Ad Code

Ticker

6/recent/ticker-posts

சிறப்பு வாய்ந்த சனிப்பிரதோஷம்

 

னிக்கிழமையில் வரும் பிரதோஷம் "சனி பிரதோஷம்" என்று அழைக்கப்படுகிறது. இந்த சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷம் அனைத்து கோவில்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது. இந்த சனி பிரதோஷம் சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே பிரதோஷ நேரம் சனிக்கிழமை அன்று வரும்போது சனி பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது.இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷத்தன்று எவ்வாறு விரதம் இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.


பிரதோஷ நேரம் என்பது மாலை 4:30 மணி முதல் 6 மணி வரையான நேரம் ஆகும் .திரியோதசி திதியில்தான் பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை பிரதோஷ தினம் வரும். ஈசனையும், நந்தியையும் வழிபடும் இந்த தினம் சிறப்புக்குறியது.


 உலகைக் காக்கும் பொருட்டு நன்மையை நமக்குத் தந்து. தீமையான விஷத்தை சிவபெருமான் ஏற்றுக்கொண்டார். அவர் உண்ட விஷம் உடலில் இறங்காமல், கழுத்திலேயே நின்றது . அதனால் அவரது கழுத்து நீல நிறமாக மாறியது அதனால்தான் அவர் "நீலகண்டர்" என்று அழைக்கப்பட்டார் 


விஷத்தின் வீரியத்தில் சற்று மயங்கி, பின்னர் விழித்து நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே நடனமாடிய நேரத்தைதான் நாம் பிரதோஷ நேரமாக குறித்து வழிபாடு செய்கிறோம். 11-ம் பிறையாகிய ஏகாதேசியில் ஈசன் விஷம் உண்டார், 12 ஆம் பிறையாகிய துவாதசியில் தேவர்களுக்கு காட்சி தந்தார். 13-ம் பிறையாகிய திரயோதசி அன்று மாலை ,பிரதோஷ காலத்தில் நடனம் புரிந்தார். இந்த நிகழ்வு நடந்தது ஒரு சனிக்கிழமை என்பதால்,சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்புக்குரியதாக பார்க்கப்படுகிறது.


 பிரதோஷ தினத்தில் அதிகாலையில் நீராடி திருநீறு அணிந்து "நமச்சிவாய" என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை ஓதியபடி உபவாசம் இருக்க வேண்டும். அன்று காலை முதல் பிரதோஷம் முடியும் வரை உணவைத் தவிர்த்து பிரதோஷ தரிசனம் முடித்து பிரசாதம் உண்டு விரதம் முடிக்க வேண்டும். பின்னர் இரவு உணவு சாப்பிடலாம். பிரதோஷ காலத்தில் பார்வதியுடன் கூடிய சந்திரசேகரன் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதை பார்க்கலாம். முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராயணத்தையும், இரண்டாம் சுற்றில் செய்யப்படும் திருமுறை பாராயணத்தையும், மூன்றாம் , சுற்றில் நாதஸ்வர இன்னிசையும் வலம் வந்தபடி கேட்க வேண்டும்.


 பொதுவாக பிரதோஷ தினத்தில் இவனை முப்பத்து முக்கோடி தேவர்கள் பிரம்மா, விஷ்ணு  இவருக்கெல்லாம் வணங்கி ஆசி பெறுவதாக ஐதீகம். எனவே அந்த சமயத்தில் நாமும் வணங்கி நம் துன்பங்களை அடியோடு போக்கிக்கொள்ள பிரதோஷ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். எத்தனை பெரிய துன்பமாக இருந்தாலும் பிரதோஷ களத்தில் விரதம் இருந்து காராம் பசுவின் கறந்தக் பாலை கொண்டு சிவனையும், நந்திப்பகாவனையும் அபிஷேகம் செய்து, வில்வ இலை, சங்கு பூவை வைத்து வழிபட்டால் பூர்வ ஜென்ம கர்ம வினைகளும்   நாம் செய்த பாவங்களும் நீக்கி சிறப்பான பலன் கிடைக்கும். ஒரு சனிப்பிரதோஷத் தன்று சிவாலயம் சென்றால், ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்று வந்த புண்ணியம் கிடைக்கும். சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும். 


பிரதோஷ வழிபாடும் பலன்களும் ......

*பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும், வறுமை விலகும், நோய்கள் நீங்கும், சகல காரியங்களை வெற்றி கிடைக்கும் 

*பிரதோஷ விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவன் அருள் கிடைக்கும். 

*சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உந்த நேரம் பிரதோஷ நேரம் தான்.

*பிரதோஷ வழிபட்டு தொடர்ந்து செய்து வந்தால் மறுமையிலும் பலன்கள் கிடைக்கும்.

*ஆவணி, கார்த்திகை ஆகிய மாதங்களில் பிரதோஷ கால விரதம் தொடங்குவது சிறந்தது. 

*பிரதோஷ நேரத்தில் சிவாலயம் சென்று பூஜையில் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்