Ad Code

Ticker

6/recent/ticker-posts

2000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

 விழுப்புரம் அருகே

2000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

விழுப்புரம், அக்6-விழுப்புரம் அருகே2000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது.


முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

விழுப்புரம் அருகே உள்ள தளவானூர் தென்பெண்ணெய் ஆற்றில் தொல்லியல் ஆய்வாளர் இமானுவேல் மற்றும் வரலாற்று ஆர்வலர் பிரதாப்,சாமுவேல் ஆகியோர்கள் ஆய்வு மேற்கொண்டனர் அப்போது ஆற்றின் கரைப்பகுதியில் பெருங்கர்காலத்திய முதுமக்கள் தாழி கருப்புநிற ஈமத்தாழி, பானை ஓடுகள்,நான்கு வகை குறியீடுகளுடன் தாழியின் விளிம்பு பகுதிகள் ஆகியவற்றை கண்டறிந்தனர். இது பற்றி தொல்லியல் ஆய்வாளர் இமானுவேல் கூறியதாவது:-


முதுமக்கள் தாடிக்கு ஈமப்பேழை மதமத க்கா பானை, ஈமத்தாழி என்றெல்லாம் வேறு பெயர்கள் உண்டு. முதுமக்கள் தாழி அரை அடி முதல் 7 அடி வரையிலான பல்வேறு அளவுகளில் தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆற்றுச் சமவெளி பகுதிகளில் இம்முறை பரவலாக பின்பற்றி வந்ததை தொல்லியல் ஆய்வுகள் உணர்த்துகின்றன.


 முதுமக்கள் தாழி முறையை பொருத்தமட்டில் மூன்று விதமான முறைகள் தமிழர்களால் பின்பற்றி வந்தது. ஒன்று தாழியில் இறந்த பின்பு சடலத்தை சம்மணமிட்டு அமர வைத்து சடலத்தின் உருவத்திற்கு தகுந்தாற்போல் தேர்ந்தெடுக்கப்பட்ட மட்பாண்டத்தில் வைத்து புதைப்பது.

இம்முறையில் பானை பெரிய அளவிலாக இருக்கும் இரண்டாவது முறையானது இறந்த பின்னர் உடலை வெட்ட வெளியில் கிடைத்தி சில நாட்கள் ஆன பிறகு விலங்குகள் பறவைகள் உண்டது போக எஞ்சிய எலும்பு துண்டுகளை மட்டும் பொறுக்கி எடுத்து சிறிய அளவிலான மட்பாண்டத்தில் இட்டு புதைப்பதாகும். மற்றொரு முறையானது இறந்த பின்பு சடலத்தை எரியூட்டி எஞ்சிய சாம்பளை மட்டும் சிறிய கலய்த்தில் எட்டு புதைக்கும் முறையாகும்.


 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை 

தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், பூம்புகார், கொற்கை, கொடுமணல், அழகன்குளம் அரிக்கமேடு, மாங்குடி, பல்லாவரம் திருக்கழுக்குன்றம் போன்ற இடங்களில் தொல்லியல் துறை ஆய்வுகளில் முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளது. தமிழர்கள் முதுமக்கள் தாழிகள் இறந்த மனிதனின் உடலை சம்மனமிட்டு அமர வைத்து கையில் அவன் பயன்படுத்திய ஆயுதங்களை வைத்து இடுப்பு அளவிற்கு ஏதேனும் ஒரு தானியத்தையும் அதற்கு மேலே அவன் பயன்படுத்திய ஆடை அணிகலன்கள் போன்றவற்றை வைத்து அருகிலேயே ஒரு அகல் விளக்கினையும் எரியும் நிலையில் வைத்து பானையை மூடியுள்ளனர் தற்போது கண்டறியப்பட்டுள்ள பழமையான முதுமக்கள் தாழி 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை ஆகும்.

 இவ்வாறு அவர் கூறினார்.




கருத்துரையிடுக

0 கருத்துகள்