Ad Code

Ticker

6/recent/ticker-posts

IAS|உதவி தொகை



 ஐஏஎஸ் முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்ற நபர்கள் உதவித்தொகையுடன் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என்று தலைமைச் செயலாளர் தெரவித்துள்ளார்.


இது குறித்து தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சென்னையில் பசுமைவழிச் சாலையில் இயங்கி வரும் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம், கடந்த 56 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இந்த மையம் தமிழக இளைஞர்களுக்குக் குறிப்பாகக் கிராமப்புறப் பகுதிகளில் உள்ள ஏழை மாணவர்களுக்குப் பயிற்சியளித்து வருகிறது. 

    ஆண்டுதோறும் குடிமைப் பணித் தேர்வுகளில் வெற்றி பெற்று இந்திய நிர்வாகத்தில் உயர் நிலையினை அடையும் வகையில் இங்கு பயிலும் மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கப்படுகிறது. இப்பயிற்சி மையத்தில் பசுமைச் சூழலுடன் வகுப்பறைகள், தங்கும் வசதி, தரமான உணவு வழங்கும் விடுதி, சிறந்த நூலகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அமைந்துள்ளன. மாணவர்களுக்கு இங்கு கட்டணமின்றி உணவு அருந்தவும், அருமையான இயற்கைச் சூழலில் தங்கிப் படிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர, முதன்மைத் தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு மாதம் ரூ.3000 ஊக்கத்தொகையும் அளிக்கப்படுகிறது.

தமிழக மாணவர்கள் எங்கு பயிற்சி பெற்று முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றிருந்தாலும், இந்த பயிற்சி மையத்தில் முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சி பெற அனுமதிக்கப்படுவார்கள். இந்த மையத்தில், இந்த ஆண்டு 225 பேர் தங்கிப் பயில, சிறப்பான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் சேர விரும்பும் தேர்வர்கள் 03 நாளை மாலை 6.00 மணி முதல் 07 ஆம் தேதி மாலை 06.00 மணி வரையில் www.civilservicecoaching.com என்ற இணையத்தில் தங்கள் பெயரைப் பதிவு பதிவு செய்து கொள்ளலாம் என தலைமைச் செயலாளர் இறையன்பு தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். 

மேலும் இட ஒதுக்கீட்டின்படி தேர்வு செய்யப்பட்ட தேர்வர்கள் விவரம் 9ஆம் தேதி மாலை 06.00 மணியளவில் இணையத்தில் வெளியிடப்பட்டு, 10 ஆம் தேதி அன்று சேர்க்கை நடைபெறுவதோடு 11 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும். இணையத்தில் பதிவு செய்யும்பொழுது மாணவர்கள், விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளபடி, வருமானச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தமைக்கான இணைய ரசீதை விண்ணப்பத்துடன் இணைத்தளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்