தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் அமைந்துள்ளது. "108 சிவாலயம்"என அழைக்கப்படும் ராமலிங்க சாமி திருக்கோயில். இந்த கோவில் "கீழை ராமேஸ்வரம்" என்று அழைக்கப்படுகிறது. ராமபிரான் சீதாப்பிராட்டியுடனும், லட்சுமணனுடனும் இத்தலததிற்கு வந்ததாகவும் இங்கு தன் தோஷம் நீங்க 108 சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகவும் தல வரலாறு கூறுகிறது. எனவே இத்திருக்கோவில் மூலவர் 'ராமலிங்க சுவாமி' என்றும், அம்பாள்'பர்வதவர்த்தனி'என்றும் அழைக்கப்படுகின்றனர். மேற்கு நோக்கிய கோயில்களில் வேண்டுதல் வைத்தால் உடனே நிறைவேறும் என்பது நம்பிக்கை. இத்தலம் மேற்கு நோக்கிய தலமாகும். இத்தலத்தில் உள்ள 108 லிங்கங்களும் மேற்கு நோக்கியே அமைந்துள்ளன இக்கோவிலில் தரிசனம் செய்தால் 108 சிவன் கோவில்களை தரிசித்த புண்ணியம் கிடைக்கும்.
தல புராணம்
பறவைகள் முதல் அனைத்து உயிர்களுக்கும் நாம் துன்பம் செய்யும்போது நமக்கு அவைகளின் சாபம் வந்து சேர்கிறது. நாம் செய்ய வேண்டிய கடமைகளில் இருந்து விலகும்போது நமக்கு தோஷம் ஏற்படுகிறது. உதாரணமாக பித்ரு காரியம் போன்றவைகளை உரிய காலங்களில் முறைப்படி செய்யாவிட்டால் தோஷம் ஏற் படுகின்றது. நாம் அன்றாடம் செய்யும் செயல்களிலிருந்தும் பல்வேறு விதமான பாவங்கள் நமக்கு ஏற்பட்டு, பல பிறவிகளாக நம்மைத் தொடர்கின்றன.இத்தகைய சாப, தோஷ பாவங்களை நீக்கும் தலமாக பாபநாசம் 108 சிவால யம் விளங்கி வருகிறது. தென்னகத்தில் மிகப் பெரிய (6 அடி உயரம்) சூரிய பகவான் சிலையும் கோவிலின்கிழக்குப்புறத்தில்அமைந்துள்ளது.கோவில் முகப்பில் சூரிய தீர்த்தம் உள்ளது.ராம-ராவண யுத்தத்தில் பலரைக் கொல்ல நேர்ந்ததால் ராமபிரானுக்கு தோஷம் ஏற்பட்டது. தோஷம் நீங்க ராமேஸ்வரத்தில் பூஜை செய்தபின் ராமபிரான் கீழ்த்திசை நோக்கி சீதா தேவியுடனும் லட்சுமணனுடனும் வந்தார். அப்போது குடமுருட்டி ஆற்றின் கரையில் மரங்கள் அடர்ந்த ஒரு சோலையைக் கண்டார். அங்குள்ள ஒரு உயர்ந்த வில்வ மரத்தடியில் ராமபிரான் அமர்ந்தபோது தன்னை இன்னும் ஏதோ ஒரு தோஷம் தொடர்வதையும், அதனால் தனக்கு நிம்மதியின்மை ஏற்படுவதையும் உணர்ந்தார்.
கர,தூஷன் என்னும் அரக்கர்களைக் கொன்ற தோஷம் ராமேஸ்வரத்தில் பூஜை செய்த பின்பும் தன்னைத் தொடர்வதை தனது ஞான திருஷ்டியால் அறிந்தார். அதைப் போக்க சிவலிங்கத்தைப் பிர திஷ்டை செய்து சிவ பூஜை செய்வது அவசியம் என்பதையும் அறிந்தார். இறைவனே ஆனாலும் மனிதப் பிறவி எடுத்தால் அதற்குரிய சாப, தோஷங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்பதற்கு அரியஉதாரணம் இது.
ராமபிரான் அனுமனை அழைத்தார். தான் பூஜை செய்ய காசியில் இருந்து சிவலிங்கம் கொண்டு வருமாறு உத்தரவிட்டார். ராமரின் உத்தரவை சிர மேற்கொண்டு அனுமனும் காசிக்குப் புறப்பட்டார். அங்கிருந்து அவர் சிவ லிங்கம் கொண்டு வருவ தில் சில தடைகள் ஏற்பட்டு கால தாமதம் ஆனது.
அப்போது சீதா பிராட்டி, அருகிலிருந்த குடமுருட்டி ஆற்றின் மணலில் அமர்ந்து விளையாட்டாக சிவலிங்கங்களை உருவாக்கத் தொடங்கினார். இவ்வாறு 107 சிவலிங்கங்களை அவர் உருவாக்கிவிட்டார். அற்புதமாக அமைந்த அந்த சிவலிங்கங்களைப் பார்த்த ராம பிரான், தனது தேவியை பாராட்டினார். உடனே அந்த சிவலிங்கங்களுக்கு பூஜை செய்யத்தொடங்கிவிட்டார். அப்போது காசியில் இருந்த ஒரு சிவலிங்கத்தைக் கொண்டு வந்த அனுமன், வருத்தமுற்று நான் கொண்டு வந்த சிவலிங்கத்தை என்ன செய்வது என யோசித்தார்.
அப்போது அனுமனுக்கு அருளிய ராமபிரான் கோவிலுக்கு தென்புறத்தில் அந்த லிங்கத்தை பிர திஷ்டை செய்யமாறு உத்தாவிட்டார். அதன்படி தென்புறத்தில் அமைக்கப்பட்ட அந்த லிங்கத்திற்கு 'அனுமந்த லிங்கம்' என்று பெயரிட்டார்.
சீதாதேவி பிரதிஷ்டை செய்த 106 சிவலிங்கங்களும் மூன்று வரிசையில் வடக்குப் பகுதியில் அழகாக அமைந்து உள்ளன. 107-வது லிங்கம் மூலவராக ராமலிங்க சுவாமியாக காட்சி தருகிறது. 108-வது சிவலிங்கமாக காசியிலிருந்து அனுமன் கொண்டு வந்த லிங்கம் அனுமந்த லிங்கம்' என்று வழங்கப்பட்டு வருகிறது. 107 லிங்கங்களையும் தரிசனம் செய்து, 108-வதாக அனுமந்த லிங்கத்தையும் தரிசனம் செய்தால்தான் சிவதரிசனம் செய்த பலன் கிடைக்கும் என்று ராமபிரான் அருளியதால் அனுமனும் தன் வருத்தம் நீங்கி மகிழ்ச்சியுற்றார். மூலஸ்தானம் தவிர்த்து மற்ற 107 லிங்கங்களுக்கும் பக்தர்கள் தாங்களே
நோடியாக பூத்தூவி வழிபடலாம்.
கோவில் அமைப்பு
ராமர், லட்சுமணர், சீதை மற்றும் ஆஞ்சநேயர் சிவ விங்க பூஜை செய்தது புடைப்புச் சிற்பமாக உள்ளது. ராமாயணத்தோடு தொடர்புடைய கோவில் என்பதால் பிரகாரத்தில் ஆஞ்சநேயர், சுக்ரீவர் வணங்கியபடி நிற்கும் சிலைகள் உள்ளன.
பிரகாரத்தில் வள்ளி - தெய்வானையுடன் முருகப் பெருமாள் காட்சியளிக்கிறார். மேலும் காசி விசா லாட்சி, அன்னபூரணி ஒரு சன்னிதியிலும், கால பைரவர் சனீஸ்வரர், சூரிய பகவான் ஆகியோர் மற்றொரு சன்னிதியிலும் காட்சி தருகிறார்கள். எதிர்மறை கிரகங்களான சூரிய பகவானும், சனீஸ்வரரும் அருகருகில் இருப்பதால் சனி தோஷம் உள்ளவர்கள் இந்த சன்னிதியில் வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
ராமலிங்க சுவாமி சன்னிதி விமானம் ராமேஸ்வாம் கோவில் அமைப்பிலும், அனுமந்த லிங்க சன்னிதி விமானம் காசி விஸ்வநாதர் கோயில் அமைப்பிலும் உள்ளது. எனவே காசி, ராமேஸ்வரம் செல்ல முடியா தோர் இங்கு வந்து வழிபடலாம்.
பொதுவாக சிவன் சன்னிதி எதிரே நந்தி மட்டுமே இருக்கும். ஆனால் இங்கு நந்தியுடன் காமதேனு பசுவும் இருக்கிறது. காமதேனு சிலை கழுத்தில் சலங்கைகள் அணிந்து சிவனை நேராக பார்த்துக் கொண்டிருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. அகத்தியரின் ஆலோசனைப்படி இந்த கோவிலில் ராமபிரான் காமதேனு செய்தார். அதற்கு அகத்தியரே பிரதோஷ பூஜை செய்ததாக தல வரலாறு கூறுகிறது. தற்போதும் பிரதோஷ வேளையில் அகத்தியர் இங்கு பூஜை செய்வ தாக ஐதீகம்,
மகா சிவராத்திரிப் பெருவிழா
இந்தகைய சிறப்புமிக்க பாபநாசம் தலத்தில் ஆண்டு தோறும் மாசி மாதத்தில் வரும் மகா சிவராத்திரி, பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.அன்றையதினத்தில்ஆயிரக்கணக்கான பக்தர்கள் 108 சிவலிங்கங்களையும் 108 முறை வலம் வரும் நிகழ்ச்சி. பக்திப் பரவசத்துடன் நடைபெறும்.
சிவராத்திரியன்று 108 லிங்கங்களுக்கும் ருத்ர மந்திரம் சொல்லி நான்கு கால பூஜை நடைபெறுகிறது. மேலும் ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. சனி தோஷம் விலக, பித்ருதோஷம் நீங்க, அறியாமல் செய்த பாவம் விலக என சகல தோஷங்களுக்கும் இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது. தங்களது வேண்டுதல் நிறைவேறியவுடன் பக்தர்கள் சுவாமிக்கு தேன், பால் கொண்டு அபிஷேக ஆராதனை செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர்.
கோவில் காலை 6.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்திருக்கும்.
அமைவிடம்
கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் 15 கிலோமீட்டர் தொலையில் பாபநாசம் உள்ளது. பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே கோவில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்தும், தஞ்சாவூரில் இருந்தும் பேருத்துகள் உள்ளன
0 கருத்துகள்