Ad Code

Ticker

6/recent/ticker-posts

கதைகள் வழி திருக்குறள்- பொறாமை அழிவு தரும்



 பவளத் தீவில் முனியன் என்பவன் துணி வெளுக்கும் தொழிலைச் செய்து வந்தான். அரண்மனை துணிகளை அவன் சிறப்பாக வெளுத்தான் இதனால் மகிழ்ந்த அரசர் அவனை பாராட்டி பரிசு வழங்கினார்.


 பக்கத்து வீட்டில் மண் பாண்டங்கள் செய்யும் சுடலை என்பவன் குடியிருந்தான் முனியன் பேரும் புகழும் பெறுவதை பார்த்து பொறாமை கொண்டான். அரசரிடம் வந்த அவன் அரசர் பெருமானே நீங்கள் வெள்ளை யானையில் அமர்ந்து பெருமிதமாக உலா வர வேண்டும் இந்நாட்டு மக்கள் அதை பார்த்து மகிழ வேண்டும் என்றான்.


 வெள்ளை யானையில் அமர்ந்து வந்தால் பெருமையாகத்தான் இருக்கும் வெள்ளை யானைக்கு எங்கே போவது? அரசே! துணி வெளுக்கும் முனியனின் திறமையை நீங்கள் அறிவீர்கள் எப்படிப்பட்ட அழுக்குத் துணியையும் அவன் வெளுத்து விடுவான் உங்கள் பட்டத்து யானையை அவனிடம் தாருங்கள் அதை அழகிய வெள்ளையானையாக்கி தருவான்.


 அதை உண்மை என்று நம்பிய அவர் முனியனை அழைத்தார். முனியா!பட்டத்து யானையை நீ வெள்ளை யானையாக்கி தர வேண்டும் என்றார். அரசே!அது எப்படி முடியும்? என்று தயகத்துடன் கேட்டான் முனியன்.  அது எனக்கு தெரியாது பட்டத்து யானையை நீ வெள்ளை யானையாக்க வேண்டும்.இல்லையேல் உன்னுடைய உயிர் இருக்காது என்று கண்டிப்புடன் சொன்னார்.


 அங்கிருந்த சுடலையை பார்த்தான் அவன் சுடலையின் சூழ்ச்சி என்று புரிந்து கொண்டான். அறிவு நிறைந்த அவன் சுடலையை பழி வாங்க நினைத்தான் அரசே அழுக்குத் துணிகளை நாங்கள் ஒரு பானைக்குள் போடுவோம் பிறகு அந்த பானையை வெள்ளாவி வைப்போம் துணிகளில் உள்ள அழுக்கு போய்விடும் அதேபோல பட்டத்து யானை வெள்ளாவி காட்டினால் வெள்ளை யானையாகி விடும். துணிகளை போடும் அளவு பானைதான் என்னிடம் உள்ளது யானை நுழையும் அளவு பெரிய பானை என்னிடம் இல்லை.


மண்பாண்டங்கள் செய்வதில் சுடலை  திறமைசாலி அவனிடம் யானை நுழையும் அளவு பெரிய பானை செய்து தர சொல்லுங்கள். பானை கிடைத்ததும் பட்டத்து யானையை வெள்ளை யானையாக்கி தருகிறேன் என்றான் அவன்.சுடலையை பார்த்து அவர் உனக்கு 15 நாள் தவணை தருகிறேன் யானை நுழையும் அளவு பெரிய பானை செய்து தர வேண்டும் என்று கட்டளையிட்டார் அவன் சொன்ன எந்த சமானத்தையும் அவர் ஏக்க ஏற்றுக்கொள்ளவில்லை.


 15 நாட்கள் கடினமாக உழைத்தான். அவன் யானை உள்ளே செல்லும் அளவு பெரிய பானை ஒன்று செய்தான். அந்தப் பானைக்குள் யானை  அடியெடுத்து வைத்தது அதன் எடைதாங்காமல் பானை உடைந்து நொறுங்கியது. இதை பார்த்த அரசர் சுடலை முதன்முறை என்பதால் உன்னை மன்னிக்கிறேன் அடுத்து நீ செய்யும் பானை உறுதியாக இருக்க வேண்டும் யானை உள்ளே சென்றால் உடைய கூடாது என்று கட்டளையிட்டார் அவ்வளவு உறுதியான பானையை யாராலும் செய்ய முடியாது என்பது அவனுக்கு புரிந்தது வீடு வந்த அவன் பொறாமை கொண்டு முனியனுக்கு தீங்கு செய்தேன். அந்த பொறாமை என் வாழ்விற்கு உலை வைத்து விட்டதே என்ன செய்வேன் என்று உள்ளம் நொந்து இறந்து போனான்


அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத் தீயுழி உயத்து விடும் 

அழுக்காறு என்ற கொடியவன் செல்வத்தை அழித்து தீமையுள் செலுத்தி விடுவான்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்