மக்களோடு மக்களுக்காக வாழ்ந்து, நாட்டுக்காகவும்,சமூகத்திற்க்காகவும், தனது இன்னுயிரை ஈந்த வீரர்களை, காலம் கடந்தும் நினைவு கூற வேண்டுமென பழங்கால தமிழர்கள் எண்ணினர்.இதற்காக போர்களில் விழுப்புண் பட்டு மடியும் வீரனுக்காக, அவனது வீரத்தை போற்றுகின்ற வகையிலும், அவனது தியாகத்தினை மதிக்கின்ற வகையிலும் கல் ஒன்றினை நட்டு,அதனை வழிபடுவது தமிழரின் மரபாக இருந்துள்ளது. இவை 'வீரன்கல், வீரக்கல், நடுக்கல், நினைவுகல் என்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றன.
நடுகல் அமைப்பு
நடுகற்களில் வீரனின் உருவம், பெயர், நடுக்கல் எடுக்கப்பட்ட ஆண்டு ,யாருடைய ஆட்சிக்காலம், வீரனது அரும்பெருஞ் செயல் போன்ற குறிப்புகள் பெரும்பாலும் இருப்பதை காண முடிகிறது. இலக்கியத் தரவுகளையும், நடு கற்களில் காணப்படும் உருவங்களையும், எழுத்துகளையும் ஆராய்கின்றபோது, ஆகோள் புரிந்தோ(ஆதிரை கவரவோ,மீட்கவோ) ,கொடிய விலங்குகளுடன் போரிட்டு, தான் சார்ந்திருக்கும் சமூகத்திற்காக இறக்கும் வீரனுக்கே நடுக்கல் எழுப்பப்பட்டுள்ளது.
நடுகற்கள் இருவகை;
- சிற்பம் மட்டுமே உடையது.
- சிற்பமும் தொடர்புடைய கல்வெட்டும் உடையது.
விலங்குகளுக்கானவை
இறந்த காரணம் பற்றி
- தொறுப்பூசல்கள் (தொறுப்பூசலில் பட்டான் தொறு மீட்டுப் பட்டான்)
- பெண் மீட்டான், சிறை மீட்டான் கல்
- எருது பொருதார்
- நவ கண்டம்
- வடக்கிருத்தல், நிசீதிகை (சமண முனிவர்களூக்காக)
- சதிக்கல், தீப்பாய்ந்தாள் கல்
- அறம் காக்க, செய்த சத்தியம் காக்க, கொடுங்கோல் அரசை எதிர்க்க
- துயர் தாங்காமல்
- ஊருக்காக - எல்லை காக்க, நீருக்காக (ஊர் காத்தான் கல்)
மற்றவை
- கழிப்பேராண்மை
- சாவாரக்கல் - கொற்றவைக்கு 12 வயது சிறுவனைப் பலியிடுதல்
நடு கற்களின் வகைகள்
1.வடக்கிருத்தல் கல்
2.சதிக்கில் அல்லது பத்தினி படிமக்கள்
3.ஊர் காத்தான் கல்
4. சிறை மீட்டான் கல் அல்லது பெண் மீட்டான் கல்
5.அறம் காத்தான் கல்
6.கழி பேராண்மை கல்
7.பன்றி குத்திபட்டான் கல்
8.குதிரை குத்தி பட்டான் கல்
9.எருது பெரிதார் கல்
10.நாய்க்கு நடுகல்
11.கோழி கல்
12.நவகண்டம்
13. பாம்பு கடித்து மாண்டார் கல்
14. ஆணை மிதித்து மாண்டார் கல்
15.பத்தினிரோடு சொர்க்கம் போகும் கல்
16.அரகண்டம்
17.சாவாரபலிக்கல்
18.நீசிதிகை
19.புலிக்குத்திப்பட்டான் கல்
தொடரும்........
இவன்
கா.கோபாலகிருஷ்ணன்.MA,B,ed, M,phil
பட்டதாரி ஆசிரியர்
அரசு மேல்நிலைப் பள்ளி
பேரணி
திண்டிவனம் தாலுகா
விழுப்புரம் மாவட்டம்
Source
1) சேலம் மாவட்டம் நடுகல் -திருமதி மங்கை ராகவன்
2)தினத்தந்தி -14/4/2025
3)https://aroundarunai.blogspot.com/2023/08/blog-post_1.html?m=1
0 கருத்துகள்