Ad Code

Ticker

6/recent/ticker-posts

நடுகல் என்னும் நன்றி மறவாப் பண்பாடு|பகுதி 1

 


மக்களோடு மக்களுக்காக வாழ்ந்து, நாட்டுக்காகவும்,சமூகத்திற்க்காகவும், தனது இன்னுயிரை ஈந்த வீரர்களை, காலம் கடந்தும் நினைவு கூற வேண்டுமென பழங்கால தமிழர்கள் எண்ணினர்.இதற்காக போர்களில் விழுப்புண் பட்டு மடியும் வீரனுக்காக, அவனது வீரத்தை போற்றுகின்ற வகையிலும், அவனது தியாகத்தினை மதிக்கின்ற வகையிலும் கல் ஒன்றினை நட்டு,அதனை வழிபடுவது தமிழரின் மரபாக இருந்துள்ளது. இவை 'வீரன்கல், வீரக்கல், நடுக்கல், நினைவுகல் என்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றன.

நடுகல் அமைப்பு 

நடுகற்களில் வீரனின் உருவம், பெயர், நடுக்கல் எடுக்கப்பட்ட ஆண்டு ,யாருடைய ஆட்சிக்காலம், வீரனது அரும்பெருஞ் செயல் போன்ற குறிப்புகள் பெரும்பாலும் இருப்பதை காண முடிகிறது. இலக்கியத் தரவுகளையும், நடு கற்களில் காணப்படும் உருவங்களையும், எழுத்துகளையும் ஆராய்கின்றபோது, ஆகோள் புரிந்தோ(ஆதிரை கவரவோ,மீட்கவோ) ,கொடிய விலங்குகளுடன் போரிட்டு, தான் சார்ந்திருக்கும் சமூகத்திற்காக இறக்கும் வீரனுக்கே நடுக்கல் எழுப்பப்பட்டுள்ளது.


 நடுகற்கள் இருவகை;

  • சிற்பம் மட்டுமே உடையது.
  • சிற்பமும் தொடர்புடைய கல்வெட்டும் உடையது.
பெரும்பாலும் இரண்டாம் வகை நடுகற்களே தொல்லியல் அறிஞர்களால் ஆய்வு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்படுள்ளன.இவ்வாறு ஆவணப்படுத்த நடுகற்கள் தமிழகத்தில் 320 ஆந்திர பிரதேசத்தில் 476 கர்நாடகத்தில் 7 உள்ளன*

தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நடுகற்களில் 80% திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ளன. இவை தென் பெண்ணையாறு, செய்யாறு. பாலாறு  நதிகளை ஒட்டிய பகுதிகள் ஆகும். இம்மாவட்டங்களை அடுத்த கர்நாடக மாநிலத்தின் கோலார், மைசூர் மாவட்டங்களிலும் ஆந்திர பிரதேசத்தின் அனந்தபூர், சித்தூர், கடப்பை, ராயலசீமா மாவட்டங்களை உள்ளடக்கிய ராயலசீமா பகுதியிலும் நடுகற்கள் அதிகம் உள்ளன. 

நடுகற்களில் காணப்படும் கல்வெட்டுகள் தமிழ் வட்டெழுத்துகளின் வளர்ச்சி, மொழிநடை ஆகியவற்றை அறியவும், சிற்பங்கள் வெவ்வேறு காலங்களில் வீரர்களின் உருவம், உடை, ஆயுதங்கள் ஆகியவற்றை அறியவும் உதவுகின்றன.*

சங்க இலக்கியங்களில் நடுகற்களைப் பற்றி பல பாடல்களில் குறிப்பு வருகிறது. ஆனால், சங்க கால நடுகல் ஒன்றுகூட கிடைக்கவில்லை. சங்க காலத்தில் நடுகற்கள் சிற்பங்களாக செய்துக்கப்படாமல் ஒவியங்களாக வரையப்பட்டிருக்கலாம்.*

நீத்தோர் வழிபாடு காலத்தால் தொன்மையான வழிபாடு. தமிழகத்தில்  நடுகல் வழிபாடு தெய்வ உருவச்சிலை வழிபாடுக்கு முந்தையது என்பது ஆய்வாளர்கள் கருத்து.

வகைகள்

யார், எதற்காக, எப்படி உயிர் விட்டார்கள் என்பதன் அடிப்படையில் நடுகற்களை வகைப்படுத்தலாம்.

விலங்குகளால் தாக்கப்பட்டு உயிரிழந்தவர்கள்

புலி, சிங்கம், யானை, குதிரை, பன்றி, பாம்பு கடித்து மாண்டவர்கள் (புலி குத்திப் பட்டான் கல், யானை குத்திப் பட்டான் கல்........ 

விலங்குகளுக்கானவை


நாய், குதிரை, கோழி, கிளி, எருமை, பசு, 

இறந்த காரணம் பற்றி

  • தொறுப்பூசல்கள் (தொறுப்பூசலில் பட்டான் தொறு மீட்டுப் பட்டான்)
  • பெண் மீட்டான், சிறை மீட்டான் கல்
  • எருது பொருதார்
  • நவ கண்டம்
  • வடக்கிருத்தல், நிசீதிகை (சமண முனிவர்களூக்காக)
  • சதிக்கல், தீப்பாய்ந்தாள் கல்
  • அறம் காக்க, செய்த சத்தியம் காக்க, கொடுங்கோல் அரசை எதிர்க்க
  • துயர் தாங்காமல்
  • ஊருக்காக - எல்லை காக்க, நீருக்காக (ஊர் காத்தான் கல்)
இறந்த இடம் பற்றி

கடல், சித்திர மாடம், பொன்மாடம், ஆனை மேல், 

மற்றவை

  • கழிப்பேராண்மை
  • சாவாரக்கல் - கொற்றவைக்கு 12 வயது சிறுவனைப் பலியிடுதல்


நடு கற்களின் வகைகள் 

1.வடக்கிருத்தல் கல்

2.சதிக்கில் அல்லது பத்தினி படிமக்கள் 

3.ஊர் காத்தான் கல்

4. சிறை மீட்டான் கல் அல்லது பெண் மீட்டான் கல் 

5.அறம் காத்தான் கல் 

6.கழி பேராண்மை கல் 

7.பன்றி குத்திபட்டான் கல் 

8.குதிரை குத்தி பட்டான் கல் 

9.எருது பெரிதார் கல் 

10.நாய்க்கு நடுகல் 

11.கோழி கல் 

12.நவகண்டம்

13. பாம்பு கடித்து மாண்டார் கல்

14. ஆணை மிதித்து மாண்டார் கல் 

15.பத்தினிரோடு சொர்க்கம் போகும் கல் 

16.அரகண்டம்

17.சாவாரபலிக்கல்

18.நீசிதிகை

19.புலிக்குத்திப்பட்டான் கல்


தொடரும்........


இவன் 

கா.கோபாலகிருஷ்ணன்.MA,B,ed, M,phil 

பட்டதாரி ஆசிரியர் 

அரசு மேல்நிலைப் பள்ளி 

பேரணி 

திண்டிவனம் தாலுகா 

விழுப்புரம் மாவட்டம் 


Source 

1) சேலம் மாவட்டம் நடுகல் -திருமதி மங்கை ராகவன் 

2)தினத்தந்தி -14/4/2025

3)https://aroundarunai.blogspot.com/2023/08/blog-post_1.html?m=1




கருத்துரையிடுக

0 கருத்துகள்