Ad Code

Ticker

6/recent/ticker-posts

நடுகல் எனும் நன்றி மறவாப் பண்பாடு |பகுதி -4|புலிகுத்திப்பட்டான் நடுக்கல்

 நடுகல் எனும் நன்றி மறவாப் பண்பாடு  

பகுதி -4

புலிகுத்திப்பட்டான் நடுக்கல்

அந்த காலத்தில் கால்நடை மற்றும் மனிதர்களை தாக்கி ஊறு விளைவிக்கும் புலியை எதிர்கொண்டு போராடும் வீரன், விழிப்புண்ணால் மடியும்போது, அவன் புகழைப் போற்ற எழுப்பப்படும் நினைவு கற்களை 'புலிக்குத்திக்கல்' "புலிக்குத்திப்பட்டான்கல்" என அழைப்பர்.

 இவற்றில் உயிர் துறந்த வீரனின் உருவமானது, அவன் புலியுடன் மோதி அதனை ஆயுதத்தால் தாக்குவது போன்று வடிக்கப்பட்டிருக்கும் சிலவற்றில் வீரனுக்குக் காவலாய் இருந்த அவன் வளர்த்த நாயின் உருவமும் சேர்த்து வடிக்கப்பட்டிருக்கும். 

புலி குத்திப்பட்டான் நடுகற்கள் கிணத்துக்கடவு அருகே கல்லாபுரத்தில் கண்டுபிடிப்பு




கோவை மாவட்டம் கிணத்து கடவு அருகே கல்லாபுரத்தில் திருப்பூரைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் மிகவும் அரிதான  புலி குத்திப்பட்டான் நடுகல் கண்டுபிடித்துள்ளனர். இவை 600 ஆண்டுகளுக்கு முற்பட்டவை யாக இருக்கும் என்றும் அந்த தொல்லியல் ஆய்வாளர்கள் தெரி வித்தனர். இது பற்றிய விபரம் வருமாறு: வடசித்தூரில் உள்ள மருத்துவர் சுரேந்திரன் கொடுத்த தகவலின் அடிப்படையில் திருப்பூரில் இயங்கி வரும் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த இரா.குமரவேல், ந.சுதாகர், க.பொன் னுச்சாமி, சு. வேலுச்சாமி மற்றும் பொறியாளர் சு.ரவிக்குமார் ஆகி யோர் கிணத்துக்கடவில் இருந்து 6 கி.மீ வடமேற்கே அமைந்துள்ள கல்லாபுரத்தில் கள ஆய்வு மேற் கொண்டனர். இதில் சுமார் 600 ஆண்டுகள் பழைமையான, அரிதான  புலிகுத்திப்பட்டான் நடுகல்  கண்டறிந்துள்ளனர். இதைப்பற்றி ஆய்வு மைய இயக்குனர் பொறியாளர் சு.ரவிக் குமார் மேலும் கூறியதாவது: பழந்தமிழகத்தில் நாடு காவல் செய்து, நல்லறம் பேணி, நானி லம் போற்ற வாழ்ந்து மடிந்த வீர மறவர்களுக்கு வீர நடுகற்கள் எடுத்து அந்த மாவீரர் நினைவுக் குப் படையல் செய்து வழிபட்டு வந்துள்ளனர். அகநானூறு, புற நானூறு, ஐங்குறுநூற்றுப் பாடல் கள் நடுகல் வழிபாட்டிற்கும், முல்லை நில மக்களுக்கும் இடை யிலான தொடர்பினை எடுத்துக் காட்டுகின்றன. நடுகல் வீரன் வளத்தினையும், மகப்பேற்றினை யும் கொடுக்கும் சக்தி உடையவன் என்ற நம்பிக்கை பண்டைய நாளிலிருந்து தொடர்ச்சியாகப் பயின்று வருகின்றது. அதேபோல் நடுகற்கள் நடப்படும் இடம் பற் றியும் இலக்கியத்தில் கூறப்பட் டுள்ளன. இலக்கியத்தில் நடுகல் இருப்பிடத்தைக் குறிப்பிடும் போது ஆற்றங்கரை, பெருவழி, சந்தி, ஊர்ப்புறம் ஆகியவை சுட் டப்பெறுகின்றன. இங்கு நமக் குக் கிடைத்துள்ள இரு நடுகற்க ளும், மூன்று சாலைகள் சந்திக் கும் இடத்தில் உள்ளதால் இது பண்டைய “சந்தி வழிபாட்டு முறைக்கு” ஒரு சிறந்த சான்றாக விளங்குகின்றது.


பண்டைய சமூகத்தில் கால் நடைகளே மக்களின் பெருஞ்செல் வமாக விளங்கின. இந்த கால்ந டைகளை உணவாக உட்கொள்ள வரும் புலியுடன் போரிட்டு வீர மரணம் அடையும் வீரனின் நினை வாக எடுக்கப்படும் நடுகற்கள் புலிக்குத்திப்பட்டான் நடுகற்கள் என அழைக்கப்படுகின்றன. இங்கு நமக்குக் கிடைத்துள்ள நடுகல் 60 செ.மீ அகலமும் 70 செ.மீ உயரமும் கொண்டதாகும். இதில் உள்ள மாவீரன் தன் வலது கையில் உள்ள குறுவாள் மூலம் புலியின் கழுத்துப்பகுதியைக் குத்தும் வகையில் வடிவமைக் கப்பட்டுள்ளது. புலியின் வால் மேல்நோக்கி உள்ளது. புலியின் வலது முன்னங்கால் தன்னைத் தாக்கும் வீரனின் தலையைத் தாக்கும் வண்ணமும், இடது முன் னங்கால் வீரனின் குறுவாளைத் தடுக்கும் வகையிலும் உள்ளது. இவ்விரண்டு நடுகற்களிலும் வீரர்களின் அள்ளி முடிந்த குடுமி நேராக உள்ள வண்ணமும், இடை யில் மட்டும் ஆடை அணிந்து கை, கால், காது மற்றும் கழுத்துப் பகுதியில் அணிகலன்கள் அணிந் துள்ளனர். எழுத்துப் பொறிப்பு இல்லாத இந்நடுகற்களின் சிலை அமைப் பினை வைத்துப் பார்க்கும்போது இவை 600 ஆண்டுகள் பழமையா னவை ஆகும் என்றார் ரவிக் குமார்.



ஜவ்வாதுமலை மேல்பட்டு அருகே 1000 ஆண்டுகள் பழமையான புலிகுத்திப்பட்டான் நடுகல் கண்டெடுப்பு!



திருவண்ணாமலை: ஜவ்வாதுமலை மேல்பட்டு அருகே 1000 வருடம் பழமையான புலிகுத்திப்பட்டான் நடுகல் கண்டறியப்பட்டுள்ளது

திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின் தலைவரும் வரலாற்று ஆய்வாளருமான ராஜ் பன்னீர்செல்வம் , உதயராஜா மற்றும் நீலகண்டன் இனைந்து ஜவ்வாது மலைப் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்ட பொழுது ஆவணம் செய்யப்படாத ஆயிரம் வருடம் பழமையான நடுகல் ஒன்றைக் கண்டறிந்தனர்.

பரமனந்தல் - மேல்பட்டு இடையே உள்ள தென்மலை பலாமரத்தூர் காப்புக்காட்டுக்குள் வலதுபுறமாகப் பிரியும் ஒற்றையடிப் பாதையில் வனத்துக்குள் சுமார் இரண்டு கி.மி பயணித்த பொழுது ஒரு மரத்தின் கீழ் நடுகல் ஒன்று இருப்பதைக் கண்டோம் . மேலும் அதனை ஆய்வு செய்த பொழுது , அந்நடுகல் புலியுடன் போரிட்டு மரணம் அடைந்த வீரனுக்காக எடுக்கப்பட்ட நடுகல் என்பது கண்டறியப்பட்டது.

சுமார் மூன்றடி அகலமும் நான்கு அடி உயரமும் கொண்ட பலகை கல்லில் இடது புரம் வீரன் ஒருவன் தனது இடது கையில் வில்லையும் , அம்பையும் தாங்கிக்கொண்டு வலது கையில் குறுவாளை உருவி உயர்த்தியவாறு பிடித்து ஆக்ரோஷமாகச் சண்டையிடும் காட்சி புடைப்பாக செதுக்கப்பட்டுள்ளது.



இவ்வீரனின் தலையில் கொண்டை பின்புறமாகவும் கழுத்தில் அணிகலனாக சவடி , இருகைகளில் தோள்வளையும் அணிந்து இடையில் உடுத்தப்பட்டுள்ள ஆடை தொடை வரை நீண்டு , தனது இடது காலை முன்வைத்துப் போரிடச் செல்வது போல காட்டப்பட்டுள்ளது

வீரனின் வலது புறம் புலி ஒன்று ஆக்ரோஷமாக காட்டப்பட்டுள்ளது . எனினும் அதன் மீது அம்பு தைத்தது போல் காட்டப்பட விடவில்லை . எனவே இப்புலியை எதிர்த்துப் போரிட்ட பொழுது இவ்வீரன் மரணம் அடைந்திருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. ஊரில் உள்ள ஆநிரைகளையோ (ஆடு , மாடு) , மக்களையோ தாக்கும் புலியை எதிர்த்துச் சண்டையிட்டு உயிரை விடும் வீரரை நடுகல் எடுத்து வழிபடும் வழக்கம் பல்லவர் காலம் தொட்டே வழக்கில் உள்ளது. இவ்வகையான நடுகற்களை புலிகுத்திபட்டான் கல் என்று அழைப்பர்.


அதுபோல இவ்விடத்தில் புலியிடம் இருந்து ஊர்மக்களையோ , ஆநிரைகளையோ காக்கும் பொருட்டு சண்டையிட்ட பொழுது உயிர் நீத்த இந்த வீரனுக்கு இவ்விடத்தில் வாழ்ந்த மக்கள் நடுகல் எடுத்து வழிபாடு செய்துள்ளதை நம்மால் அறிய முடிகிறது. இந்நடுகல்லில் காட்டப்பட்டுள்ள வீரனின் தோற்றம் மற்றும் சிற்பமைதியை வைத்து இது பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்திய நடுகல்லாகக் கருதலாம்.


இவன் 

கா.கோபாலகிருஷ்ணன்.MA,B,ed, M,phil 

பட்டதாரி ஆசிரியர் 

அரசு மேல்நிலைப் பள்ளி 

பேரணி 

திண்டிவனம் தாலுகா 

விழுப்புரம் மாவட்டம் 




Source 

1) தினத்தந்தி 14/4/2025

கருத்துரையிடுக

2 கருத்துகள்