Ad Code

Ticker

6/recent/ticker-posts

மூன்றாம் ராஜராஜன் சிறையில் இருந்த இடம்

 “சொக்கப் பல்லவன் வாய் சொல்லும் வன்னிய மணாளன்”.

நீண்டு வளர்ந்தப் பாறை. அதன் ஒரு முனையில், ஆண் யானையின் பிடரியைக் கவ்வி இருக்கிறது, ஒரு ஆண் சிங்கம்.




சிங்கத்தின் கண்கள் உருண்டுத் திரண்டு இருக்கிறது.

அதன் ஒருபக்கப் புருவத்தின் மீதுதான் மேற்காணும் வாசகம் கல்வெட்டாக வெட்டப்பட்டு உள்ளது. இதன் காலம் கி.பி.13ஆம் நூற்றாண்டு!

செஞ்சி அருகே உள்ள அண்ணமங்கலத்தில் செங்காட்டுக் குன்று என்றும் ஆனைமலை என்றும் அழைக்கப்படும் மலையின் மீதுதான் மேற்காணும் சிற்பமும் கல்வெட்டும் காணப்படுகின்றன.



யானை: மூன்றாம் ராஜராஜன்.
அதன் பிடரியைக் கவ்வி நிற்கும் சிங்கம்: கோப்பெருஞ்சிங்கன்.

ஆகா… அழகிய உவமை! அழகானச் சிற்பம்!

மாபெரும் வரலாறு இங்கே அமைதியாக காட்சி அளிக்கிறது!

பாண்டிய மன்னனிடம் தோற்ற சோழப் பெருவேந்தன் மூன்றாம் ராஜராஜன், குந்தள அரசனிடம் ஓடினான்.




தெள்ளாறு அருகே அவனை வழிமறித்த காடவ மன்னன் கோப்பெருஞ்சிங்கன், சோழ வேந்தனையும் அவன் படையினரையும் சிறைபிடித்தான் என்கின்றன வரலாற்றுக் குறிப்புகள்

சிறைபிடிக்கப்பட்ட சோழ மன்னனும் அவனதுப் படை பரிவாரங்களும் அண்ணமங்கலம் மலைக் குகையில் சிறிது காலம் சிறை வைக்கப்பட்டு இருக்கலாம் என்கிறார், அண்ணமங்கலம் அரசு மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியரும் செஞ்சிக் கோட்டை தொல்லியல் விழிப்புணர்வு மன்றச் செயலாளருமான திரு.நா.முனுசாமி அவர்கள்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்