Ad Code

Ticker

6/recent/ticker-posts

மத்திய அரசு பணி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்

 மத்திய அரசு பணி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் 


 விழுப்புரம்,செப்27-விழுப்புரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மத்திய அரசு பணி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது.

மத்திய அரசு பணிக்கான தேர்வு


விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இப்போட்டி தேர்வில் கலந்துகொண்டு பல்வேறு மாணவர்கள் தேர்ச்சி பெற்று அரசு பணிகளில் சேர்ந்துள்ளனர்.

 இந்நிலையில் தற்போது மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு விதமான பணிக்காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
இப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி பட்டப்படிப்பு ஆகும் இவற்றுக்கு https://ssc.nic.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 8.10.2022 ஆகும்.

இலவச பயிற்சி வகுப்புகள்



எனவே இத்தேவுக்கு விண்ணப்பித்த பட்டதாரிகளுக்கு விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் வருகிற 8.10.2022 முதல் ஒவ்வொரு சனி ஞாயிற்றுக்கிழமைகளில் போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயனடைய விரும்பும் தேர்வுக்கு விண்ணப்பித்த நபர்கள் 7.10 .2022க்குள் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் இப் பயிற்சி வகுப்புகள் குறித்து கூடுதல் விவரம் தெரிந்து கொள்ள 9499055906 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். எனவே விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டப் படிப்பு படித்த இளைஞர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்படலாம் இந்த தகவலை மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்