Ad Code

Ticker

6/recent/ticker-posts

School Morning Prayer Activities 3/8/2022

 திருக்குறள்

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

 பொருள்

அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்.

 பழமொழி
எடுப்பார் மழுவை, தடுப்பார் புலியை, கொடுப்பார் அருமை.

பொருள்
அருஞ்செயல் ஆற்றுபவர்கள் உண்டு ஆனால் ஈகைக் குணமுடையோரைக் காணுதல் அரிது.


தமிழ் விளக்கம்

மழு என்பது பழுக்கக் காய்ச்சிய இரும்பு. அதையும் கையால் பிடிப்பவர் உண்டு; புலியைத் தடுப்பார் உண்டு, ஆனால் எல்லோருக்கும் செயலில் எளிதாக உள்ள ஈகைக் குணம் மட்டும் காண்பது முன்சொன்ன அருஞ்செயல் ஆற்றுபவர்களை விட அரிதாக உள்ளது என்பது செய்தி.

 

 பொன்மொழிகள்

தன்னுடைய தைரியம், சுய மரியாதை, தன்னம்பிக்கையை இழக்காமல் இருப்பவனுக்குத் தோல்வி என்ற ஒன்று இருக்க முடியாது.

-ஒரிசன் ஸ்வெட் மார்டென்

 


மிக அதிக நீளமான கடற்கரையைக் கொண்ட தென் மாநிலம் எது?
 ஆந்திரப்பிரதேசம்
 
 
நீதிக் கதைகள்
 
 
 நன்றி ஓடுகளே!
ஒரு காட்டில் ஆமையும், நத்தையும் நண்பர்களாய் இருந்தன. அவை இரண்டுக்கும் நீண்டகாலமாக, ஒரு மனக்குறை இருந்தது. தங்களால் வேகமாக நடக்கவோ, தாவிக் குதித்து ஓடவோ முடியவில்லை என்ற மனக்குறைதான் அது.

ஒருநாள், அவை இரண்டும் நடந்து சென்றுகொண்டிருந்த போது, ஓர் அழகிய வெள்ளை நிற முயல் தாவிக் குதித்து, ஓடி வருதைக் கண்டன.

"முயலே நில்!'' என்றது ஆமை.

முயல் நின்றது.

"நீ எப்படி இவ்வளவு வேகமாய் தாவிக் குதித்து ஓடுகிறாய்?'' என்று கேட்டது நத்தை.

"இது என்ன கேள்வி! உங்களுக்கு இருப்பதுபோல், என் முதுகில் கனமான ஓடு இல்லை. அந்தச் சுமை இல்லாததால், வேகமாக ஓடுகிறேன்!'' என்று சொல்லி விட்டு, முயல் அந்த இரண்டையும் இளக்காரமாகப் பார்த்தது.

"ஓஹோ! எங்களின் வேகக் குறைவுக்கு எங்கள் ஓடுதான் காரணமா?''

"ஆமாம்! நீங்கள் உங்கள் ஓடுகளைக் கழற்றிப் போட்டுவிட்டால், என்னைப் போல் வேகமாக ஓடலாம். வேகமாக ஓடுவதில், ஓர் அலாதியான சுகம் இருக்கிறது தெரியுமா... அனுபவித்துப் பாருங்கள்!'' என்றது முயல்.

ஆமைக்கும், நத்தைக்கும் அந்த இடத்திலேயே தங்கள் முதுகு ஓடுகளைக் கழற்றிப் போட்டுவிட வேண்டும் என்ற ஆவல் பிறந்தது.

அவற்றைக் கழற்ற முயன்றபோது, திடீரென புதர் மறைவில் ஏதோ அசையும் ஓசை கேட்டது.

ஆமையும், நத்தையும் ஆபத்தை உணர்ந்து, தங்கள் ஓடுகளைக் கழற்றும் முயற்சியைக் கைவிட்டன.

சட்டென, புதர் மறைவிலிருந்து ஓரு ஓநாய் வெளிப்பட்டு, முயலை நோக்கிப் பாய்ந்தது.

ஆமையும், நத்தையும், விருட்டென்று தங்கள் உடலை ஓடுகளுக்குள் இழுத்துக் கொண்டு, உயிர் பிழைத்தன.

ஓநாய் முயலைப் பிடித்தது.

சிறிது நேரம் சென்ற பிறகு ஓடுகளை விட்டு வெளியே வந்த ஆமையும், நத்தையும் முயலின் ரத்தத்தைப் பார்த்து, உறைந்து போயின.

தாங்கள் வேகமாய் ஓடுவதைவிட, உயிர் பிழைத்து வாழ்வதே முக்கியமானது என்பதை உணர்ந்தன. தங்கள் எதிரியிடமிருந்து காப்பாற்றிய தங்கள் ஓடுகளுக்கு அவை நன்றிகூறின.

இன்றைய செய்திகள் - 03.08.22 

*தொடர் மழை: வைகை அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு

*அதி கனமழை பெய்ய வாய்ப்பு: கோவை, திண்டுக்கல் உள்பட 4 மாவட்டங்களுக்கு இன்று 'ரெட் அலர்ட்'

*மாலத்தீவு அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு - 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது

*குஜராத்தில் முன்னணி தொழில் நிறுவனத்தில் வருமான வரி சோதனை: ரூ.1,000 கோடி கருப்பு பணம் கண்டுபிடிப்பு

*இந்தியாவில் எத்தனை பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு? - மத்திய மந்திரி மாண்டவியா தகவல்

*கோத்தபய ராஜபக்சேவுக்கு சலுகைகள் எதுவும் வழங்கவில்லை - சிங்கப்பூர் மந்திரி தகவல்

*இங்கிலாந்து வெளியிட்ட விநாயகர் உருவம் பொறித்த தங்க கட்டி ஆன்லைனில் விற்பனை

*3வது டி20 போட்டி: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

Today's Headlines


◆Tamil Nadu Finance Minister PDR Palanivel Thiagarajan has said that the start-up Tamil Nadu project is likely to create over 3 lakh jobs by creating a regional level.


◆Red Alert: Nilgiris, Kanyakumari rushed National Disaster Rescue Force.


◆The 2nd airport of Chennai will be built at Paranthur near Kanchipuram. Union Minister of State for Aviation VK Singh said that the Ministry of Civil Aviation will begin the preliminary work.


◆Prohibition of producing facial and PPE kit equipment without the permission of the Central Drug Control Board.


◆It is reported that Ayman al-Zawahiri, the leader of the al-Qaeda organization, was killed. Reuters news agency reported that the US forces in Afghanistan were killed.


◆NCC players won 22 medals in the state-level shooting competition in Trichy.


◆Master Iniyan, Grand Master of Tamil Nadu won in the international chess competition in Andora.


◆Commonwealth Games: One more medal for India - Harjinder Kaur won the bronze medal

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்