Ad Code

Ticker

6/recent/ticker-posts

8 std social first midterm exam 2022 Answer key

 I சரியான விடையினை தேர்ந்தெடுத்து எழுதுக

1. இங்கிலாந்து

2. 1757

3.கரிசல்மண்

4.2.8%

5.முதலமைச்சர்

6) குடியரசு தலைவர்

7) உதயகுமார்

II.குறுவினாக்களுக்கு விடையளி

8. இந்தியாவில் டச்சுக்காரர்களால் நிறுவப்பட்ட முக்கிய வர்த்தக மையங்களின் பெயரை எழுதுக.

  • பழவவேற்காடு
  • சூரத்
  • சின்சுரா
  • காசிம்பஜார்
  • பாட்னா
  • நாகப்பட்டினம்
  • பாலசோர்
  • கொச்சின்

9. துணைப்படைத் திட்டத்தில் கையெழுத்திட்ட நாடுகளின் பெயர்களை குறிப்பிடுக

  • ஹைதரபாத்
  • தஞ்சாவூர்
  • அயோத்தி
  • பேஷ்வா
  • போன்ஸ்லே
  • குவாலியர்
  • இந்தூர்
  • ஜெய்பூர்
  • உதய்பூர்
  • ஜோத்பூர்

 10.மண்ணின் வகைகளைக் கூறுக.

  • வண்டல் மண்
  • கரிசல் மண்
  • செம்மண்
  • சரளை மண்
  • மலை மண்
  • பாலை மண்

11.காலநிலை – வரையறு

  • காலநிலை என்பது ஒரு பகுதியின் நீண்ட நாளைய வானிலை சராசரியைக் குறிப்பதாகும்.
  • இது வளி மண்டலத்தின் வானிலைக் கூறுகளின் சராசரி தன்மையினை நீண்ட காலத்திற்கு அதாவது 35 வருடங்களுக்கு கணக்கிட்டுக் கூறுவதாகும்.

 12.மாநில சட்டமன்றத்தின் இரு அவைகளின் பெயரை எழுதுக.

  • மேலவை – சட்டமன்ற மேலவை
  • கீழவை – சட்ட மன்ற பேரவை

13.நற்குடிமகனின் மூன்று பண்புகளை குறிப்பிடுக

  • அரசியலமைப்புச் சட்டத்தின் படி நடத்தல்
  • சட்டத்துக்கு கீழ்படிதல்
  • சமுதாயத்திற்கு தன் பங்களிப்பை ஆற்றுதல் மற்றும் குடிமைப் பணியை செயலாற்றுதல்.
  • நற்பண்புகளையும், நீதியையும் நிலைநாட்டுதல்
  • வேற்றுமைகளை மறந்து நடத்தல்

14.கருப்பு பணம் என்பதன் பொருள் என்ன?

கருப்பு பணம் என்பது அரசாங்கத்திற்கு செலுத்தாத எந்தவொரு பணத்தையும் குறிக்கும்

15.கோடிட்ட இடங்களை நிரப்புக:

1.  இந்தியாவின் தேசிய ஆவணக்காப்பகம் (NAI) __________ ல் அமைந்துள்ளது.

விடை : புது தில்லியில்

2. மாப்ளா கலகம் _________ல் நடைபெற்றது.

விடை : கேரளாவில்

3. புவியின் தோல்’ என்று ______________ அழைக்கப்படுகிறது

விடை : மண்

4. நீர்ச் சுழற்சியில் __________ நிலைகள் உள்ளன.

விடை : மூன்று

5. ஆளுநரின் பதவிக்காலம் __________ ஆண்டுகள் ஆகும்.

விடை : 5

16.பொருத்துக

1.1600

2.இண்டிகோ விவசாயிகளின் துயரம்

3.செயல்படும் எரிமலை

4.மேகங்கள்

5.உண்மையான தலைவர்

17.சரியா/தவறா

1.சரி

2.சரி

3.சரி

4.தவறு

5.சரி


19. பாறைகளை வகைப்படுத்தி விவரிக்கவும்

புவி பரப்பில் காணப்படும் பாறைகளை, அவை தோன்றும் முறைகளின் அடிப்படையில் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

  1. தீப்பாறைகள் (Igneous Rocks)
  2. படிவுப் பாறைகள் (Sedimentary Rocks)
  3. உருமாறியப் பாறைகள் அல்லது மாற்றுருப் பாறைகள் (Metamorphic Rocks)

தீப்பாறைகள்

  • தீப்பாறைகள் புவியின் ஆழமானப் பகுதியிலிருந்து வெளியேறும் உருகிய பாறைக் குழம்பு (Magma) உறைந்து உருவானதாகும்.
  • இப்பாறைகளிலிருந்து மற்ற பாறைகள் உருவாகின்றதால் இவற்றை முதன்மைப் பாறைகள் (Primary Rocks) அல்லது தாய்ப் பாறைகள் (Parent Rocks) என்று அழைக்கிறோம்.

படிவுப் பாறைகள்

  • படிவுப் பாறைகள் அரிப்பு காரணிகளால் அரிக்கப்பட்டு (காற்று, நீர், பனியாறுகள்) படிய வைக்கப்பட்ட படிவுகள் நீண்ட காலமாக அதிக வெப்பம் மற்றும் அழுத்தத்தின் காரணமாக இறுகியதால் படிவுப் பாறைகள் உருவாகின்றன.
  • இப்பாறைகள் பல அடுக்குகளை உள்ளடக்கியுள்ளன.
  • பல்வேறு காலக்கட்டத்தில் படியவைக்கப்பட்டபொருள்கள் பல படிநிலைகளைக் கொண்டிருப்பதால் இவைகள் அடுக்குப்பாறைகள் (Stratified Rocks) என அழைக்கப்படுகின்றன.

உருமாறிய பாறைகள்

  • அதிகவெப்ப அழுத்தம் காரணமாக தீப்பாறைகளும் படிவுப்பாறைகளும் மாற்றமடைந்து உருமாறிய பாறைகள் என பெயர் பெறுகிறது.

20. முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரி?

  • முதலமைச்சர் மாநிலத்தின் தலைமை நிர்வாகி ஆவார். மாநில அரசாங்கத்தின் பல்வேறு முக்கிய முடிவுகள் அவரது தலைமையின் கீழ் எடுக்கப்படுகின்றன.
  • மாநில முதலமைச்சர், அமைச்சரவையை, உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறார்.
  • முதலமைச்சரின் ஆலோசனையின்பெயரில் அமைச்சர்களை ஆளுநர் நியமிக்கிறார்.
  • பல்வேறு துறைகளை கண்காணித்து ஆலோசனை வழங்குகிறார். மேலும் அவர் பல்வேறு துறைகளின் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறார்.
  • முதலமைச்சர் மாநில அரசாங்கத்தின் கொள்கைகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறார்.
  • மாநில அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளில் அவரது முடிவே இறுதியாக இருக்கும்.
  • மாநில அரசாங்கத்தின் உயர் பதவிகளில் நியமனம் செய்யும் முக்கிய அதிகாரத்தைக் கொண்டுள்ளார்.
21. பண்டமாற்று முறையிலுள்ள தீமைகள் யாவை?
  1. இருமுகத் தேவை பொருத்தமின்மை
  2. பொதுவான மதிப்பின் அளவுகோல்
  3. பொருட்களின் பகுபடாமை
  4. செல்வத்தை சேமிப்பதற்கான சிரமங்கள்

22.வேறுபடுத்துக.

1. உருமாறிய பாறைகள் மற்றும் படிவுப்பாறைகள்

உருமாறிய பாறைகள்படிவுப்பாறைகள்
அதிகவெப்ப அழுத்தம் காரணமாக தீப்பாறைகளும் படிவுப்பாறைகளும் மாற்றமடைந்து உருமாறிய பாறைகள் என பெயர் பெறுகிறது.அரிப்பு காரணிகளால் அரிக்கப்பட்டு (காற்று, நீர்,  பனியாறுகள்) படிய வைக்கப்பட்ட படிவுகள் நீண்ட  லமாக அதிக வெப்பம் மற்றும் அழுத்தத்தின் காரணமாக இறுகியதால் படிவுப் பாறைகள் உருவாகின்றன.

2.காலநிலை மற்றும் வானிலை

காலநிலைவானிலை
காலநிலை என்பது ஒரு பகுதியின் நீண்ட நாளைய வானிலை சராசரியைக் குறிப்பதாகும். இது வளி மண்டலத்தின் வானிலைக் கூறுகளின் சராசரி தன்மையினை நீண்ட காலத்திற்கு அதாவது 35 வருடங்களுக்கு கணக்கிட்டுக் கூறுவதாகும்.வானிலை என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தின் வளிமண்டலத்தில் நிலவும் சூரிய வெளிச்சம், வெப்பம், மேகமூட்டம், காற்றின் திசை, காற்றழுத்தம், ஈரப்பதம், மழைப்பொழிவு மற்றும் பிற கூறுகளின் தன்மைகளை குறிப்பதாகும்.


காரணம் கூறுக

1.தீப்பாறைகள் எரிமலை பகுதிகளில் காணப்படுகிறது

  • தீப்பாறைகள் புவியின் ஆழமானப் பகுதியிலிருந்து எரிமலை வெளியேறும் உருகிய பாறைக் குழம்பு உறைந்த உருவானதாகும்.
  • ஆகையால் தீப்பாறைகள் எரிமலைப் பகுதிகளில் காணப்படுகிறது.

2. உயரம் அதிகரிக்கும் பொழுது வெப்பம் குறைகிறது.

  • உயரம் அதிகமுள்ள இடங்களில் காற்றழுத்தம் குறைவாக இருக்கும்.
  • காற்றிலுள்ள மூலக்கூறுகளின் அளவு குறைவதால் வெப்பமும் குறைகிறது.
23) இந்திய வரைபடம்


கருத்துரையிடுக

0 கருத்துகள்