Ad Code

Ticker

6/recent/ticker-posts

நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது எவ்வாறு?


ஒரு பொருளை விலை கொடுத்து வாங்கியவர் விலையின் ஒரு பகுதியை கொடுத்து மீதி பிறகு தருவதாக கூறியவர்- மருத்துவம், தொலைபேசி, போக்குவரத்து, மின்சாரம் போன்ற கட்டண சேவைகளை பெறுபவர்- இவர்கள் எல்லாம் நுகர்வோர் என்று அழைக்கப்படுவார்கள். பணம் கொடுத்து விலைக்கு வாங்கிய பொருளின் தரம், அளவு குறைவாக இருந்தாலோ, நிர்ணயிக்கப்பட்ட விலையில் இருந்து அதிக விலை வசூலித்தாலோ, முறையற்ற வர்த்தக நடவடிக்கைகளால் பாதிக்கப்படும்போது சம்பந்தப்பட்டவர் உரிய பரிகாரம், நஷ்டஈடு கேட்டு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். நுகர்வோர் வழக்கு தாக்கல் செய்வதற்கான காரணம் ஏற்பட்ட நாளில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும். தகுந்த ஆதாரங்கள் இருந்தால் இந்த கால வரம்பை நுகர்வோர் நீதிமன்றம் தளர்த்தும்.
வழக்கு தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட நுகர்வோரின் பெயர், விலாசம், எதிர்மனுதாரர் பெயர், விலாசம், எப்பொழுது, எங்கு, எப்படி புகாரில் காணும் விவரங்கள் நிகழ்ந்தது. புகாரும் ஆதரவாக உள்ள ஆவணங்கள். பெற விரும்பும் பரிகாரம் என்ன என்ற விவரங்களுடன் மனு எழுதி நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு தாக்கல் செய்ய கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.

5 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் அல்லது சேவைக்கு இழப்பீடு கேட்க மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்திலும், 5 லட்சம் ரூபாயில் இருந்து 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் அல்லது சேவைக்கு இழப்பீடு கேட்டு மாநில நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்திலும், 20 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள பொருட்கள் அல்லது சேவைக்கு இழப்பீடு கேட்க தேசிய நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்திலும் வழக்கு தொடர வேண்டும்.

நீதிமன்றத்தை நாடுவதன் மூலம் நுகர்வோர் அதற்குரிய பரிகாரங்களை பெற முடியும். நுகர்வோர் நீதிமன்ற தீர்ப்பை எதிர் மனுதாரர் நிறைவேற்ற தவறும் பட்சத்தில் ஒரு மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையோ அல்லது 2000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதமோ விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. அதே நேரத்தில் நுகர்வோர் பொய்யான புகாரை தாக்கல் செய்தால் புகார் மனு தள்ளுபடியாவதுடன். மனதார் செலவுத் தொகையை எதிர் மனுதாரருக்கு பத்தாயிரம் ரூபாய் வரை கொடுக்க நேரிடும். நுகர்வோர் குறை தீர்க்க மாவட்டம் தோறும் மாவட்ட நுகர்வோர் குறை தீர்ப்பு நீதிமன்றம் உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்