Ad Code

Ticker

6/recent/ticker-posts

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் அரையாண்டு தேர்வு 2022வினாதாள் விடைகள் விழுப்புரம் மாவட்டம்







 1)அ)லெனின் 

2.இ)ஹிரோஷிமா 

3.(ஈ)I),iii) ஆகியன சரி 

4.(ஈ)1905அக்டோபர்16

 5.ஈ) ஆயிரம் விளக்கு 

 6) இ)3,214 கி.மீ 

7) இ) சணல்

 8)இ) கார்பன் 

9)ஈ) பவன் ஹான்ஸ்

 10)இ) போர் காட் 

11)இ) சட்ட ப்பிரிவு 360

12)ஈ) தூதரகம் 

13)இ) பணிகள் துறை

14)இ)சென்னை 


15.மூவர் கூட்டு நாடுகளின் பெயர்களை குறிப்பிடுக

இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா

16. இந்தோ-சீனாவில் நடைபெற்ற ‘வெள்ளை பயங்கரம்’ குறித்து நீங்கள் அறிந்ததென்ன?

  • 1929-ல் வியட்நாம் வீரர்கள் ராணுவப் புரட்சி செய்தனர்.
  • பிரெஞ்சு கவர்னர் ஜெனரலைக் கொலை செய்வதற்கான முயற்சியிலும் தோல்வி அடைந்தது.
  • இதனைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட்களின் தலைமையில் மிகப்பெரும் விவசாயிகளின் புரட்சியும் நடைபெற்றது.
  • இப்புரட்சி ஒடுக்கப்பட்டதைத் தொடரந்து வெள்ளை பயங்கரவாதம் என்பது அரங்கேறியது.
  • புரட்சியாளர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர்
17)திருச்சிராப்பள்ளி பிரகடனத்தின் (1801) முக்கிய கூறுகளைத் தருக.
  • மருது சகோதரர்கள் ஜூன் 1801இல் நாட்டின் விடுதலையை முன்னிறுத்திய ஒரு பிரகடனத்தை வெளியிட்டனர் இதுவே ‘திருச்சிராப்பள்ளி பேரறிக்கை’ என்றழைக்கப்படுகிறது.
  • பிரிட்டிஷாருக்கு எதிராக மண்டல, சாதி, சமய, இன வேறுபாடுகளைக் கடந்து நிற்பதற்காக முதலில் விடுக்கப்பட்ட அறைகூவலே 1801ஆம் ஆண்டின் பேரறிக்கை ஆகும்.
  • இப்பேரறிக்கை திருச்சியில் அமையப்பெற்ற நவாபின் கோட்டையின் முன்சுவரிலும், ஸ்ரீரங்கம் கோவிலின் சுற்றுச் சுவரிலும் ஒட்டப்பட்டது.
  • ஆங்கிலேயருக்கு எதிராகச் செயல்பட விழைந்த தமிழகப் பாளையக்காரர்கள் பலரும் ஒன்று திரண்டனர்.
  • சின்ன மருது ஏறத்தாழ 20,000 ஆட்களை ஆங்கிலேயர்களுக்கு எதிராகத் திரட்டினார்.
  • வங்காளம், சிலோன், மலேயா ஆகிய இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரிட்டிஷ் படைகள் விரைந்து வந்தன.
  • புதுக்கோட்டை, எட்டையபுரம் மற்றும் தஞ்சாவூரின் அரசர்கள் பிரிட்டிஷாருடன் கைகோர்த்தார்கள்.
  • ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கை என்ற உத்தி விரைவில் பாளையக்காரர்களின் படைகளில் பிரிவினையை ஏற்படுத்தியது.
18) சைமன் குழு புறக்கணிக்கப்பட்டது ஏன்?
  • சர் ஜான் சைமன் தலைமையிலான இந்தக் குழுவில் ஏழு உறுப்பினர்கள் இடம்பெற்றனர். இது ‘சைமன் குழு’ என்றே அழைக்கப்பட்டது.
  • இந்தியர் ஒருவர் கூட உறுப்பினராக இல்லாத காரணத்தால் இந்தியர்கள் ஆத்திரமும் அவமானமும் அடைந்தனர். தங்கள் அரசியல் சாசனத்தை நிர்ணயிக்க தங்களுக்கு உரிமை இல்லாத நிலைகண்டு கொதித்தனர்.
  • காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் உள்ளிட்ட அனைத்து இந்திய பிரிவுகளும் இந்த சைமன் குழுவினைப் புறக்கணிப்பது என முடிவு செய்தன.
19) இராமலிங்க சுவாமிகளின் சீர்திருத்தங்கள் குறித்து சிறுகுறிப்பு வரைக.
  • இராமலிங்க சுவாமிகள் தன்னுடைய அன்பையும் இரக்கத்தையும் செடிகொடிகள் உட்பட அனைத்து உயிரினங்களிடமும் காட்டினார். இதை அவர் ஜீவகாருண்யம் என்றார்.
  • 1865இல் சமரச வேத சன்மார்க்க சங்கம் எனும் அமைப்பை நிறுவினார். பின்னர் அது சமரசசுத்த சன்மார்க்க சத்ய சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
  • 1866இல் தென்னிந்தியாவில் ஏற்பட்ட கொடிய பஞ்சத்தைக் கணக்கில் கொண்டு 1867இல் சாதி எல்லைகளைத் தாண்டி அனைத்து மக்களுக்குமான இலவச உணவகத்தை வடலூரில் நிறுவினார்.
20)இந்தியாவின் மேற்கு நோக்கி பாயும் ஆறுகளைப் பற்றி கூறுக.

மேற்கு நோக்கி பாயும் ஆறுகள்

தீபகற்ப இந்திய ஆறுகளில் நர்மதை, தபதி மற்றும் மாஹி ஆகிய மூன்று ஆறுகள் மட்டுமே கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி பாய்கின்றன.

நர்மதை

  • மத்தியப் பிரதேசத்தில் உள்ள அமர்கண்டாக் பீடபூமியில் 1057 மீ உயரத்தில் உற்பத்தியாகி 1312 கி.மீ நீளத்தையும் 98796 ச.கி.மீ பரப்பளவு வடிநிலத்தையும் கொண்டது.
  • இது 27 கி.மீ நீளத்திற்கு ஒரு நீண்ட கழிமுகத்தை உருவாக்கி காம்பே வளைகுடா வழியாக அரபிக் கடலில் கலக்கிறது.
  • இது மேற்கு நோக்கி பாயும் ஆறுகளிலேயே நீளமானதாகும்.
  • பர்னா, ஹலுன், ஹெரன், பஞ்சர், தூதி, சக்கார், டவா, மற்றும் கோலர் ஆகியவை இதன் முதன்மையான துணையாறுகள் ஆகும்.

தபதி

  • தபதி ஆறு தீபகற்ப இந்தியாவின் முக்கிய ஆறுகளில் ஒன்றாகும். இந்நதி 724 கி.மீ நீளத்தையும் 65145 ச.கி.மீ பரப்பளவு வடிநிலத்தை கொண்டது.
  • மத்திய பிரதேசத்தில் உள்ள பெட்டூல் மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 752 மீ உயரத்தில் முல்டாய் என்ற இடத்திலிருந்து உற்பத்தியாகிறது.
  • காம்பே வளைகுடா வழியாக அரபிக்கடலில் கலக்கிறது.
  • வாகி, கோமை, அருணாவதி, அனெர், நீசு, புரெ, பஞ்சரா மற்றும் போரி ஆகியன தபதி ஆற்றின் துணை ஆறுகள் ஆகும்.

மாஹி

  • மத்திய பிரதேசத்தில் தோன்றி குஜராத் வழியாக அரபிக்கடலில் கலக்கிறது
21) இந்தியாவின் வேளாண்மை முறைகளை குறிப்பிடுக.
  • தன்னிறைவு வேளாண்மை
  • இடப்பெயர்வு வேளாண்மை
  • தீவிர வேளாண்மை
  • வறண்ட நில வேளாண்மை
  • கலப்பு வேளாண்மை
  • படிக்கட்டு முறை வேளாண்மை
22). தகவல் தொடர்பு என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?

தகவல்கள், எண்ணங்கள் மற்றும் கருத்துக்களின் பரிமாற்றத்தையே தகவல் தொடர்பு என்கிறோம். தகவல் தொடர்பு துறையில் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வகையில் உள்ளது.

தகவல் தொடர்புகள் இரு பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன.

  1. தனிமனித தகவல் தொடர்பு
  2. பொதுத்தகவல் தொடர்பு
23.தமிழ்நாட்டின் எல்லைகளைக் குறிப்பிடுக
  • கிழக்கில் – வங்காள விரிகுடா
  • மேற்கில் – கேரளா
  • வடக்கில் – ஆந்திரப் பிரதேசம்
  • வடமேற்கில் – கர்நாடகா
  • தெற்கில் – இந்தியப் பெருங்கடல்

ஆகியன தமிழ்நாட்டின் எல்லைகளாக அமைந்துள்ளன

24.இந்திய அரசியலமைப்பால் வழங்கப்படும் அடிப்படை உரிமைகளை பட்டியலிடுக

  • சமத்துவ உரிமை
  • சுதந்திர உரிமை
  • சுரண்டலுக்கெதிரான உரிமை
  • கல்வி கலாச்சார உரிமை
  • சமயச்சார்பு உரிமை
  • அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை

 25.அணிசேர இயக்கத்தின் நிறுவனத் தலைவர்கள் யாவர்?

  • இந்தியா – ஜவகர்லால் நேரு
  • யுகோஸ்லாவியா – டிட்டோ
  • எகிப்து – நாசர்
  • இந்தோனேசியா – சுகர்னோ
  • கானா – குவாமே நிக்ரூமா

26. ஆளுநராக நியமிக்கப்படுவதற்கான தகுதிகள் யாவை?

  • அவர் இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
  • 35 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.
  • நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது சட்டமன்ற உறுப்பினராகவோ இருத்தல் கூடாது. அவ்வாறு இருப்பின் அவர் ஆளுநராக பதவியேற்கும் பொழுது தாமாகவே அப்பதவி காலியாகிவிடும்.
  • மேலும் அவர், இலாபம் தரும் எந்த தொழிலிலும் ஈடுபடக்கூடாது.

27. GDPயின் முக்கியத்துவத்தை எழுதுக

  • பொருளாதார வளர்ச்சி பற்றிய ஆய்வு பற்றி அறிந்துகொள்ளப் பயன்படுகிறது..
  • பணவீக்கம் மற்றும் பணவாட்டத்தின் சிக்கல்கள் பற்றி அறிய உதவுகிறது.
  • உலகின் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பீடு செய்வதற்கு பயன்படுகிறது.
  • வாங்கும் திறனை மதிப்பீடு செய்வதற்கு உதவுகிறது.
  • பொதுத் துறை பற்றி அனைவரும் தெரிந்துகொள்ள பயன்படுகின்றது.
  • பொருளாதார திட்டமிட வழிக்காட்டியாகவும் பயன்படுகிறது.

28. பண்டங்கள் மற்றும் பணிகள் வரி – சிறு குறிப்பு வரைக.

  • பண்டங்கள் மற்றும் பணிகள் வரி என்பது மறைமுக வரிகளில் ஒன்றாகும்.
  • இவ்வரி இந்தியப் பாராளுமன்றத்தில் மார்ச் 29, 2017ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. மேலும் ஜூலை 1, 2017 முதல் அமுல்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.
  • இதன் குறிக்கோள் “ஒரு நாடு-ஒரு அங்காடி-ஒரு வரி” என்பதாகும். இது மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) போன்று ‘பல முனை வரி’ இல்லாமல் இது ‘ஒரு முனை வரி’ ஆகும்.

 

விரிவாக விடையளிக்கவும்

29)கோடிட்ட இடங்களை நிரப்புக

1)ஸ்ட்ராஸ்பர்க்

2) பாங்கர் 

3) சச்சிதானந்த சின்கா 

4)3

5) கோயம்புத்தூர் 

30) பொருத்துக

1) துருக்கி 

2) தங்கம் 
3) இங்கிலாந்து 
4) தென் கொரியா 
5) பத்திரிகை 

31. முதல் உலகப்போருக்கான முக்கியக் காரணங்களை விவாதி

ஐரோப்பிய நாடுகளின் அணி சேர்க்கைகளும் எதிர் அணி சேர்க்கைகளும்

  • 1900இல் ஐரோப்பிய வல்லரசுகளில் ஐந்து அரசுகள், இரண்டு ஆயுதமேந்திய முகாம்களாகப் பிரிந்தன.
  • ஒரு முகாம் மையநாடுகளான ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, இத்தாலி ஆகியவற்றைக் கொண்டிருந்தது.
  • இரண்டாவது முகாம் நேச நாடுகளான இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய மூவரைக் கொண்ட மூவர் கூட்டு ஊருவாக்கப்பட்டது.

வன்முறை சார்ந்த தேசியம்

  • தேசப்பற்றின் வளர்ச்சியோடு “எனது நாடு சரியோ தவறோ நான் அதை ஆதரிப்பேன்” என்ற மனப்பாங்கும் வளர்ந்தது.
  • இங்கிலாந்தின் ஆரவாரமான நாட்டுப்பற்று (jingoism), பிரான்சின் அதி தீவிரப்பற்று (chauvinism), ஜெர்மனியின் வெறிகொண்ட நாட்டுப்பற்று (kultur) ஆகிய அனைத்தும் தீவிர தேசியமாக போர் வெடிப்பதற்கு தீர்மானமாக பங்காற்றியது.

ஜெர்மன் பேரரசின் ஆக்கிரமிப்பு மனப்பாங்கு

  • ஜெர்மன் பேரரசரான இரண்டாம் கெய்சர் வில்லியம் ஜெர்மனியே
    உலகத்தின் தலைவன் எனப் பிரகடனம் செய்தார்.
  • ஜெர்மனியின் கப்பற்படை விரிவுபடுத்தப்பட்டது .
  • இங்கிலாந்தும் கப்பற்படை விரிவாக்கப் போட்டியில் இறங்கவே இரு நாடுகளுக்குமிடையிலான பதற்றம் மேலும் அதிகரித்தது.

பிரான்ஸ் ஜெர்மனியோடு கொண்ட பகை

  • பிரான்சும் ஜெர்மனியும் பழைய பகைவர்களாவர்.
  • 1871இல் ஜெர்மனியால் தோற்கடிக்கப்பட்ட பிரான்ஸ் அல்சேஸ், லொரைன் பகுதிகளை ஜெர்மனியிடம் இழக்க நேரிட்டது
  • ஜெர்மன் பேரரசர் இரண்டாம்கெய்சர்வில்லியம்மொராக்கோ சுல்தானின் சுதந்திரத்தை அங்கீகரித்ததோடு மொராக்கோவின் எதிர்காலம் குறித்து முடிவு செய்யப் பன்னாட்டு மாநாடு ஒன்றைக் கூட்டும்படி கோரினார்.

பால்கன் பகுதியில் ஏகாதிபத்திய அரசியல் அதிகாரத்திற்கான வாய்ப்பு

  • 1908இல் துருக்கியில் ஒரு வலுவான, நவீனஅரசை உருவாக்கும் முயற்சியாக இளம்துருக்கியர் புரட்சி நடைபெற்றது. இது ஆஸ்திரியாவுக்கும் ரஷ்யாவிற்கும் பால்கன் பகுதிகளில் தங்கள் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கும் வாய்ப்பினை வழங்கியது.
  • ஆஸ்திரியா செர்பியாவின் மீது படையெடுக்கும்போது அதன் விளைவாக செர்பியாவிற்கு ரஷ்யா உதவுமானால் ஆஸ்திரியாவிற்கு ஆதரவாக நான் களமிறங்கும் என ஜெர்மனி அறிவித்தது.

பால்கன் போர்கள்

  • பால்கன் நாடுகள் 1912-ல் துருக்கியை தாக்கி தோற்கடித்தது.
  • 1913-ல் இலண்டன் உடன்படிக்கையின்படி அல்பேனியா நாடு உருவாக்கப்பட்டது.
  • மாசிடோனியாவை பிரித்துக்கொள்வதில் பல்கேரியா, செல்பியாவையும், கீரிஸ்சையும் தாக்கியது.
  • இரண்டாம் பால்கன் போரில் பல்கேரியா எளிதில் தோற்கடிக்கபட்டு புகாரேஸ்ட் உடன்படிக்கை உடன் முடிவடைந்தது.

உடனடிக் காரணம்

  • 1914 ஜூன் 28ஆம் நாள் ஆஸ்திரியப் பேரரசரின் மகனும் வாரிசுமான பிரான்ஸ் பெர்டினாண்டு, பிரின்ஸப் என்ற
    பாஸ்னிய செர்பியனால் கொலை செய்யப்பட்டார்.
  • ஆஸ்திரியா இதனை செர்பியாவைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்பாக எண்ணியது.
  • செர்பியாவிற்கு ஆதரவாகத் தலையிட ரஷ்யா படைகளைத் திரட்டுகிறது என்னும் வதந்தியால் ஜெர்மனி முதல் தாக்குதலைத் ரஷ்யா மீது போர் தொடுத்தது.
32) வேலூரில் 1806இல் வெடித்த புரட்சியின் கூறுகளை விளக்குக.
  • வேலூர் புரட்சிக்கு முன்பாகவே 1792இல் திப்புவோடு ஏற்பட்ட மோதலுக்கு பின்பு சேலம், திண்டுக்கல், கோயம்புத்தூர் தஞ்சாவூர் கம்பெனி ஆட்சியுடன் இணைக்கப்பட்டது.
  • மனமுடைந்த சிற்றரசர்கள், நிலச் சுவான்தார்கள் போன்றோர் சிந்தித்து நிதானமாகச் செயல்பட்டதே 1806 ஆம் ஆண்டு வேலூர் புரட்சியாகும்.
  • பிரிட்டிஷ் இராணுவத்தில் பணியாற்றிய வீரர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்பட்டது. பதவி உயர்வும் குறைவாக இருந்தது.
  • சமய நம்பிக்கைகளுக்கு ஆங்கில அதிகாரிகள் குறைவான மதிப்பளித்தனர். அவர்களுத வேளாண் கொள்கை சிக்கலாக இருந்தது.
  • நிலக்குத்தகை முறையின் நிலையற்ற தன்மை, 1805-ம் ஆண்டு கடும் பஞ்சம், நெருக்கடி போன்றவைகள், பிரிட்டிஷ் இராணுவத்தின் புதிய அறிவுரைகள்
  • புதிய ரக துப்பாக்கிகளில் தடவப்பட்ட விலங்குகள் கொழுப்பு மற்றும் தோல் உறைகள்.
  • இவ்வாறு எதிரப்பு தெரிவித்த அனைத்தையுமே கம்பெனி நிர்வாகம் கவனத்தில் கொள்ளாமல் இருந்தது.
  • 1806 ஜூலை 10 அதிகாலையில் நடந்த புரட்சியில் ஆங்கில அதிகாரிகள் கொல்லப்பட்டது. இதற்கு பதிலடி கொடுத்த கர்னல் கில்லஸ்பியின் கொடுங்கோன்மை
  • இவ்வாறு பல கூறுகள் 1806 ஆம் ஆண்டு வேலூர் புரட்சிக்கு இட்டுச் சென்றன.
33)இமயமலையின் உட்பிரிவுகளையும் அதன் முக்கியத்துவம் பற்றியும் விவரி.

இந்தியாவின் பெரும் அரணாக உள்ள இமயமலையை மூன்று பெரும் உட்பிரிவுகளாக பிரிக்கலாம்.

  1. ட்ரான்ஸ் இமயமலைகள் (The Trans Himalayas or Western Himalayas)
  2. இமயமலைகள் (Himalayas or Central Himalayas)
  3. கிழக்கு இமயமலை / பூர்வாஞ்சல் குன்றுகள் (Eastern Himalayas or Purvanchal Hills)

1. ட்ரான்ஸ் இமயமலை (மேற்கு இமயமலைகள்)

  • இம்மலைகள் ஜம்மு-காஷ்மீர் மற்றும் திபெத் பீடபூமியில் அமைந்துள்ளது.
  • இதன் பரப்பளவு திபெத்தில் அதிகமாக இருப்பதால் இவை ’’திபெத்தியன் இமயமலை‘’ எனவும் அழைக்கப்படுகிறது.
  • இம்மலைகள் மேற்கு மற்றும் கிழக்கு எல்லைகளில் சுமார் 40 கி.மீ அகலத்துடனும் அதன் மையப்பகுதியில் 225 கி.மீ அகலத்துடன் காணப்படுகிறது.
  • இங்குள்ள முக்கியமான மலைத்தொடர்கள் சாஸ்கர், லடாக், கைலாஸ் மற்றும் காரகோரம் ஆகும்.

2. இமயமலை

  • இவை வடக்கு மலைகளின் பெரிய பகுதியாக அமைந்துள்ளது.
  • இது ஒரு இளம் மடிப்பு மலையாகும்.
  • இது பல மலைத்தொடர்களை உள்ளடக்கியது.

இவை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.

  1. உள் இமயமலைகள் / இமாத்ரி
  2. மத்திய இமயமலை / இமாச்சல்
  3. வெளி இமயமலை / சிவாலிக்

(i) உள் இமயமலை அல்லது இமாத்ரி (Greater Himalayas/Himadri)

  • உள் இமயமலை, மத்திய இமயமலைக்கு வடக்கே மிக உயர்ந்து செங்குத்தாக அமைந்துள்ளது.
  • இமயமலையில் மிக உயர்ந்த சிகரங்களில் பெரும்பலானவை இம்மலைத்தொடரில் அமைந்துள்ளன. அதில் முக்கியமானவை எவரெஸ்ட் (8848 மீ) மற்றும் கஞ்சன் ஜங்கா (8586 மீ) ஆகும்.
  • இம்மலையில் எப்போதும் நிரந்தரமாக பனிசூழ்ந்து காணப்படுவதால் கங்கோத்திரி, சியாச்சின் போன்ற பனியாறுகள் காணப்படுகின்றன.

(ii) மத்திய இமயமலைகள் அல்லது இமாச்சல் (Lesser Himalayas or Himachal)

  • இது இமய மலையின் மத்திய மலைத் தொடராகும்.
  • வெண்கற்பாறைகள், சுண்ணாம்புப் பாறைகள், மற்றும் மணற்பாறைகள் இத்தொடரில் காணப்படுகின்றன.
  • புகழ் பெற்ற கோடை வாழிடங்களான சிம்லா, முசெளரி, நைனிடால், அல்மோரா, ரானிகட் மற்றும் டார்ஜிலிங் போன்றவை இம்மலைத் தொடரில் அமைந்துள்ளன.

(iii) வெளி இமயமலை / சிவாலிக்

  • இது மிகவும் தொடர்ச்சியற்ற மலைத் தொடர்களாகும்.
  • குறுகலான நீண்ட பள்ளத்தாக்குகள், சிறிய இமயமலைக்கும் வெளிப்புற இமயமலைக்கும் இடையில் காணப்படுகின்றன.
  • இவை கிழக்கு பகுதியில் டூயர்ஸ் (Duars) எனவும் மேற்கு பகுதியில் டூன்கள் (Duns) எனவும் அழைக்கப்படுகிறது.
  • இப்பகுதிகள் குடியிருப்புகளின் வளர்ச்சிக்கு ஏற்றதாக உள்ளது.

3. பூர்வாஞ்சல் குன்றுகள்

  • இவை இமயமலையின் கிழக்கு கிளையாகும்.
  • இது வடகிழக்கு மாநிலங்களில் பரவியுள்ளது.
  • பெரும்பாலான குன்றுகள் மியான்மர் மற்றும் இந்திய எல்லைகளுக்கிடையே காணப்படுகின்றன.
  • மற்ற மலைகள் அல்லது குன்றுகள் இந்தியாவின் உட்பகுதிகளில் பரவியுள்ளன.
  • டாப்லா, அபோர், மிஸ்மி, பட்காய்பம், நாகா, மாணிப்பூர், மிக்கீர், காரோ, காசி மற்றும் ஜெயந்தியா குன்றுகள் அனைத்தும் ஒன்றிணைந்து பூர்வாஞ்சல் மலைகள் என்று அழைக்கப்படுகின்றது.

இமயமலையின் முக்கியத்துவம்

  • தென்மேற்கு பருவக்காற்றைத் தடுத்து வட இந்திய பகுதிக்கு கனமழையைக் கொடுக்கிறது.
  • இந்திய துணைக்கண்டத்திற்கு இயற்கை அரணாக அமைந்துள்ளது.
  • வற்றாத நதிகளின் பிறப்பிடமாக உள்ளது. (எ.கா) சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா மற்றும் பிற ஆறுகள்.
  • இயற்கை அழகின் காரணமாக வடக்கு மலைகள் சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாகத் திகழ்கிறது.
  • பல கோடைவாழிடங்களும், புனித தலங்களான அமர்நாத், கேதர்நாத், பத்ரிநாத் மற்றும் வைஷ்ணவிதேவி கோயில்களும் இம்மலைத் தொடரில் அமைந்துள்ளன.
  • வனப்பொருட்கள் சார்ந்த தொழிலகங்களுக்கு மூலப்பொருட்களை அளிக்கிறது.
  • மத்திய ஆசியாவிலிருந்து வீசும் கடும் குளிர்காற்றை தடுத்து இந்தியாவை குளிரிலிருந்து பாதுகாக்கிறது.
  • இமயமலை பல்லுயிர் மண்டலத்திற்கு பெயர் பெற்றவை.
34.. காவிரி ஆறு குறித்து தொகுத்து எழுதுக

காவிரி உற்பத்தி

  • காவிரி ஆறு கர்நாடகா மாநிலத்தில் கூர்க் மாவட்டத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பிரம்மகிரி குன்றுகளில் தலைக்காவிரி என்னும் இடத்தில் உற்பத்தியாகி 850 கிலோ மீட்டர்
    நீளத்திற்கு பாய்கிறது.
  • இதில் சுமார் 416 கிலோ மீட்டர் நீளத்திற்கு தமிழ்நாட்டில் பாய்கிறது. இது கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றிற்கு இடையே சுமார் 64 கிலோ மீட்டர் தூரத்திற்கு எல்லையாக
    உள்ளது.

நீர்வீழ்ச்சி மற்றும் நீர்தேக்கம்

  • தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் என்னும் இடத்தில் நீர்வீழ்ச்சியை உருவாக்குகிறது. ஸ்டான்லி நீர்த்தேக்கம் என்று அழைக்கப்படும் மேட்டூர் அணை சேலம் மாவட்டத்தில்
    இவ்வாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.

காவிரியின் துணை ஆறுகள்

  • மேட்டூர் நீர்த்தேக்கத்தில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் பவானி ஆறு இதன் துணையாறாக வலது கரையில் காவிரியுடன் இணைகிறது. பின்னர் கிழக்கு நோக்கிப் பாய்ந்து தமிழ்நாட்டின் சமவெளிப்பகுதிக்குள் நுழைகிறது.
  • கரூரில் இருந்து 10 கி.மீ தொலைவிலுள்ள திருமுக்கூடல் என்னும் இடத்தில் வலதுகரையில் மேலும் இரண்டு துணை ஆறுகளான அமராவதி மற்றும் நொய்யல் ஆறுகள் இணைகின்றன.
  • இப்பகுதியில் ஆற்றின் அகலம் அதிகமாக இருப்பதால், இது ”அகன்ற காவிரி’ என அழைக்கப்படுகிறது.

ஸ்ரீரங்கம் தீவு

  • திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இந்த ஆறு இரண்டு கிளைகளாகப் பிரிகிறது. வடகிளை கொலேருன் அல்லது கொள்ளிடம் என்றும் தென்கிளை காவிரியாகவும் தொடர்கிறது.
  • இவ்விடத்திலிருந்து காவிரி டெல்டா சமவெளி தொடங்குகிறது. சுமார் 16 கிலோ மீட்டர்தொலைவிற்கு பாய்ந்த பின் மீண்டும் இவ்விரு கிளைகள் இணைந்து ’ஸ்ரீரங்கம் தீவை’ உருவாக்குகின்றன.

காவிரி டெல்டா

  • ‘கிராண்ட் அணைகட்’ என்றழைக்கப்படும் கல்லணை காவிரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
  • இந்த ஆறு கல்லணையைக் கடந்த பின் பல கிளைகளாகப் பிரிந்து டெல்டா பகுதி முழுவதற்கும் ஒரு வலைப்பின்னல் அமைப்பை உருவாக்கி உள்ளது.
  • காவிரி டெல்டா பகுதிகளில் கிளை ஆறுகளால் உண்டாகியுள்ள இவ்வலைப்பின்னல் அமைப்பு ’தென்னிந்தியாவின் தோட்டம்’ என்று அழைக்கப்படுகிறது.
  • பின்னர் கடலூருக்கு தெற்கே வங்க கடலில் கலக்கிறது
35.இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகளை விளக்குக.
  • உலகிலுள்ள எழுதப்பட்ட, அனைத்து அரசியலமைப்புகளை விடவும் மிகவும் நீளமானது.
  • இதன் பெரும்பாலான கருத்துகள் பல்வேறு நாடுகளின் அரசியலமைப்புகளிலிருந்து பெறப்பட்டவை.
  • இது நெகிழாத்தன்மை கொண்டதாகவும், நெகிழும் தன்மை கொண்டதாகவும் உள்ளது.
  • கூட்டாட்சி முறை அரசாங்கத்தை (மத்திய, மாநில அரசுகள்) ஏற்படுத்துகிறது.
  • இந்தியாவைச் சமயச்சார்பற்ற நாடாக்குகிறது.
  • சுதந்திரமான நீதித்துறையை வழங்குகிறது.
  • உலகளாவிய வயது வந்தோர் வாக்குரிமையை அறிமுகப்படுத்தியதோடு 18 வயது நிரம்பிய குடிமக்கள் அனைவருக்கும் எந்த வித பாகுபாடுமின்றி வாக்குரிமையை வழங்குகிறது.

36)அண்டைநாடுகளுடன் நட்புறவினைப் பேண இந்தியா பின்பற்றும் வெளியுறவுக் கொள்கையின் ஏதேனும் இரு கொள்கையை விவரி.

  • தேசிய நலனைப் பேணுதல்
  • உலக அமைதியை எய்துதல்
  • ஆயுதக் குறைப்பு
  • பிற நாடுகளுடன் நல்லுறவை வளர்த்தல்
  • அமைதியான வழிகளில் பிரச்சனைகளைத் தீர்த்தல்
  • அணி சேராக் கொள்கையின்படி சுதந்திரமான சிந்தனை மற்றும் செயல்பாடு
  • சர்வதேச விவகாரங்களில் சமத்துவம்
  • காலனியாதிக்கம், ஏகாதிபத்தியம், இனப்பாகுபாடு ஆகியவற்றிற்கு எதிரான நிலைப்பாடு

37. இந்தியாவில் GDPயில் பல்வேறு துறைகளின் பங்கினை விவரி

 

இந்திய பொருளாதாரம் பரவலாக மூன்று துறைகளாகப் பிரிக்கப்படுகிறது.

1. முதன்மைத் துறை (வேளாண்துறை)

  • வேளாண்மைத் துறையை முதன்மைத் துறை எனவும் அழைக்கலாம்.
  • இதில் வேளாண் சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் விவசாய நடவடிக்கைகள் அடங்கும்.
  • எ.கா. கால்நடை பண்ணைகள், மீன் பிடித்தல், சுரங்கங்கள், காடுகள் வளர்த்தல், நிலக்கரி போன்ற மூலப் பொருள்களை உற்பத்தி செய்தல்.

2. இரண்டாம் துறை (தொழில்துறை)

  • தொழில் துறையை இரண்டாம் துறை எனவும் அழைக்கலாம்.
  • மூலப்பொருள்களை மாற்றியமைப்பதன் மூலம் பண்டங்கள் மற்றும் பணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
  • எ.கா. இரும்பு மற்றும் எஃகு தொழில், ஜவுளித் தொழில், சணல், சர்க்கரை, சிமெண்ட், காகிதம், பெட்ரோலியம், ஆட்டோமொபைல்ஸ் மற்றும் பிற சிறுதொழில்கள் ஆகும்.

3. மூன்றாம் துறை (பணிகள் துறை)

  • பணிகள் துறையை மூன்றாம் துறை எனவும் அழைக்கலாம்.
  • அவைகள் அரசு, அறிவியல் ஆராய்ச்சி, போக்குவரத்து, வர்த்தகம், தபால் மற்றும் தந்தி, வங்கி, கல்வி, பொழுதுபோக்கு, சுகாதாரம் மற்றும் தகவல் தொழில் நுட்பம் போன்றவைகளாகும்.
  • 20 ஆம் நூற்றாண்டில் பொருளாதார நிபுணர்கள் பாரம்பரிய மூன்றாம் நிலை பணிகளை “நான்காம் நிலை” மற்றும் “ஐந்தாம் நிலை” பணிகள் துறைகளிலிருந்து மேலும் வேறுபடுத்திட முடியும் என்றனர்.

 38)பசுமைப் புரட்சி ஏன் தோன்றியது என்பதைப் பற்றி விவரி.
  • சுதந்திரத்திற்கு பிறகு, இந்தியா ஒரு திட்டமிட்ட வளர்ச்சியினை பின்பற்ற முடிவு செய்தது.
  • விவசாயத்தில் ஆரம்பத்தில் கவனம் செலுத்திய பின்னர், தொழில்மயமாக்கலுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. இந்தியாவில் ஏற்பட்டதொடர்ச்சியான வறட்சி, உணவு தானியங்களின் இறக்குமதியைச் சார்ந்திருக்க தள்ளப்பட்டது. இருப்பினும், அப்பொழுது இருந்த அந்நிய செலாவணி இருப்பானது, திறந்த சந்தைக் கொள்முதல் மற்றும் தானியங்களின் இறக்குமதிக்கு அனுமதிக்கவில்லை.
  • பணக்கார நாடுகளிலிருந்து உணவு தானியங்களை சலுகை விலையில் இந்தியா கோர வேண்டியிருந்தது. 1960 களின் முற்பகுதியில் அமெரிக்கா தனது பொது சட்டம் 480 (P.L. 480) திட்டத்தின் மூலம் இந்தியாவுக்கு உதவி வழங்கியது.
  • அதிக மக்கள் தொகையைக் கொண்ட வளர்ந்து வரும் ஒரு நாடு புரட்சிக்கு சாத்தியமான தேர்வாளராக கருதப்பட்டது. எனவே அமெரிக்க நிர்வாகம் மற்றும் ஃபோர்டு அறக்கட்டளை போன்ற மனிதநேய அமைப்புகள் உணவு உற்பத்தியை அதிகரிக்க கோதுமை மற்றும் அரிசியின் உயர் ரக விளைச்சல் வகைகளுக்கான (High Yielding Varieties) திட்டத்தை வகுத்து அறிமுகப்படுத்தியது.
  • இந்தத் திட்டம் நீர்ப்பாசனம் இருக்கும் இடத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது. திட்டங்களின் முடிவுகள் உறுதி செய்யப்பட்டதால், அதிக எண்ணிக்கையிலான மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டது.
  • இவ்வாறு, பசுமைப்புரட்சியானது நாட்டில் தோன்றி உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற வழிவகுத்தது. உயர் ரக விதைகளான (HYV) அரிசி மற்றும் கோதுமை போன்ற உணவு தானியங்கள் பயிரிடப்பட்ட பகுதியில் உற்பத்தியை அதிகரித்தது.
39)
1.வடகிழக்கு பருவக்காற்று மற்றும் தென்மேற்கு பருவக்காற்று

வடகிழக்கு பருவக்காற்று

  • வடகிழக்குப் பருவக்காற்றின் காலம் அக்டோபர் முதல் டிசம்பர் வரை
  • இக்காற்று நிலப்பகுதியிலிருந்து வங்காள விரிகுடா கடலை நோக்கி வீசுகிறது
  • இப்பருவக்காற்றின் மூலம் கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடாகவின் உட்பகுதிகள் நல்ல மழையைப் பெறுகின்றன.

தென்மேற்கு பருவக்காற்று

  • தென்மேற்கு பருவக்காற்றின் காலம் ஜுன் முதல் செப்டம்பர் வரை
  • இக்காற்று இந்தியப் பெருங்கடலில் இருந்து நிலப்பகுதியை நோக்கி வீசுகிறது
  • இப்பருவக்காற்றின் மூலம் மேற்கு தொடர்ச்சி மலகளின் மேற்கு சரிவுகள், வடகிழக்கு இந்திய பகுதிகள் குறிப்பாக மேகாலயா நல்ல மழையைப் பெறுகின்றன.
2.வண்டல் மண் மற்றும் கரிசல் மண்

வண்டல் மண்

  • சிற்றோடைகள் மற்றும் ஆறுகளின் வேகம் குறையும் பொழுது படிய வைப்பதினால் உருவாகின்றன
  • புதிய வண்டலான காதர் வெளிர் நிறமும், பழைய வண்டலான பாங்கர் அடர் நிறம் உடையது
  • சமவெளிப் பகுதிகள், ஆற்றுப் பள்ளதாக்குகளிலும் காண்ப்படுகிறது
  • நெல், கோதுமை, கரும்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் பயிரிட ஏற்ற மண்

கரிசல் மண்

  • தக்காணப் பகுதியில் உள்ள பசால்ட் பாறைகளில் இருந்து உருவானது.
  • கருப்பு நிறமாக உள்ளது
  • பீடபூமி பகுதிகளில் காண்ப்படுகிறது
  • பருத்தி, தினை வகைகள், புகையிலை மற்றும் கரும்பு பயிரிட ஏற்ற மண்

3. மலைப்பகுதிகள் சமவெளிகளை விட குளிரானவை

  • மலைப்பகுதிகள் கடல் மட்டத்திலிருந்து உயரமானது.
  • சமவெளிகள் கடல் மட்டத்திலிருந்து உயரம் குறைவானது.
  • புவி பரப்பிலிருந்து மேலே செல்ல செல்ல வெப்பநிலை குறைகிறது
40)காந்தியடிகளை ஒரு மக்கள் தலைவராக உருமாற்றம் செய்ய உதவிய காரணிகள் என்ன என்று ஆராயவும்.

தென்னாப்பிரிக்காவில் சத்தியாகிரகம்

  • டிரான்ஸ்வாலில் வசித்த இந்தியர்கள் தலைவாரியாக 3 பவுண்டுகளை செலுத்த வேண்டியிருந்தது. அவர்களுக்ககென குறிக்கப்பட்ட பகுதிகளை விடுத்து வேறு இடங்களில் அவர்கள் நிலத்தை சொந்தமாக வைத்துக் கொள்ள முடியாத நிலை இருந்தது. மேலும் இரவு 9 மணிக்கு பிறகு அனமதியின்றி வெளியிடங்களுக்கு செல்ல முடியாத நிலையும் இருந்தது. இத்தகைய நியாமற்ற சட்டங்களை எதிர்த்து அவர் போட்டத்தை தொடங்கினார்.
  • தென்னாப்பிரிக்காவில் குடியேற்றம் மற்றும் இனவேறுபாடு ஆகிய பிரச்சனைகளுக்காகப் போராட சத்தியாகிரக சோதனைகளை அவர் மேற்கொண்டார்.
  • குடிபெயர்ந்தோரை பதிவு செய்யும் அலுவலகங்கள் முன் கூட்டங்களும், ஆர்பாட்டங்களும் நடத்தினார். காவல்துறையினர் வன்முறையை கட்டவிழ்த்துவிட்ட போதிலும் அவர் எவ்வித எதிர்ப்பையும் காட்டவில்லை. காவல்துறையினாரின கடுமையான நடவடிக்கைகளையும் பொருட்படுத்தாமல் பேராட்டத்தை தொடர்ந்தார்.
  • இறுதியாக ஒப்பத்த தொழிலாளர்கள் மீது விதிக்கப்பட்ட தலைவரி ஸ்மட்ஸ்-காந்தி ஒப்பந்தத்தின்படி ரத்து செய்யப்பட்டது.

இந்தியாவில் காந்தியடிகளின் தொடக்ககால சத்தியாகிரகங்கள்

  • இந்திய வருைகயின் போது காந்தியடிகள் தான் சந்தித்த கோபால கிருஷ்ண கோகலே மீது பெரும் மரியாதை கொண்டு அவரையே தமது அரசியல் குருவாக ஏற்றார்.
  • கோகலேயின் அறிவுரையின் படி, அரசியலில் ஈடுபடுவதற்கு முன் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் காந்தியடிகள் பயணம் மேற்கொண்டார். இதனால் மக்களின் நிலையை அவர் அறிந்து கொள வழி பிறந்தது.
  • இது போன்ற ஒரு பயணத்தின்போதுதான் தமிழகத்தில் தமது வழக்கமான ஆடைகளை விடுத்து சாதாரண வேட்டிக்கு காந்தியடிகள் மாறினார்.

சம்பரான் சத்தியாகிரகம்

  • பீகாரில் உள்ள சம்பரானில் தீன்காதியா முறை பின்பற்றப்பட்டது. இந்த சுரண்டல் முறையில் இந்திய விவசாயிகள் தங்களின் நிலத்தில் இருபதில் 3பங்கு  அவுரி (இண்டிகோ) பயிரிட ஐரோப்பிய பண்ணையாளர்களால் கட்டாயப்படுத்தப்பட்டனர். இந்த வகையில் விவசாயிகள் அதிக சிரமங்களை சந்தித்தனர்.
  • காந்தியடிகள் சம்பரானுக்கு சென்றார். காவல்துறையினர் அவரை அங்கிருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொண்டனர். இச்செய்தி பரவியதையடுத்து ஆயிரக்கணக்கானோர் அவருக்கு ஆதரவாகக் கூடினார்.
  • ராஜேந்திர பிரசாத் மற்றும் பிரஜ்கிஷோர் பிரசாத் ஆகியோர் காந்தியடிகளுக்குத் துணையாக செயல்பட்டனர். அதன் பிறகு துணைநிலை ஆளுநர் ஒரு குழுவை உருவாக்கினார். காந்தியடிகள் அக்குழுவில் ஒரு உறுப்பினர் ஆனார்.
  • இண்டிகோ பண்ணையாளர்கள், விவசாயிகள் மீது நடத்திய அடக்குமுறையை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் தீன் காதிய முறையை ரத்து செய்ய அந்தக்குழு பரிந்துரைத்தது.
  • சம்பரான சத்தியா கிரகத்தின் வெற்றியை அடுத்து 1918இல் அகமதாபாத் மில் வேலைநிறுத்தம், 1918இல் கேதா சத்தியா கிரகம் ஆகியன காந்தியடிகளை ஒரு மக்கள் தலைவராக உருவாக்கின
41)காலக்கோடு

1920-கிலாபாத்இயக்கம் 
1927-சைமன்குழுஅமைத்தல்
1928- சைமன் குழு இந்தியா வருகை

1929-சைமன் குழு சென்னை வருகை

1930- முதல் வட்டமேசை மாநாடு

1931-இரண்டாம் வட்டமேசை மாநாடு

1932-மூன்றாம்வட்டமேசை மாநாடு
42) உலக வரைபடம் 



43)1. ஜெர்மனியில் ஹிட்லரின் எழுச்சிக்கு இட்டுச்சென்ற சூழ்நிலைகளைக் கண்டறியவும்.
  • 1919ஆம் ஆண்டில், ஏழு நபர்களைக் கொண்ட ஒரு குழுவானது, மியூனிச் நகரில் சந்தித்து தேசிய சோசலிஸ்ட் ஜெர்மன் உழைப்பாளர் கட்சி சுருக்கமாக நாசி (Nazi) கட்சியை நிறுவியது.
  • ஹிட்லரும் அவர்களுள் ஒருவராக இருந்தார்.
  • முதல் உலகப்போரின் போது பவேரியாவின் படையில் பணியாற்றினார்.
  • அவரின் ஆற்றல் மிக்க உரை வீரர்களைத் தட்டி எழுப்பியது. 1923இல் பவேரியாவில் அதிகாரத்தைக் கைப்பற்ற அவர் முயற்சியை மேற்கொண்டார்.
  • மியூனிச் நகரில் முன்கூட்டியே திட்டமிடப்படாமல் அவர் மேற்கொண்ட தேசியப்புரட்சி அவரைச் சிறையில் தள்ளியது. சிறையில் இருந்தபோது தனது அரசியல் சிந்தனைகளை உள்ளடக்கிய சுயசரிதை நூலான மெயின் காம்ப் (Mein kampf – எனது போராட்டம்) எனும் நூலை எழுதினார்.
  • 1932இல் நடைபெற்ற குடியரசுத்தலைவர் தேர்தலில் கம்யூனிஸ்டுகள் 6,000,000 வாக்குகளைப் பெற்றனர்.
  • முதலாளிகள், சொத்து உரிமையாளர்கள் நாசிசத்தை ஆதரிக்க தொடங்கினர்.
  • இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி ஹிட்லர் தவறான வழியில் அதிகாரத்தைக் கைப்பற்றினார்
2.2. நீதிக்கட்சியின் தோற்றத்திற்கான பின்புலத்தை விளக்கி சமூக நீதிக்கான அதன் பங்களிப்பைச் சுட்டிக் காட்டவும்.

நீதிக்கட்சியின் தோற்றம்:-

  • தமிழக அரசியில் களங்களில் பிராமணர் ஆதிக்கம் தொடர்ந்ததால் பிராமணர் அல்லாத டாக்டர் நடேசனார், சர் பிட்டி தியாகராயர், டி.எம். நாயர் மற்றும் அலமேலுமங்கை தாயாரம்மாள் உட்பட 30 முக்கிய பிராமணர் அல்லாத தலைவர்கள் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை 1916 நவம்பர் 20இல் உருவாக்கினர்.
  • தமது கொள்கைகளைப் பரப்புரை செய்வதற்காகத் தமிழில் திராவிடன், ஆங்கிலத்தில் ஜஸ்டிஸ், தெலுங்கில் ஆந்திர பிரகாசிகா ஆகிய பத்திரிக்கைகளை வெளியிட்டது.
  • ஜஸ்டிஸ் என்ற ஆங்கில பத்திரக்கையின் பேரில் 1920 நீதிகட்சியாக பெயரமாற்றம் பெற்றது.
  • 1920இல் சென்னை மாகாண தேர்தலில் வெற்றி பெற்று A. சுப்பராயலு சென்னை மாகாணத்தின் முதலமைச்சரானார்.

சமூக நீதி பங்களிப்பு:-

  • நீதிக்கட்சியே நாட்டில் பிராமணர் அல்லாதவர்களின் மூலாதாரமாய் விளங்கிற்று.
  • நீதிக்கட்சி அரசாங்கம் மக்கள் தொகையில் பெரும்பாலானவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கியது.
  • சாதி மறுப்புத் திருமணங்களிற்கு தடையாக இருந்து சட்டச் சிக்கல்களை அகற்றியது.
  • பொது இடங்களை ஒடுக்கப்பட்ட மக்கள் பயன்டுத்த நடவடிக்கை எடுத்தது.
  • 1921இல் அரசியலில் பெண்கள் பங்கேற்பதை முதன் முலாக கொண்டு வந்தது.
  • 1924இல் பணியாளர் தேர்வு வாரியத்தை அறிமுகப்படுத்தி இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்தியது.
  • 1926இல் இந்து அறநிலையத்துறை சட்டத்தை கொண்டு வந்து கோவில் நிர்வாகத்தை நிர்வகிக்க வழி செய்தது.
  • ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்ட இலவச மனைப்பட்டாகள் வழங்கியது.
  • மதிய உணவுத் திட்டம் சென்னையில் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது..
  • தேவதாசி முறையை ஒழித்தது



கருத்துரையிடுக

0 கருத்துகள்