Ad Code

Ticker

6/recent/ticker-posts

ஆட்டுக் கிடை போடுதல்



 ட்டுக் கிடை போடுதல் என்பது பழங்காலத்தில் மக்கள் கடைப்பிடித்த இயற்கை விவசாய முறைகளில் ஒன்றாகும் . மனிதன் ஓரிடத்தில் தங்கி நாகரிகம் உருவான காலத்தில் இருந்து ஆடுவளர்த்தல் நடைமுறைப் படுத்தப்பட்டது . ஆட்டின் கழிவுகளான சாணம் , சிறுநீர் ஆகியவை இயற்கை உரங்களாக பயன்பட்டு வருகின்றன . இன்றைக்கும் பெரும்பாலான விளை நிலங்களில் ஆட்டின் கழிவுப் பொருட்கள் உரத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன . கிடை போடுதல் என்பது நேரடியாகவும் , உடனடியாகவும் நிலத்திற்கு உரமிடும் முறையாகும் . 

கிடை போடுதல் கிடை போடுதல் என்பதுவிளைநிலங்களில் ஆடுகளையோ , மாடுகளையோ இரவில் அடைத்து வைத்து அவற்றின் கழிவுப்பொருட்களான சாணம் மற்றும் சிறுநீரினை உரங்களாக மாற்றுவது ஆகும் . இதனைப் பழங்காலத்தில் மந்தை அடைத்தல் என்று குறிப்பிட்டனர் . கிடை போடுதலை பட்டி அடைத்தல் என்றும் கூறுவர் . கிடை போடுதல் பொதுவாக விளைச்சல் காலம் முடிந்து அடுத்த பயிர் செய்யும் காலத்திற்கு இடைப்பட்ட காலத்தில் பின்பற்றப்படுகிறது . குறைந்தபட்சம் இரண்டாண்டுக்கு ஒருமுறை கிடை போடப்படுகிறது . “ ஆட்டுக் கிடை இட்டால் அந்தாண்டே பலன் . மாட்டுக் கிடை இட்டால் மறு ஆண்டு இலை , தழைகளை அதிகமாக உண்பதால் பலன் என்பது பழமொழி " ஏனெனில் ஆடானது அதனுடைய கழிவுகள் உடனடியாக உரமாக மாற்றப்பட்டு பலனளிக்கிறது . மாடானது அடர்தீவனம் , வைக்கோல் உள்ளிட்டவைகளை அதிகமாக உண்பதால் சிறிது நாள் கழித்து பலனளிக்கிறது . மேலும் ஆட்டு உரத்தில் எனவே நார்ச்சத்து குறை : அதடை நேரடியாக உரமாகப் பயன்படுத்தலாம் . மாட்டுச் சாணத்தில் நார்ச்சத்து அதிகம் . ஆதலால் அதனை பாதி மட்கச் செய்து பின்புதான் உரமாகப் பயன்படுத்த வேண்டும் . எனவேதான் ஆட்டுக் கிடை போடும் வழக்கம் அதிகமாக உள்ளது . சுமார் ஓர் ஆடானது ஆண்டிற்கு 500 முதல் 700 கிலோ வரை எரு கொடுக்கும் .  2000 ஆடுகளை ஒருநாள் இரவு ஒரு ஏக்கர் நிலத்தில் தங்க வைத்தால் அந்த இடத்திற்குத் தேவையான எரு கிடைக்கும் . ஆடுகள் சின்னஞ்சிறு விதைகளையும் நன்கு செரித்துவிடும் . எனவே இதனை உரமாகப் பயன்படுத்தும்போது களைச் செடிகள் அவ்வளவாக முளைப்பதில்லை .



மேலும் ஆட்டு சிறுநீரானது களைச் செடிகள் முளைப்பதை தடைசெய்துவிடுகிறது . ஆட்டு எருவில் பயிர் வளர்ச்சிக்குத் தேவையான ( மணிச்சத்து ) , பொட்டாஷ் ( சாம்பல் சத்து ) , நைட்ரஜன் ( தழைச்சத்து ) , பாஸ்பரஸ் சுண்ணாம்புச்சத்து , நுண்ணூட்டச்சத்து ஆகியவை உள்ளன . ஆட்டு எருவில் உள்ள 30 சதவீத ஊட்டச்சத்து முதல்பயிருக்கும் , 70 சதவீத ஊட்டச்சத்து இரண்டாவது பயிருக்கும் கிடைக்கிறது . ஆட்டு சிறுநீரிலிருந்து கிடைக்கும் ஊட்டச்சத்து முழுவதும் முதல் பயிருக்கு உடனடியாக கிடைக்கும் .


 கிடை போடுவதால் கிடைக்கும் நன்மைகள் :

ஆட்டுக் கிடை போடுவதால் நிலத்திற்கும் , பயிர் விளைச்சலுக்கும் அப்பயிரினை உ உண்பதால் உண்பவர்களுக்கும் , சுற்றுச்சூழலுக்கும் பல நன்மைகள் கிடைக்கின்றன . ஆட்டுக்கிடை போடுவதால் மண்ணின் நீர்பிடிப்புத்திறன் , காற்றோட்டம் , மண்ணின் அடர்வு , மண்ணின் தன்மை ஆகியவை அதிகரிக்கின்றன . உவர் மற்றும் களர் நிலத்தில் ஆட்டுக் கிடை போடுவதால் மண்ணின் வேதியியல் பண்புகள் மேம்படுத்தப்பட்டு மண்வளம் அதிகரிக்கிறது.

மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் பாதுகாக்கப்படுவதுடன் அதன் செயல்பாடுகள் அதிகமாகின்றன . நீண்ட நாளுக்கு வேளாண்மை செய்வதற்கு ஏதுவாக மண்வளம் செழிக்கிறது . குறைந்த செலவில் பயிருக்குத் தேவையான சத்துகள் சரியான அளவு மற்றும் விகிதத்தில் கிடைக்கின்றது . 



பயிர்கள் எல்லாம் ஒரே சீராக வளரும் . 


பயிரின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் . 


பயிரில் விளைச்சல் அதிகரிக்கும் . 


 விளைநிலங்களுக்கு உரமிடும் செலவு மிச்சமாகிறது . 


 இது இயற்கை உரம் ஆதலால் சுற்றுச்சூழலுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை .


 உரத்திற்கான செலவும் குறைவு . 



மனிதர்களுக்கும் , கால்நடைகளுக்கும் எவ்வித தீங்கும் ஏற்படுவதில்லை .


 நன்மைகள் மிகுந்த சுற்றுசூழலைப் பாதிக்காத ஆட்டுக் கிடை இட்டு வளமான நிலத்தை உருவாக்கி நலமான வாழ்வு வாழ்வோம் .






கருத்துரையிடுக

0 கருத்துகள்