Ad Code

Ticker

6/recent/ticker-posts

குறள் 379|நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவ தெவன்|அறத்துப்பால்| ஊழியல்| ஊழ்

 


குறள் 379

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்

அல்லற் படுவ தெவன்

[அறத்துப்பால், ஊழியல், ஊழ்]

(For meaning in English, scroll to the bottom of this post)


பொருள்

நன்று -நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு.


ஆம் -நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி


கால் -நாலில்ஒன்று; தமிழில் நாலிலொன்றைக் குறிக்கும்'' என்னும் பின்ன எண்குறி; பாதம்; பூவின்தாள்; அடிப்பாகம்; எழுத்தின்கால்; தேருருள்; வண்டி; கோல்; குறுந்தறி; நெசவுத்தறியின்மிதி; கைப்பிடி; தூண்; பற்றுக்கோடு; முளை; மரக்கன்று; மகன்; இனமுறை; பிறப்பிடம்; வாய்க்கால்; பிரிவு; வழி; நடை; இடம்; வனம்; முனை; மரக்கால்; அளவு; கதிர்; மழைக்கால்; காற்று; வாதரோகம்; ஐம்பூதம்; பொழுது; செவ்வி; தடவை; காலன்; கருநிறம்; ஏழனுருபுள்ஒன்று; ஒருவினையெச்சவிகுதி; ஒருமுன்னொட்டு.


நல்லவை - நற்செயல்கள்; அறிவு, ஒழுக்கம்முதலியவற்றால்உயர்ந்தோர்சபை; நியாயம்பேசுவோர்சபை.


நல்லவாக் -விளைவாய இன்பங்களை நல்லவை


காண்பவர் - காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.

அன்று -அந்நாள்; மாறுபாடு ஓர்அசைச்சொல்


ஆம் - நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி


கால் - நாலில்ஒன்று; தமிழில் நாலிலொன்றைக் குறிக்கும்'' என்னும் பின்ன எண்குறி; பாதம்; பூவின்தாள்; அடிப்பாகம்; எழுத்தின்கால்; தேருருள்; வண்டி; கோல்; குறுந்தறி; நெசவுத்தறியின்மிதி; கைப்பிடி; தூண்; பற்றுக்கோடு; முளை; மரக்கன்று; மகன்; இனமுறை; பிறப்பிடம்; வாய்க்கால்; பிரிவு; வழி; நடை; இடம்; வனம்; முனை; மரக்கால்; அளவு; கதிர்; மழைக்கால்; காற்று; வாதரோகம்; ஐம்பூதம்; பொழுது; செவ்வி; தடவை; காலன்; கருநிறம்; ஏழனுருபுள்ஒன்று; ஒருவினையெச்சவிகுதி; ஒருமுன்னொட்டு.


அல்லல் -துன்பம்


அல்லற்படுவது - துன்பப்படுவது


எவன் -யாவன்; எவ்வண்ணம்; எப்படி; யாது; யாவை; என்ன; ஏன்; வியப்புஇரக்கச்சொல்.


முழுப்பொருள்

ஒருவர்க்கு வாழ்வில் நல்லது, இனியது நடக்கும் பொழுதெல்லாம் வேறு எதைப்பற்றியும் கவலைப்படாமல் நல்லவற்றையெல்லாம் நன்கு அனுபவிக்கும் ஒருவர் தீயது நடக்கும் பொழுதும் நல்லவை நடக்காத பொழுதும் இவை யாவும் விதி என நினைப்பது ஏனோ?


விதி என்ன தீமை மட்டும் தருவதா என்ன. இல்லையே. விதி இன்பமும் தரவல்லது. ஆனால் இன்பம் வரும் பொழுதெல்லாம் விதிக்கு நன்றித்தெரிவிக்காமல் தனது செயலுக்கும் உழைப்பிற்கும் கிரீடம் சுட்டிக்கொண்டு (அதாவது அகங்காரம் கொண்டு) இருப்பாது ஏனோ?


இதை ஒட்டி ஒரு கருத்தை நான் இப்படிச் சொல்வேன், நம்மில்ல பலர் இறைவன் இருக்கும் கோயில்களுக்கு சென்று அல்லது வீட்டில் இறைவனை வணங்கும் பொழுது இறைவனிடம் இல்லாதை நினைத்து வருந்துகிறோம், இல்லாததை வேண்டி நிற்கிறோம் அதற்காக மன்றாடுகிறோம். ஆனால் இருப்பவற்றுக்கு இறைவன் கொடுத்தவற்றுக்கு நன்றி தெரிவிப்பதில்லை. அது ஏனோ? துன்பம் வரும் பொழுது மட்டும் இறைவனின் நினைப்பு வருவது ஏனோ?


முற்றுக்கருத்தையும் கம்பராமாயண தைலமாட்டுப்படலப் பாடலொன்று கூறுகிறது. “இன்பம்வந் துறுமெனின் இனிய தாயிடைத் துன்பம்வந் துறுமெனின் துறக்க லாகுமோ?”

மேலும்:அஷோக்உரை


எழுத்தாளர் ஜெயமொகனின் வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை-54 இல் கீழ்க்காணுமாறு சில வரிகள் வருகின்றன



இங்கு நிகழும் நன்றுக்கு நீங்களே பொறுப்பென்று எண்ணுவது ஆணவம். தீதுக்கு நீங்களே பொறுப்பென்று எண்ணுவது மேலும் ஆணவம். இங்கு உங்களை எதிர்த்து நின்றிருப்போரின் வாழ்வை நீங்கள் அமைத்தீர்களா என்ன? இங்குவரை அவர்கள் தெரிந்து வந்தமைந்த வழியை வகுத்தீர்களா? முடிவுக்கு மட்டும் நீங்கள் எவ்வண்ணம் பொறுப்பேற்கிறீர்கள் என்ற உங்கள் சொல்லை நான் தலைக்கொண்டவன்.


இங்கனைத்திலும் நிறைந்திருக்கும் அழிவற்ற ஒன்றின் அலைகளே இவையென்று உணர்ந்தவன் துயரோ களிப்போ கொள்வதில்லை. எழுவதே அமையும். எரிவதே அணையும். எனவே இருமைகளற்று துலாமுள் என நிலைகொள்பவனுக்கு சோர்வென்பதில்லை என்றது உங்கள் மெய்வேதம்.

-


ஒப்புமை

சிறுகா பெருகா முறைபிறழ்ந்து வாரா

உறுகாலத் தூற்றாகா ஆமிடத்தே ஆகும்

சிறுகாலைப் பட்ட பொறியும் அதனால்

இறுகாலத்தென்னை பிரிவு” (நாலடி 110)


சாதலும் பிறத்தல் தானும் தம்வினைப் பயத்தின் ஆகும்

ஆதலும் அழிவும் எல்லாம் அவைபொருட் கியல்பு கண்டாய்

நோதலும் பரிவும் எல்லாம் நுண்ணுனர் வின்மை யன்றே

பேதைநீ பெரிதும் பொல்லாய் பெய்வளைத் தோளி யென்றான்” (சீவக 269)


முடியுநாள் தானே வந்து முற்றினான் துன்பமுந்நீர்

படியுமாம் சிறியோர் தன்மை நினக்கிது பழியிற்றாமால்” (கம்ப.மாயாசீதைப் 65)


இன்பம்வந் துறுமெனின் இனிய தாயிடைத்

துன்பம்வந் துறுமெனின் துறக்க லாகுமோ” (கம்ப.தைலமாட்டு.29)


பரிமேலழகர்உரை

நன்று ஆங்கால் நல்லவாக் காண்பவர் - நல்வினை விளையுங்கால், அதன் விளைவாய இன்பங்களைத் துடைக்கும் திறன் நாடாது, இவை நல்ல என்று இயைந்து அனுபவிப்பார், அன்று ஆங்கால் அல்லற்படுவது எவன் - ஏனைத் தீவினை விளையுங்கால் அதன் விளைவாய துன்பங்களையும் அவ்வாறு அனுபவியாது, துடைக்கும் திறன் நாடி அல்லல் உழப்பது என் கருதி? (தாமே முன் செய்து கொண்டமையானும், ஊட்டாது கழியாமையானும், இரண்டும் இயைந்து அனுபவிக்கற்பால, அவற்றுள் ஒன்றிற்கு இயைந்து அனுபவித்து, ஏனையதற்கு அது செய்யாது வருந்துதல் அறிவன்று என்பதாம். இவை மூன்று பாட்டானும் இன்பத்துன்பங்கட்குக் காரணமாய ஊழின் வலி கூறப்பட்டது.).


மணக்குடவர்உரை

நன்மை வருங்காலத்து நன்றாகக் காண்பவர் தீமை வருங்காலத்து அல்லற்படுவது யாதினுக்கு?. இஃது அறிந்தவர் வருவனவெல்லாம் இயல்பென்று கொள்ளவேண்டு மென்றது.

மு.வரதராசனார் உரை

நல்வினை விளையும் போது நல்லவை எனக் கருதி மகிழ்கின்றனர், தீவினை விளையும் போது துன்பப்பட்டுக் கலங்குவது ஏனோ?.


சாலமன் பாப்பையா உரை

நல்லது நடக்கும்போது மட்டும் நல்லது என அனுபவிப்பவர், தீயது நடக்கும்போது மட்டும் துன்பப்படுவது ஏன்?.


English Meaning - As I taught a kid - Rajesh

When good things happens to one person, he(or she) enjoys all the good stuffs (without giving credit to other factors, other people). Whereas whenever some bad thing happens to him and he suffers, he blames it upon fate or someone else? Whenever good things he gives credit to his hardwork, talent, intelligence and one doesn't even thank God for it. But when something bad happens, he blames on fate and goes to God and question why God gave sufferings to him. Why this double standards? Why is he suffering thinking about suffering and bad times?


So, one should accept both good and bad equally. One should be grateful for all the factors in his favor during good times, stay ground and be humble. When one goes through bad times, one should learn from the mistakes and continue do his work and take help of others.



கருத்துரையிடுக

0 கருத்துகள்