கரும்பின ஆய்வியல் அறிஞரான தி.சா.வெங்கடராமன் 1884- ஆம் ஆண்டு சேலத்தில் பிறந்தார். இவரின் தந்தையான சாம்பசிவ ஐயர் ஆவணக் களரியில் அலுவலராக இருந்தார். நல்லொழுக்கமும், உயர் பண்பும் கொண்ட தன் மகன் வேண்டாத கேள்விகளை கேட்டு வெறுப்பைத் தேடிக் கொள்வதை அவர் விரும்பவில்லை. ஆனால் காலம் ஒருநாள் மகனை கணிவாக்கும் என்ற நம்பிக்கையில் இருந்துவிட்டார். தி.சா. வெங்கட்ராமன் திருச்சிராப்பள்ளியில் கல்வி கற்றார். ஆனால் மேல்படிப்பு படிக்கின்றபோது அவருடைய மனமானது பாடப்புத்தகத்தை விடவும் இலக்கியம், தத்துவம், சமயம் ஆகியவற்றில் ஆழ்ந்திருந்தது. அதன் காரணமாக அவர் மெட்ரிகுலேஷன் தேர்வில் முதல் முறையாக தவறிவிட்டார். தி.சா. வெங்கட்ராமனுக்கு இளமையிலேயே பொதுத் தொண்டு செய்கின்ற ஆற்றல் இருந்தது. அவர் கல்வி பயின்று கொண்டிருந்த போதே தன் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு கிராம சேவையில் கவனம் செலுத்தி வரலானார்.
மூடநம்பிக்கைகளை எல்லாம் வெறுத்த தி.சா. வெங்கடராமன் சாதாரண மாணவர்களின் மீது அன்பும் பரிவும் காட்டினார். சங்கம் ஒன்றை ஏற்படுத்தினார். குழந்தை திருமணம் ஒழிப்பு, பெண் கல்வி போற்றுதல், சாதி வேறுபாடு நீக்குதல், ஆகிய கருத்துகளை மக்களிடம் பரப்பினார். பள்ளி படிப்பை முடித்து கல்லூரி படிப்பைத் தொடர்ந்தார். செடி, கொடிகள் மீது இயற்கையாகவே ஆர்வம் கொண்டிருந்த அவர் பி.ஏ. வகுப்பில் பயிரியியலை விருப்பப் பாடமாக எடுத்துக் கொண்டார். பேராசிரியர் இயற்பியலை எடுத்துக் கொள்ளும் படியாக வற்புறுத்தினாலும், தி.சா.வெங்கடராமன் எல்லோராலும் ஒதுக்கப்பட்ட பயிரியலேயே பாடமாக எடுத்துக் கொண்டார். அவர் பி.ஏ. வகுப்பில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். மேலும் தொடர்ந்து படித்தார். எம்.ஏ பட்டம் பெறும் நிலையில் அவர் சென்னை அரசின் பயிர் நூல் வல்லுநரான பார்பர் என்பவருற்கு துணையாக இருந்தார். டாக்டர் பார்பரோ சிறந்த அறிஞர். அதோடு ஆராய்ச்சி மனமுடையவர். அவர் கரும்பைப் பற்றி தெளிவாக அறிந்து வைத்திருந்தார். வேளாண்மைக் கல்லூரியில் பாடம் கற்பிக்கும் வேலையில் அமர்த்தினார். கல்லூரி ஆசிரியர்கள் பலர் வகுப்பறையில் பாடம் சொல்லிக் கொடுத்தவுடன் தன் கடமை முடிந்து விட்டதாக நினைத்துக் கொள்வது வழக்கம். ஆசிரியர் பாடம் சொல்லித்தரும் நேரம் தவிர மற்ற நேரங்களில் மாணவராகவே இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் அவர் உண்மையான ஆசிரியராக இருக்க முடியும். தி.சா.வெங்கட்ராமன், தான் பாடம் சொல்லித் தருகின்ற நேரம் போக, மற்ற நேரத்தில் தன் வீட்டுத் தோட்டத்தில் செடிகளை வளர்த்து ஆராய்ச்சி செய்யும் மாணவராக இருந்தார். அதனையறிந்த டாக்டர் பார்பர் அவரை ஆராய்ச்சித் துறைக்கே மாற்றி விட்டார்.
அக்காலத்தில் எல்லாம் ஆராய்ச்சிக்கு கருவிகள் அதிகம் இருக்காது. ஆனாலும் தி.சா. வெங்கடராமன் மனம் சோர்வடையவில்லை. தானாகவே சில எளிய கருவிகளை உருவாக்கினார். அவற்றை ஆராய்ச்சிக்கு பயன்படுத்திக் கொண்டார்.அக்காலத்தில் மக்கள் கொண்டிருந்த கருத்தான மேல்நாட்டு கருவிகளும், ஐரோப்பிய மூளையை மட்டுமே ஆராய்ச்சி செய்ய முடியும் என்பதை மாற்றினார். கோவை ஆராய்ச்சிப் பண்ணையில் தற்காலிக தலைவராக அமர்ந்த போது, கரும்புக்கு விதை காணும் முயற்சியில் ஈடுபட்டார். டாக்டர் பார்பரும் அதே முயற்சினை முன்பு கொண்டிருந்தார். ஆனால் அவர் தோல்வி கண்டார். அதைக் கண்ட வெங்கட்ராமனோ மனம் தளரவில்லை. அவர் கடினமான முயற்சி செய்து வெற்றி அடைந்தார். இந்த வெற்றியானது கரும்பும் பயிர் முன்னேற்றத்தின் முதல் படியாக இருந்தது. அதன் காரணமாக அவர் இந்தியாவிலேயே முதன்முறையாக கரும்பு நாற்றினை உருவாக்கி வெற்றி கண்டார். பின்னர் அவர் கரும்பு வேர்விடும் முறையினைப் பற்றி ஆராய்ச்சி செய்து பல அரிய உண்மைகளை உணர்த்தினார். பல்லாயிரம் நாற்றுகளில் சிறந்த காற்றைத் தேர்ந்தெடுக்கும் முறையை கண்டறிந்தார்.கரும்பு எப்படி மலர்கிறது என்பதையும் நுட்பமாக உணர்ந்தார். அதிலிருந்து மகரந்தத் தூளைச் சேகரிக்கும் புது முறையை கண்டறிந்தார். வேண்டாத மகரந்தம் மலரில் சேர்வதை தடுக்கும் வழியையும் கண்டுபிடித்தார். அதன் பின்னர் அவர் வேறொரு ஆராய்ச்சியில் இறங்கினார். கரும்பைப் பிற பயிர்களுடன் இணைந்து கலப்பின கரும்பை தயாரிக்கும் பெரும் முயற்சியை மேற்கொண்டார். காட்டுக் கரும்புடன் சாதாரண வேளைக் கரும்பைக் கலப்பு செய்து தரம் வாய்ந்த புதுவகை கரும்பைக் படைத்தார்.
பெரிய வகை கரும்புகளையும், சிறிய வகை கரும்புகளையும் இணைக்கும் முயற்சியில் ஜாவா, ஹவாய் நாடுகள் வெற்றி பெற்றிருந்தன என்றாலும் காட்டு கரும்பைக் கலப்பு செய்யும் முயற்சி, முதல் முறையாக தி.சா.வெங்கடராமனால் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் அவர் மூங்கிலுடன் கரும்பை கலப்பினமாக்கினார். பிற கிளை குடும்பத்தைச் சேர்ந்த மூங்கிலுடன் ஒட்டு செய்து உருவாக்கிய அந்த கரும்பை உலகம் வியந்து பாராட்டியது. அவர் சோளத்துடன் கரும்பை கலந்து புதுவகை கரும்பினங்களை உருவாக்கினார். தி.சா.வெங்கடராமன் வட இந்தியாவில் குறைந்த செலவில் ஆராய்ச்சி பண்ணைகளைத் தோற்றுவித்து வெற்றியுடன் நடத்தினார். தான் உருவாக்கிய கரும்பினங்களை இந்திய நாடு முழுவதும் பரப்பினார். மேலும் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா,கியூபா முதலான பல நாடுகளுக்கும் அவருடைய கரும்புகள் சென்றன.அவர் புதிதாக உண்டாக்கிய கரும்பினங்கள் 80க்கும் மேற்பட்டவையாகும். அவற்றில் கோ210,213,244,284,290,299,311,313,331,419,421,429, முதலிய 13 இனங்கள் சிறந்தவையாகும்.
தி.சா.வெங்கடராமன் கரும்பை பற்றி ஆராய்ச்சி செய்யும் முன் இந்தியாவில் விளைந்த மட்டமான கரும்புகள், மிகுந்த சாரம் உடையனவாக இருந்ததில்லை அவற்றிலிருந்து சர்க்கரை போதுமான அளவுக்குக் கிடைக்கவில்லை. அதன் காரணமாக இந்தியாவில் சர்க்கரை பஞ்சமானது அதிக அளவில் இருந்தது. தி.சா.வெங்கடராமனின் அறிய ஆராய்ச்சியில் இங்கே சிறந்த கரும்புகள் தோன்றின. சர்க்கரைப் பஞ்சமும் விலகியது. ஏழை உழவர்கள் மத்தியில் செல்வாக்கும் உண்டானது. சர்க்கரை உற்பத்தியில் இந்தியாவும் முதலிடம் பெற்றது. அறிஞர் தி.சா. வெங்கடராமன் கோவைப்ப பண்ணையில் புகழ்பெற்ற புதுவகைக் கருப்புகளையும் படைத்து, உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் அமைதியாக அறிமுகப்படுத்தினார். 1927 ஆம் ஆண்டு அரசுப் பிரதிநிதியான இர்வின் பிரபு இவருடைய ஆராய்ச்சிகளை கண்டு வியப்படைந்தார்.தி.சா. வெங்கட்ராமன் சர்,பகதூர் போன்ற பட்டங்கள் பெற்று புகழ்பெற்றார்.
மூடநம்பிக்கைகளை எல்லாம் வெறுத்த தி.சா. வெங்கடராமன் சாதாரண மாணவர்களின் மீது அன்பும் பரிவும் காட்டினார். சங்கம் ஒன்றை ஏற்படுத்தினார். குழந்தை திருமணம் ஒழிப்பு, பெண் கல்வி போற்றுதல், சாதி வேறுபாடு நீக்குதல், ஆகிய கருத்துகளை மக்களிடம் பரப்பினார். பள்ளி படிப்பை முடித்து கல்லூரி படிப்பைத் தொடர்ந்தார். செடி, கொடிகள் மீது இயற்கையாகவே ஆர்வம் கொண்டிருந்த அவர் பி.ஏ. வகுப்பில் பயிரியியலை விருப்பப் பாடமாக எடுத்துக் கொண்டார். பேராசிரியர் இயற்பியலை எடுத்துக் கொள்ளும் படியாக வற்புறுத்தினாலும், தி.சா.வெங்கடராமன் எல்லோராலும் ஒதுக்கப்பட்ட பயிரியலேயே பாடமாக எடுத்துக் கொண்டார். அவர் பி.ஏ. வகுப்பில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். மேலும் தொடர்ந்து படித்தார். எம்.ஏ பட்டம் பெறும் நிலையில் அவர் சென்னை அரசின் பயிர் நூல் வல்லுநரான பார்பர் என்பவருற்கு துணையாக இருந்தார். டாக்டர் பார்பரோ சிறந்த அறிஞர். அதோடு ஆராய்ச்சி மனமுடையவர். அவர் கரும்பைப் பற்றி தெளிவாக அறிந்து வைத்திருந்தார். வேளாண்மைக் கல்லூரியில் பாடம் கற்பிக்கும் வேலையில் அமர்த்தினார். கல்லூரி ஆசிரியர்கள் பலர் வகுப்பறையில் பாடம் சொல்லிக் கொடுத்தவுடன் தன் கடமை முடிந்து விட்டதாக நினைத்துக் கொள்வது வழக்கம். ஆசிரியர் பாடம் சொல்லித்தரும் நேரம் தவிர மற்ற நேரங்களில் மாணவராகவே இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் அவர் உண்மையான ஆசிரியராக இருக்க முடியும். தி.சா.வெங்கட்ராமன், தான் பாடம் சொல்லித் தருகின்ற நேரம் போக, மற்ற நேரத்தில் தன் வீட்டுத் தோட்டத்தில் செடிகளை வளர்த்து ஆராய்ச்சி செய்யும் மாணவராக இருந்தார். அதனையறிந்த டாக்டர் பார்பர் அவரை ஆராய்ச்சித் துறைக்கே மாற்றி விட்டார்.
அக்காலத்தில் எல்லாம் ஆராய்ச்சிக்கு கருவிகள் அதிகம் இருக்காது. ஆனாலும் தி.சா. வெங்கடராமன் மனம் சோர்வடையவில்லை. தானாகவே சில எளிய கருவிகளை உருவாக்கினார். அவற்றை ஆராய்ச்சிக்கு பயன்படுத்திக் கொண்டார்.அக்காலத்தில் மக்கள் கொண்டிருந்த கருத்தான மேல்நாட்டு கருவிகளும், ஐரோப்பிய மூளையை மட்டுமே ஆராய்ச்சி செய்ய முடியும் என்பதை மாற்றினார். கோவை ஆராய்ச்சிப் பண்ணையில் தற்காலிக தலைவராக அமர்ந்த போது, கரும்புக்கு விதை காணும் முயற்சியில் ஈடுபட்டார். டாக்டர் பார்பரும் அதே முயற்சினை முன்பு கொண்டிருந்தார். ஆனால் அவர் தோல்வி கண்டார். அதைக் கண்ட வெங்கட்ராமனோ மனம் தளரவில்லை. அவர் கடினமான முயற்சி செய்து வெற்றி அடைந்தார். இந்த வெற்றியானது கரும்பும் பயிர் முன்னேற்றத்தின் முதல் படியாக இருந்தது. அதன் காரணமாக அவர் இந்தியாவிலேயே முதன்முறையாக கரும்பு நாற்றினை உருவாக்கி வெற்றி கண்டார். பின்னர் அவர் கரும்பு வேர்விடும் முறையினைப் பற்றி ஆராய்ச்சி செய்து பல அரிய உண்மைகளை உணர்த்தினார். பல்லாயிரம் நாற்றுகளில் சிறந்த காற்றைத் தேர்ந்தெடுக்கும் முறையை கண்டறிந்தார்.கரும்பு எப்படி மலர்கிறது என்பதையும் நுட்பமாக உணர்ந்தார். அதிலிருந்து மகரந்தத் தூளைச் சேகரிக்கும் புது முறையை கண்டறிந்தார். வேண்டாத மகரந்தம் மலரில் சேர்வதை தடுக்கும் வழியையும் கண்டுபிடித்தார். அதன் பின்னர் அவர் வேறொரு ஆராய்ச்சியில் இறங்கினார். கரும்பைப் பிற பயிர்களுடன் இணைந்து கலப்பின கரும்பை தயாரிக்கும் பெரும் முயற்சியை மேற்கொண்டார். காட்டுக் கரும்புடன் சாதாரண வேளைக் கரும்பைக் கலப்பு செய்து தரம் வாய்ந்த புதுவகை கரும்பைக் படைத்தார்.
பெரிய வகை கரும்புகளையும், சிறிய வகை கரும்புகளையும் இணைக்கும் முயற்சியில் ஜாவா, ஹவாய் நாடுகள் வெற்றி பெற்றிருந்தன என்றாலும் காட்டு கரும்பைக் கலப்பு செய்யும் முயற்சி, முதல் முறையாக தி.சா.வெங்கடராமனால் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் அவர் மூங்கிலுடன் கரும்பை கலப்பினமாக்கினார். பிற கிளை குடும்பத்தைச் சேர்ந்த மூங்கிலுடன் ஒட்டு செய்து உருவாக்கிய அந்த கரும்பை உலகம் வியந்து பாராட்டியது. அவர் சோளத்துடன் கரும்பை கலந்து புதுவகை கரும்பினங்களை உருவாக்கினார். தி.சா.வெங்கடராமன் வட இந்தியாவில் குறைந்த செலவில் ஆராய்ச்சி பண்ணைகளைத் தோற்றுவித்து வெற்றியுடன் நடத்தினார். தான் உருவாக்கிய கரும்பினங்களை இந்திய நாடு முழுவதும் பரப்பினார். மேலும் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா,கியூபா முதலான பல நாடுகளுக்கும் அவருடைய கரும்புகள் சென்றன.அவர் புதிதாக உண்டாக்கிய கரும்பினங்கள் 80க்கும் மேற்பட்டவையாகும். அவற்றில் கோ210,213,244,284,290,299,311,313,331,419,421,429, முதலிய 13 இனங்கள் சிறந்தவையாகும்.
தி.சா.வெங்கடராமன் கரும்பை பற்றி ஆராய்ச்சி செய்யும் முன் இந்தியாவில் விளைந்த மட்டமான கரும்புகள், மிகுந்த சாரம் உடையனவாக இருந்ததில்லை அவற்றிலிருந்து சர்க்கரை போதுமான அளவுக்குக் கிடைக்கவில்லை. அதன் காரணமாக இந்தியாவில் சர்க்கரை பஞ்சமானது அதிக அளவில் இருந்தது. தி.சா.வெங்கடராமனின் அறிய ஆராய்ச்சியில் இங்கே சிறந்த கரும்புகள் தோன்றின. சர்க்கரைப் பஞ்சமும் விலகியது. ஏழை உழவர்கள் மத்தியில் செல்வாக்கும் உண்டானது. சர்க்கரை உற்பத்தியில் இந்தியாவும் முதலிடம் பெற்றது. அறிஞர் தி.சா. வெங்கடராமன் கோவைப்ப பண்ணையில் புகழ்பெற்ற புதுவகைக் கருப்புகளையும் படைத்து, உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் அமைதியாக அறிமுகப்படுத்தினார். 1927 ஆம் ஆண்டு அரசுப் பிரதிநிதியான இர்வின் பிரபு இவருடைய ஆராய்ச்சிகளை கண்டு வியப்படைந்தார்.தி.சா. வெங்கட்ராமன் சர்,பகதூர் போன்ற பட்டங்கள் பெற்று புகழ்பெற்றார்.
0 கருத்துகள்