நடுகல் எனும் நன்றி மறவாப் பண்பாடு
பகுதி -4
புலிகுத்திப்பட்டான் நடுக்கல்
புலி குத்திப்பட்டான் நடுகற்கள் கிணத்துக்கடவு அருகே கல்லாபுரத்தில் கண்டுபிடிப்பு
கோவை மாவட்டம் கிணத்து கடவு அருகே கல்லாபுரத்தில் திருப்பூரைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் மிகவும் அரிதான புலி குத்திப்பட்டான் நடுகல் கண்டுபிடித்துள்ளனர். இவை 600 ஆண்டுகளுக்கு முற்பட்டவை யாக இருக்கும் என்றும் அந்த தொல்லியல் ஆய்வாளர்கள் தெரி வித்தனர். இது பற்றிய விபரம் வருமாறு: வடசித்தூரில் உள்ள மருத்துவர் சுரேந்திரன் கொடுத்த தகவலின் அடிப்படையில் திருப்பூரில் இயங்கி வரும் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த இரா.குமரவேல், ந.சுதாகர், க.பொன் னுச்சாமி, சு. வேலுச்சாமி மற்றும் பொறியாளர் சு.ரவிக்குமார் ஆகி யோர் கிணத்துக்கடவில் இருந்து 6 கி.மீ வடமேற்கே அமைந்துள்ள கல்லாபுரத்தில் கள ஆய்வு மேற் கொண்டனர். இதில் சுமார் 600 ஆண்டுகள் பழைமையான, அரிதான புலிகுத்திப்பட்டான் நடுகல் கண்டறிந்துள்ளனர். இதைப்பற்றி ஆய்வு மைய இயக்குனர் பொறியாளர் சு.ரவிக் குமார் மேலும் கூறியதாவது: பழந்தமிழகத்தில் நாடு காவல் செய்து, நல்லறம் பேணி, நானி லம் போற்ற வாழ்ந்து மடிந்த வீர மறவர்களுக்கு வீர நடுகற்கள் எடுத்து அந்த மாவீரர் நினைவுக் குப் படையல் செய்து வழிபட்டு வந்துள்ளனர். அகநானூறு, புற நானூறு, ஐங்குறுநூற்றுப் பாடல் கள் நடுகல் வழிபாட்டிற்கும், முல்லை நில மக்களுக்கும் இடை யிலான தொடர்பினை எடுத்துக் காட்டுகின்றன. நடுகல் வீரன் வளத்தினையும், மகப்பேற்றினை யும் கொடுக்கும் சக்தி உடையவன் என்ற நம்பிக்கை பண்டைய நாளிலிருந்து தொடர்ச்சியாகப் பயின்று வருகின்றது. அதேபோல் நடுகற்கள் நடப்படும் இடம் பற் றியும் இலக்கியத்தில் கூறப்பட் டுள்ளன. இலக்கியத்தில் நடுகல் இருப்பிடத்தைக் குறிப்பிடும் போது ஆற்றங்கரை, பெருவழி, சந்தி, ஊர்ப்புறம் ஆகியவை சுட் டப்பெறுகின்றன. இங்கு நமக் குக் கிடைத்துள்ள இரு நடுகற்க ளும், மூன்று சாலைகள் சந்திக் கும் இடத்தில் உள்ளதால் இது பண்டைய “சந்தி வழிபாட்டு முறைக்கு” ஒரு சிறந்த சான்றாக விளங்குகின்றது.
பண்டைய சமூகத்தில் கால் நடைகளே மக்களின் பெருஞ்செல் வமாக விளங்கின. இந்த கால்ந டைகளை உணவாக உட்கொள்ள வரும் புலியுடன் போரிட்டு வீர மரணம் அடையும் வீரனின் நினை வாக எடுக்கப்படும் நடுகற்கள் புலிக்குத்திப்பட்டான் நடுகற்கள் என அழைக்கப்படுகின்றன. இங்கு நமக்குக் கிடைத்துள்ள நடுகல் 60 செ.மீ அகலமும் 70 செ.மீ உயரமும் கொண்டதாகும். இதில் உள்ள மாவீரன் தன் வலது கையில் உள்ள குறுவாள் மூலம் புலியின் கழுத்துப்பகுதியைக் குத்தும் வகையில் வடிவமைக் கப்பட்டுள்ளது. புலியின் வால் மேல்நோக்கி உள்ளது. புலியின் வலது முன்னங்கால் தன்னைத் தாக்கும் வீரனின் தலையைத் தாக்கும் வண்ணமும், இடது முன் னங்கால் வீரனின் குறுவாளைத் தடுக்கும் வகையிலும் உள்ளது. இவ்விரண்டு நடுகற்களிலும் வீரர்களின் அள்ளி முடிந்த குடுமி நேராக உள்ள வண்ணமும், இடை யில் மட்டும் ஆடை அணிந்து கை, கால், காது மற்றும் கழுத்துப் பகுதியில் அணிகலன்கள் அணிந் துள்ளனர். எழுத்துப் பொறிப்பு இல்லாத இந்நடுகற்களின் சிலை அமைப் பினை வைத்துப் பார்க்கும்போது இவை 600 ஆண்டுகள் பழமையா னவை ஆகும் என்றார் ரவிக் குமார்.
ஜவ்வாதுமலை மேல்பட்டு அருகே 1000 ஆண்டுகள் பழமையான புலிகுத்திப்பட்டான் நடுகல் கண்டெடுப்பு!
இவன்
கா.கோபாலகிருஷ்ணன்.MA,B,ed, M,phil
பட்டதாரி ஆசிரியர்
அரசு மேல்நிலைப் பள்ளி
பேரணி
திண்டிவனம் தாலுகா
விழுப்புரம் மாவட்டம்
2 கருத்துகள்
Google blogger simple User friendly and ads show agutathu Nalla irukkum ungaloda theme not user friendly
பதிலளிநீக்குபுரியவில்லை.என்ன சொல்ல வரகீங்க
நீக்கு