உண்டி வில்லின் உதவியோடு ரத்தம் சிந்தாமல் நாட்டைக் கைப்பற்றிய மன்னன்!
முல்தான் பிரதேசத்தின் நிர்வாகத்தை ஏற்றிருந்த மூத்த மகன் ஆர்காலிகான் நல்ல வீரர். அவரை உடனடியாக ராணி அழைத்திருந்தால் அலாவுதீனைச் சற்றேனும் சமாளித்திருக்கலாம். ஆனால், தன் செல்வாக்கு போய்விடுமோ என்று ராணி அச்சபட்டாரோ என்னவோ, ஒரு குட்டிப்பையன் தலையில் அசாதாரண சூழ்நிலையில் மகுடம் ஏறியது. தொடர்ந்து தன் படை வீரர்களைப் பார்த்து," அந்தத் துரோகி அலாவுதீனை விரட்டி அடியுங்கள்" என்று விஷயம் புரியாமல் ஆணையிட்டால் ராணி முல்லிக் ஜஹான். எதிர்க்கப் போகிறார்கள் என்று தகவல் வந்தவுடன் "எல்லோரையும் வெட்டித் தள்ளிவிட்டு அரண்மனைக்குள் செல்வோம் சுல்தான்" என்று அலாவுதீன் தளபதிகள் பரபரத்தனர். "அவசரம் வேண்டாம். அரண்மனைக்குள்ளே மந்திரி பிரதானிகளும் வெளியே மக்களும் நம்மீது ஏகமான எரிச்சலில் இருக்கிறார்கள். இத்தனை வெறுப்புக்கு நடுவே அரண்மனைக்குள் போய் நான் நிம்மதியாக தூங்க முடியாது. எதற்கும் கூடராம் அமைத்து ஓய்வுவெடுப்போம். வேடிக்கை பாருங்கள். வாளை உயர்த்தவேண்டிய அவசியம் இருக்காது என்றே நினைக்கிறேன்" என்றார் அலாவுதீன் விஷமப் புன்னகையோடு. உடனடியாக கூடாரங்கள் பூத்தன. அமரிக்கையாக அமர்ந்து மற்றவர்களுடன் மதுக்கோப்பையுடன் சிறிது நேரம் ஓய்வெடுத்து அலாவுதீன் தன் மெய்க்காவலனை அழைத்து "தங்க நாணயங்கள், நகைகள், வைர, வைடூரியங்கள் கொண்ட நூற்றுக்கணக்கான மூட்டைகளில் ஒன்றில் தங்க உருண்டைகள் இருக்கும். அந்த மூட்டையைக் கொண்டுவா. கூடவே ஒரு உண்டி வில்!"என்று ஆணை பிறப்பித்ததைக் கண்டு தளபதிகள் ஒன்றும்புரியாமல் விழித்தனர். பிறகு தான் அந்த அதிசயம் நடந்தது!
ஒரு மூட்டையைத் திறக்க செய்த அலாவுதீன் ஒவ்வொரு தங்க உருண்டையாக எடுத்தார். அவற்றை உண்டு வில்லில் பொருத்தி அரண்மனையை நோக்கி எய்ய ஆரம்பித்தார். அரண்மனை படைவீரர்கள் மத்தியிலும் மக்கள் பகுதியிலும் 'விர்'ரென்று தங்க உருண்டைகள் ஜொலித்தவாறு பறந்து சென்று விழுந்தன. சில வினாடிகளில் எதிர் தரப்பில் களேபரம்! வாட்களை வீசி எறிந்துவிட்டு எதிரிநாட்டு படை வீரர்கள் ஓடி வந்து தங்க உருண்டைகளை பொறுக்க ஆரம்பித்தார்கள். மக்களும் ஆரவாரத்துடன் இந்த சேகரிப்பில் சேர்ந்து கொண்டனர். "வந்திருப்பவர் எதிரியல்ல, வள்ளல்!" என்ற செய்தி பரவியது ஒட்டுமொத்தமாக எதிரிப்படை அலாவுதீன் பக்கம் கட்சி மாறியது.
உரிக்கப்பட்ட தோலையும் வீணாக்காமல் வைக்கோல் வைத்து தைத்து கோட்டை உச்சியில் தொங்கவிட்டார்." கலவரம் செய்ய நினைப்பவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதனால்தான் இப்படி!" என்பது முகமது பின் துக்ளக் தந்த விளக்கம். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்துதான் இந்தியாவின் மையத்திற்கு தலைநகரை மாற்றும் யோசனையும் சுல்தானுக்கு தோன்றியதாக கூறப்படுகிறது.
முல்தான் பிரதேசத்தின் நிர்வாகத்தை ஏற்றிருந்த மூத்த மகன் ஆர்காலிகான் நல்ல வீரர். அவரை உடனடியாக ராணி அழைத்திருந்தால் அலாவுதீனைச் சற்றேனும் சமாளித்திருக்கலாம். ஆனால், தன் செல்வாக்கு போய்விடுமோ என்று ராணி அச்சபட்டாரோ என்னவோ, ஒரு குட்டிப்பையன் தலையில் அசாதாரண சூழ்நிலையில் மகுடம் ஏறியது. தொடர்ந்து தன் படை வீரர்களைப் பார்த்து," அந்தத் துரோகி அலாவுதீனை விரட்டி அடியுங்கள்" என்று விஷயம் புரியாமல் ஆணையிட்டால் ராணி முல்லிக் ஜஹான். எதிர்க்கப் போகிறார்கள் என்று தகவல் வந்தவுடன் "எல்லோரையும் வெட்டித் தள்ளிவிட்டு அரண்மனைக்குள் செல்வோம் சுல்தான்" என்று அலாவுதீன் தளபதிகள் பரபரத்தனர். "அவசரம் வேண்டாம். அரண்மனைக்குள்ளே மந்திரி பிரதானிகளும் வெளியே மக்களும் நம்மீது ஏகமான எரிச்சலில் இருக்கிறார்கள். இத்தனை வெறுப்புக்கு நடுவே அரண்மனைக்குள் போய் நான் நிம்மதியாக தூங்க முடியாது. எதற்கும் கூடராம் அமைத்து ஓய்வுவெடுப்போம். வேடிக்கை பாருங்கள். வாளை உயர்த்தவேண்டிய அவசியம் இருக்காது என்றே நினைக்கிறேன்" என்றார் அலாவுதீன் விஷமப் புன்னகையோடு. உடனடியாக கூடாரங்கள் பூத்தன. அமரிக்கையாக அமர்ந்து மற்றவர்களுடன் மதுக்கோப்பையுடன் சிறிது நேரம் ஓய்வெடுத்து அலாவுதீன் தன் மெய்க்காவலனை அழைத்து "தங்க நாணயங்கள், நகைகள், வைர, வைடூரியங்கள் கொண்ட நூற்றுக்கணக்கான மூட்டைகளில் ஒன்றில் தங்க உருண்டைகள் இருக்கும். அந்த மூட்டையைக் கொண்டுவா. கூடவே ஒரு உண்டி வில்!"என்று ஆணை பிறப்பித்ததைக் கண்டு தளபதிகள் ஒன்றும்புரியாமல் விழித்தனர். பிறகு தான் அந்த அதிசயம் நடந்தது!
ஒரு மூட்டையைத் திறக்க செய்த அலாவுதீன் ஒவ்வொரு தங்க உருண்டையாக எடுத்தார். அவற்றை உண்டு வில்லில் பொருத்தி அரண்மனையை நோக்கி எய்ய ஆரம்பித்தார். அரண்மனை படைவீரர்கள் மத்தியிலும் மக்கள் பகுதியிலும் 'விர்'ரென்று தங்க உருண்டைகள் ஜொலித்தவாறு பறந்து சென்று விழுந்தன. சில வினாடிகளில் எதிர் தரப்பில் களேபரம்! வாட்களை வீசி எறிந்துவிட்டு எதிரிநாட்டு படை வீரர்கள் ஓடி வந்து தங்க உருண்டைகளை பொறுக்க ஆரம்பித்தார்கள். மக்களும் ஆரவாரத்துடன் இந்த சேகரிப்பில் சேர்ந்து கொண்டனர். "வந்திருப்பவர் எதிரியல்ல, வள்ளல்!" என்ற செய்தி பரவியது ஒட்டுமொத்தமாக எதிரிப்படை அலாவுதீன் பக்கம் கட்சி மாறியது.
மனித உடலைத் துண்டாக்கி வாணலியில் எண்ணையில் போட்டு வறுத்து எடுத்த மன்னன்!
ஹைதராபாத் அருகில் குல்பார்கா பகுதியில் கவர்னராக ஆட்சி புரிந்து வந்த முகமது பின் துக்ளக்கின் அத்தை மகன் பஹாவுதீன் என்பவர் டெல்லி ஆட்சியை எதிர்த்து கிளர்ச்சியில் இறங்கினார். உடனே துக்ளக் படை ஒன்று கிளம்பி சென்றது, பஹாவுதீனை சிறைப்பிடித்தது. தேவகிரில் இருந்த டெல்லி சுல்தானின்முன் நிறுத்தினார்கள். 'துக்ளக் கோபம்' பற்றி சொல்லவேண்டுமா? கைதியாக நின்ற பஹாவுதீன் உடைகள் கழற்றப்பட்டுக் கசையடிகள் தரப்பட்டன. மனிதர் ரத்த விளாறாக ஆன பிறகு, உயிரோடு பஹாவுதீனின் தோல் உரிக்கப்பட்டது. பிறகு அவருடைய உடலை துண்டாக்கி, வாணலியில் எண்ணெயில் போட்டு வறுத்து எடுத்து பஹாவுதீன் மனைவி, குழந்தைகள், மற்றும் குடும்பத்தினருக்குப் பரிமாறப்பட்டு பலவந்தமாக உண்ணச் செய்தார் சுல்தான்!உரிக்கப்பட்ட தோலையும் வீணாக்காமல் வைக்கோல் வைத்து தைத்து கோட்டை உச்சியில் தொங்கவிட்டார்." கலவரம் செய்ய நினைப்பவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதனால்தான் இப்படி!" என்பது முகமது பின் துக்ளக் தந்த விளக்கம். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்துதான் இந்தியாவின் மையத்திற்கு தலைநகரை மாற்றும் யோசனையும் சுல்தானுக்கு தோன்றியதாக கூறப்படுகிறது.
2 கருத்துகள்
அறியப்படாத வரலாற்று செய்திகள்.நன்றி.இதுபோன்ற வரலாற்று செய்திகளை பதிவு செய்க.
பதிலளிநீக்குநன்றி
பதிலளிநீக்கு