Ad Code

Ticker

6/recent/ticker-posts

ஆசிரியர் தகுதி தேர்வு அடுத்த மாதம் 10- ந்தேதி தொடங்குகிறது

 ஆசிரியர் தகுதி தேர்வு அடுத்த மாதம்
 10- ந்தேதி தொடங்குகிறது

 தேர்வு வாரியம் அறிவிப்பு

சென்னை,ஆக10-ஆசியர் தகுதித் தேர்வு2022  (டெட்) ஆம் ஆண்டுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வுவாரியம் கடந்த மார்ச் மாதம் ஏழாம் தேதி வெளியிட்டது. இதற்கு ஏராளமானோர் விண்ணப்பித்தனர். இதற்கான தாள்-1 முதற்கட்ட தேர்வுகள் வருகிற 25ஆம் தேதி முதல் 31 -ந்தேதி வரையிலான தேதிகளில் கணினி வழியாக நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நிர்வாக காரணங்களினால் அந்த தேதியில் மாற்றம் செய்யப்பட்டு தாள்-1-க்கான தேர்வு அடுத்த மாதம் (செப்டம்பர்)10-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை நடத்தப்பட இருக்கிறது இந்த கணினி வழி தேர்வுக்காக பயிற்சி தேர்வு மேற்கொள்ள விருப்பும் தேர்வர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்ள தேர்வுக்கு முந்தைய 15 நாட்களில் இருந்து வாய்ப்பு வழங்கப்படும்.


அனைத்து தேர்வர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம் இது குறித்த அறிவிப்பு தேர்வு கால அட்டவணை மற்றும் அனுமதி சீட்டு வழங்கும் விவரம் அடுத்த மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் மேற்கண்ட தகவல் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்