆறுகள் பவானி நொய்யல் மற்றும் அமராவதி ஆறுகள் இப்பீடபூமியில் பள்ளத்தாக்குகளை உருவாக்கிறது.. மதுரை பீடபூமி மதுரை மாவட்டத்தில் காணப்படுகிறது... இது மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரம் வரை நீண்டுள்ளது இதிலுள்ள ஆறுகள் வைகை மட்டும் தாமிரபரணி....

 சமவெளிகள்.... தமிழ்நாட்டில் காணப்படும் சமவெளிகளை உள்நாட்டு சமவெளிகள் மற்றும் கடற்கரை சமவெளிகள் என்று இரு பிரிவாக பிரிக்கலாம்... பாலாறு பெண்ணையாறு காவிரி மற்றும் தாமிரபரணி ஆறுகள் உள்நாட்டு சமவெளிகளை உருவாக்கி உள்ளது... இதில் பெரும்பாலும் கடலோர மாவட்டங்கள் அமைந்துள்ளது... தமிழ்நாட்டின் கடற்கரை சமவெளியானது சோழமண்டல சமவெளி என அழைக்கப்படுகிறது... இது கன்னியாகுமரி முதல் சென்னை வரை நீண்டு பரவி உள்ளது.... கிழக்கு நோக்கி பாயும் வங்காள விரிகுடா ஆறுகளால் உருவாக்கப்பட்டது... ராமநாதபுரம் வட்டம் தூத்துக்குடி மாவட்டங்களில் கடற்கரைப் பகுதிகளில் உருவாக்கப்பட்ட மணல் குன்றுகள் தேரி என்று அழைக்கப்படுகிறது... இங்கு உள்ள மன்னார் வளைகுடாவில் பவளப்பாறையில் அதிகம் உள்ளன... கடற்கரைகள் என்று பார்க்கும்போது தமிழ்நாட்டில் அழகான சோழமண்டல கடற்கரை... சென்னை மெரினா கடற்கரை... எளியட் கடற்கரை கோவளம் கடற்கரை (காஞ்சிபுரம்) வெள்ளி கடற்கரை ( கடலூர்) மிகவும் முக்கியமானது...



தமிழ்நாடு வடிகால் அமைப்பு.... ஆறுகள்.. ஆறுகள் தமிழ்நாட்டின் உயிர் நாடிகள் ஆகும்.... பல்வேறு ஆறுகள் காணப்பட்டாலும் மிக முக்கியமானது காவிரி பாலாறு பெண்ணை வைகை தாமிரபரணி... இந்த ஆறுகள் பெரும்பாலும் மேற்கு தொடர்ச்சி மலை உற்பத்தியாகி கிழக்கு நோக்கி சமவெளிப் பகுதிகளை உருவாக்கி வங்காள விரிகுடாவில் கலக்கிறது... இவற்றில் தாமிரபரணி ஆறு மட்டும் இரு பருவ காலங்களிலும் மழை பெய்வதால் வற்றாத ஆறாக உள்ளது

 பாலாறு (Palar River) தென்னிந்திய விவசாயத்தின் தாய் ஆறாக விவசாயிகளால் சொல்லப்படுகிறது. இது கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டத்திலுள்ள நந்தி மலையில் உற்பத்தியாகிறது. [1] கர்நாடகத்தில் 93 கிமீ தொலைவும், ஆந்திரப்பிரதேசத்தில் 33 கிமீ தொலைவும் தமிழகத்தில் 222 கிமீ தொலைவும் பாய்ந்து சென்னைக்கு தெற்கே 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வாயலூர் என்னும் இடத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது..

காவிரி ஆறு உற்பத்தியாகும் இடம்

காவிரியாறு கர்நாடக மாநிலத்தில் கூர்க் மாவட்டத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பிரம்மகிரி குன்றுகளில் உள்ள தலைக்காவிரி என்னுமிடத்தில் உற்பத்தியாகிறது.தமிழ்நாட்டில் இது சுமார் 416 கி.மீ நீளத்திற்கு பாய்கிறது.

காவிரி தமிழகம் நுழைதல்

கர்நாடக மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றிற்கு இடையே சுமார் 64 கி.மீ தூரத்திற்கு எல்லையாக காவிரி உள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் என்னுமிடத்தில் நீர்வீழ்ச்சி பள்ளத்தாக்குகளை உருவாக்கி நுழைகின்றது.காவிரி மேட்டூர் அணையாக

சேலம் மாவட்டம் மேட்டூரில் காவிரியின் குறுக்கே ஸ்டான்லி நீர்த்தேக்கம் கட்டப்பட்டு சேகரிக்கப்படுகிறது.


காவிரி துணையாறுகள்

பவானி, நொய்யல், அமராவதி இதன் துணையாறுகள் ஆகும்.

திருமுக்கூடல் என்ற இடத்தில் அமராவதி மற்றும் நொய்யல் ஆறுகள் காவிரியுடன் இணைகின்ற இப்பகுதி "அகன்ற காவிரி” என அழைக்கப்படுகிறது.படுகிறது.


காவிரி இரு கிளையாக பிரிதல்

திருச்சி மாவட்டத்தில் இந்த ஆறு இரண்டு கிளைகளாகப் பிரிந்து வடகிளை கொள்ளிடம் என்றும் தென்கிளை காவிரியாகவும் தொடர்கிறது.இவ்விரு கிளைகள் இணைந்து திருச்சி அருகே ஸ்ரீரங்கம் தீவை உருவாக்குகிறது


காவிரி டெல்டா சமவெளி


இந்த இடத்திலிருந்து காவிரி டெல்டா சமவெளி தொடங்குகிறது.இக்காவிரியின் குறுக்கே கிராண்ட் அணைக்கட்டு எனப்படும் கல்லணை கட்டப்பட்டுள்ளது.காவிரி டெல்டா பகுதிகள் தென்னிந்தியாவின் தோட்டம் என்றழைக்கப்படுகிறது.காவிரி ஆறு கடைசியாக கடலூருக்கு தெற்கே வங்கக்கடலில் கலக்கின்றது.

வைகை


வைகையாறு தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள வருச நாட்டு குன்றுகளின் கிழக்குச் சரிவில் உற்பத்தியாகிறது. இதன் வடிநிலம் சுமார் 7,741ச.கி.மீ பரப்பளவைக் கொண்டது.இப்பரப்பளவு முழுவதும் அமைந்துள்ளது. இது மதுரை, தமிழகத்தில் சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் வழியாகப் பாய்கிறது. இதன் மொத்த நீளம் சுமார் 258 கிலோ மீட்டராகும். இவ்வாற்றின் நீரானது இராமநாதபுரத்தின் பெரிய ஏரி மற்றும் பல சிறிய ஏரிகளில் நிரப்பப்பட்டு பின் ஏரிகளிலிருந்து வெளியேறும் உபரி நீரானது இராமநாதபுரம் அருகில் உள்ள பாக் நீர்ச்சந்தியில் கலக்கிறது.

தென்பெண்ணை ஆறு


தென்னிந்தியாவின் முக்கியமான ஆறுகளில் ஒன்று. கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாபூர் மாவட்டத்தில் உள்ள நந்தி மலையில் (நந்தி துர்க்கம்) பெண்ணை ஆறாக பிறந்து, 430 கிமீ தூரத்தில் பாய்ந்து, இறுதியில் தமிழ்நாட்டின் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. தென்பெண்ணை ஆறு, கர்நாடகா மாநிலத்தில் 112 கிமீ நீளத்திலும், தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் 180 கிமீ நீளத்திலும், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் 34 கிமீ நீளத்திற்கும், விழுப்புரம்,திருக்கோவிலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் 106 கிமீ நீளத்திற்குப் பாய்ந்து, இறுதியில் தமிழ்நாட்டின் கடலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

தாமிரபரணி


தாமிரபரணி எனும் பெயர் தாமிரம் (காப்பர்) மற்றும் வருணி (சிற்றோடைகள்) என்பதிலிருந்து பெறப்பட்டது. இவ்வாறுகளில் கரைந்திருக்கும் செம்மண் துகள்கள் காரணமாக இந்நதியின் நீரானது செந்நிறத் தோற்றத்துடன் காணப்படுகிறது.தாமிரபரணி, அம்பாசமுத்திரம் வட்டம் பாபநாசத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் பொதிகை மலை முகடுகளில் தோன்றுகிறது. திருநெல்வேலி மாவட்டங்களின் மற்றும் வழியே தூத்துக்குடி பாய்ந்து இறுதியில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புன்னைக்காயலுக்கு அருகே வங்கக்கடலில் கலக்கிறது. காரையாறு, சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனாநதி. பச்சையாறு சிற்றாறு மற்றும் இராமநதி ஆகிய இதன் முக்கியத்துணை ஆறுகள் ஆகும். இது தென்னிந்தியாவின் ஒரே வற்றாத நதியாகும்



தமிழ்நாட்டின் காலநிலை கடக ரேகை இந்தியாவை இரு சம பிரிவுகளாக பிரிக்கிறது... தமிழ்நாடு கடற்கரைக்கு தெற்கேயும் பூமத்திய ரேகைக்கு அருகாமையில் இருப்பதால் சூரியனின் கதிர்கள் செங்குத்தாக விழுந்து ஆண்டு முழுவதும் வெப்பநிலை அதிக அளவில் காணப்படுகிறது.. கிழக்கு கடற்கரைப் பகுதி வெப்பமாகவும் மேற்கு மலைப்பாங்கான பகுதி குளிர்ச்சியாகவும் நிலவுகிறது. தமிழ்நாட்டின் பருவ காலங்கள் என்று பார்க்கும்போது ஜனவரி ....பிப்ரவரி மாதம் குளிர்காலம் மார்ச் ...மே கோடை காலம் ஜூன்... செப்டம்பர் தென்மேற்கு பருவக்காற்று காலம் அக்டோபர்.... டிசம்பர் வடகிழக்கு பருவக்காற்று காலம்

குளிர்காலம்.... ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சூரியனின் செங்குத்து கதிர்கள் பூமத்திய ரேகைக்கும் மகர ரேகைக்கும் இடையே விழுவதால் சாய்வான சூரியக்கதிர்களை பெறுகிறது.. இதனால் இம்மாதங்களில் காலநிலை சற்று குளிராக காணப்படுகிறது

கோடைகாலம்.... சூரியனின் வடக்கு நோக்கி நகர்வு மார்ச் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நிகழ்வதால் சூரியனின் செங்குத்து கதிரானது தென்னிந்தியாவில் வருகிறது அதனால் வெப்பநிலையானது படிப்படியாக அதிகரிக்கிறது தமிழகம் கடக ரேகைக்கு தென்பகுதியில் அமைந்திருப்பதால் அதிக வெப்பநிலையை பெறுகிறது

தென்மேற்கு பருவமழை என்பது ஜூன் முதல் செப்டம்பர் வரை நீடிக்கும் மழைக்காலமாகும்.தென்மேற்கு பருவக்காற்று என்பது இந்திய துணைக்கண்டத்தின் முதன்மை மழைக்காலமாகும். தென்மேற்கு பருவமழை கோடை மழைக்காலத்தில் நாடு முழுவதும் பெய்யும்

அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலம் இந்தியத் தீபகற்பத்தில் வடகிழக்கு பருவமழைக் காலம் என்றழைக்கப்படுகின்றது. பின் பருவமழைக் காலம் என்று அழைக்கப்படுவதும் இக்காலமே. தென்னிந்திய கடலோர மாநிலங்கள் அதிக மழை பெறுகிறது... தமிழக விவசாயிகளின் ஜீவநாடி இந்த மழையே

தமிழ்நாட்டின் மண் வகைகள்.... வண்டல் மண்.... ஆறுகளால் படிய வைக்கப்படும் நுண் படிவுகளால் உருவாகும் மண்.. ஆற்று பள்ளத்தாக்குகளில் காணப்படும்.... கரிசல் மண்.... தீப்பாறையகள் சிதைவடைவதன் மூலம் உருவாகும்..இது ரீகர் மண் REGUR SOIL... என அழைக்கப்படுகிறது... இம்மண்ணில் பருத்தி மிளகாய் மல்லி, சோளம் போன்றவை நன்கு வளரும்... மதுரை விருதுநகர் திருநெல்வேலி தென்காசி, தூத்துக்குடி பழனி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் இம்மண் பரந்து காணப்படுகிறது

செம்மண்.... தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவில் செம்மண் இரண்டு மடங்கு பரவுகிறது... புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் அதிகம் காணப்படுகிறது...சரளை மண்.... சரளை மண்ணானது அதில் கரைந்துள்ள சத்துக்கள் நீரினால் அடித்துச் செல்லப்படுவதால் உருவாகிறது ..இது ஒரு வளமற்ற மண்ணாகும். நீலகிரி தர்மபுரி கிருஷ்ணகிரி காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்டங்களில் அதிகம் காணப்படுகிறது... உவர் மண்... தமிழ்நாட்டின் சோழமண்டல கடற்கரை பகுதிகளில் இம்மான் காணப்படுகிறது குறிப்பாக வேதாரண்யம் பகுதிகள் இது பயிரிட உகந்தது அல்ல 

இயற்கை தாவரங்கள்... இயற்கை தாவரம் என்பது புவியில் இயற்கையாக வளரும் தாவரங்களின் தொகுப்பு.... இதனை கட்டுப்படுத்தும் முக்கிய காரணிகள் நிலத்தோற்றம் மண்ணின் தன்மை வெப்பநிலை மற்றும் மழைப்பொழிவு... 1988 தேசிய வனக் கொள்கையின்படி புவிபரப்பில் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு காடுகள் இருக்க வேண்டும்.. ஆனால் தமிழ்நாட்டில் மொத்த காடுகளின் பரப்பளவு இவற்றைவிட மிகக் குறைவாகும்....



மிதவெப்பமண்டல மலைக்காடுகள்:


குறைந்த உயரம் பசுமையான மரங்கள்இக்காடுகள் சோலைக்காடுகள் என அழைக்கப்படுகிறது.ஆனைமலை, நீலகிரி, பழனிமலையில் உள்ள 1000 மீட்டர் உயரமான பகுதிகளிலும் பள்ளத்தாக்குகளிம் காணப்படும்.நீலகிரி. சாம்பா, வெள்ளை லிட்சா, ரோஸ் ஆப்பிள் போன்ற மரங்கள்.

வெப்ப மண்டல இலையுதிர்க் காடுகள்


பசுமைமாறா மற்றும் அரை பசுமை மாறாக்காடுகளின் விளிம்பு பகுதிகளில் காணப்படும்.கோடைகளில் இலைகளை உதிர்த்துவிடும்.30 மீட்டர் உயரம் வளரக்கூடிய மரங்கள்.பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தவை.பருத்திப்பட்டு மரம், இலவம், கடம்பா, தேக்கு, வாகை போன்ற மரங்கள்

மாங்குரோவ் காடுகள்


கடலோரப் பகுதிகள், ஆற்றின் டெல்டாப் பகுதிகளில் காணப்படும்.பசுமையாகவும் தோல் போன்ற இலைகளுடன் காணப்படும்.இத்தாவரங்கள் உவர் நீரில் வளரக்கூடியவை.பிச்சாவரம், வேதாரண்யம், முத்துப்பேட்டை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன.


வெப்பமண்டல முட்புதர்க்காடுகள்


மிகக்குறைவான மழைபெறும் பகுதிகளில் காணப்படும்.பனை, வேம்பு, கருவேலம், சீமைக் கருவேலம் போன்ற மரங்கள்.இராமநாதபுரம் - தர்மபுரி - விருதுநகர் மாவட்டங்கள்.

வன உயிரினங்கள்... காடுகளில் வாழும் விலங்குகள் மற்றும் பறவைகள் வனவிலங்குகள் என்கிறோம்... வன விலங்குகளை பாதுகாக்க தமிழ்நாட்டில் வன விலங்குகள் சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன....

தமிழ்நாட்டிலுள்ள உயிர்க்கோளப் பெட்டகங்கள்


நீலகிரி உயிர்க்கோளப் பெட்டகம்

மன்னார் வளைகுடா உயிர்க்கோளப் பெட்டகம்

அகத்தியர் மலை உயிர்க்கோளப் பெட்டகம்

 தமிழ்நாட்டில் இயற்கை பேரிடர்கள்...

 உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் இயற்கையினால் ஏற்படும் பேரழிவு தான் பேரிடர் எனப்படுகிறது... ஐக்கிய நாடுகள் சபையின் அபாய தேர்வு குறைப்பு அமைப்பானது பேரிடர் கான காரணங்களை முறையாக கண்டறிந்து அதன் தாக்கத்தை பெருமளவு குறைக்கிறது.

நிலச்சரிவு.... மலைகள் அல்லது குன்றுகளின் ஒரு பகுதி அல்லது பாறைகள் சரிந்து விழுதல் நிலச்சரிவு எனப்படும்... நீலகிரி மற்றும் கொடைக்கானல் மலைகள் பெரும் பாதிப்புக்கு வேளச்சேரி விற்கு முன் அறிகுறிகள் தென்பட்டால் அப்பகுதியை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுதல் வேண்டும்... நிலச்சரிவுக்கு பின் வானொலி தொலைக்காட்சி தற்போதைய மொபைல் மூலம் கேட்டு அப்பகுதிக்கு செல்லாமல் அல்லது காயம்பட்டவர்களை மீட்டு அதன்படி நடக்க வேண்டும்

வெள்ளப்பெருக்கு... நம் தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவக்காற்று காலங்களில் வெள்ளப்பெருக்கு பொதுவாக ஏற்படும்.... வெள்ளப்பெருக்குக்கு முன்.. வெளியேறும் வழிகளை தெரிந்து வைத்திருத்தல் வேண்டும் அவசரகால தொலைபேசி எண்கள் செய்திகளை அறிந்து வைத்தல் முக்கிய பொருட்களை உயரமான பகுதிகளில் வைத்தல்... வெள்ளப்பெருக்கின் போது குழந்தைகள் மட்டும் வயதானவர்களை வேகமாகவும் பாதுகாப்பாகவும் வீடுகளின் உயரமான பகுதிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் மின்சாரம் மற்றும் எரிவாயு சாதனங்கள் அனைத்து வைத்து வெளியேற வேண்டும்.. வெள்ளப்பெருக்க்குப்பின் வெள்ளம் வடிந்து விட்டதா என்பதை உறுதி செய்து மின்சார சாதனங்கள் சரியாக உள்ளனவா என்று பார்த்து நம் வீட்டிற்கு செல்ல வேண்டும்

புயலுக்கு முன்னரும் பின்னரும் மேற்கொள்ள வேண்டிய அபாய நேர்வு குறைப்பு நடவடிக்கைகளை எழுதுக. புயலுக்கு முன்னர் நாம் செய்ய வேண்டியவை:


வதந்திகளை நம்பாமல், அமைதியாக, பதற்றமடையாமல் இருத்தல் வேண்டும்.


வானொலி மற்றும் காணொளி பெட்டிகள் மூலம் வானிலைச் செய்திகளை அறிய வேண்டும்.


வீட்டின் விலைமதிப்புள்ள பொருட்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும்.


வீட்டுத் தேவைக்கு அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைத்தல் வேண்டும்.வீட்டுத் தேவைக்கு அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைத்தல் வேண்டும்.


வீட்டு கால்நடைச் செல்வங்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துதல் வேண்டும்.


மின்சாதன பேட்டரிகளுடன் கூடிய வானொலி பெட்டியை வைத்திருத்தல் வேண்டும்.


எல்லாவற்றிலும் மேலாக கடலுக்கு செல்வதைத் தவிர்த்தல் வேண்டும்.


மீன் பிடிப்படகுகளை பாதுகாப்பாக வைத்திருத்தல்வேண்டும்.புயலுக்குப் பின்னர் நாம் செய்ய வேண்டியவை:


புயல் நிவாரண முகாமில் இருப்பின் மறு அறிவுரை வரும்வரை அங்கு தங்கி இருத்தல் வேண்டும்.


மின்சார கம்பிகளைத் தொடாமல் இருத்தல் வேண்டும்.


மின் சாதனங்களைப் பயன்படுத்தாமல் இருத்தல் வேண்டும்.


பாம்பு - விஷப்பூச்சிகளிடம் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும்.


புயலில் சேதாரங்கள் அதிகமாக இருப்பின் உண்மை மதிப்பை அளவிட்டு உரிய அதிகாரிகளிடம் தெரியப்படுத்துதல் வேண்டும்.


*தமிழ்நாடு இயற்கை பிரிவு PPT PDF download 

*தமிழ் நாடு வரைபடம் Download 

*10 th social world map online test 

நன்றி 

மாணவ நண்பன் 

திரு முனீஸ்வரன் 



கருத்துரையிடுக

0 கருத்துகள்