பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள், சென்னை-6
பார்வை: முனைவர் ச. கண்ணப்பன்
ந.க.எண்.0035 /DSE/PC/2025 நாள். 22-12-2025
பொருள்:பள்ளிக் கல்வி -அரையாண்டு தேர்வுக்கு பிறகு விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவதை தவிர்த்தல் - மாணவர்கள் பாதுகாப்பாக இருத்தல் மற்றும் பயனுள்ள வகையில் விடுமுறையை கழித்தல் பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு வேண்டுகோள்- சார்பாக
அரசு/ அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு முடிந்த பிறகு 24-12-2025 (புதன் கிழமை) முதல் 4-01-2026 (ஞாயிற்று கிழமை) வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 5-01-2026 திங்கட் கிழமை அன்று முதல் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும். அரையாண்டு விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டாம் என அனைத்து பள்ளி தலைமையாசியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பள்ளி விடுமுறை நாட்களில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்படுகிறது.
மாணவர்கள் விடுமுறை நாட்களில் கடல், ஆறு, ஏரி, குளம் மற்றும் குட்டைபோன்ற நீர் நிலைகளில் குளிப்பதற்கு பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டாம்.
மாணவர்களின் வளர்ச்சிக்கு சமர்ச்சீரான உணவு அளிப்பது அவசியம். இசை. நடனம் மற்றும் ஒவியம் போன்றவற்றில் ஆர்வம் உள்ள மாணவர்களை விடுமுறை நாட்களில் இவற்றை கற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கவும். தாத்தா பாட்டி உள்ள வீடுகளில் சேர்ந்து உணவு அருந்த ஊக்குவிக்கவும். மேலும் பெரியோர்களை மதிக்கவும் அவர்களுக்கு உதவி செய்யவும் பழக்குங்கள்.
அனைத்து பள்ளி மாணவர்களின் பெற்றோர் எடுக்குமாறு தலைமையாசிரிகளும் மேற்கண்ட அறிவுரைகளை கவனத்திற்கு கொண்டு செல்ல உரிய நடவடிக்கை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பெறுநர்:
1.அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்,அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்
2.நகல்: அரசு முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை சென்னை-9 அவர்களுக்கு பணிந்து அனுப்பப்படுகிறது.

0 கருத்துகள்