Ad Code

Ticker

6/recent/ticker-posts

டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு வெளியீடு:

நில அளவையாளர்,வரைவாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

 சென்னை,ஆக.1-நில அளவையாளர்,வரைவாளர் ,அளவர் மற்றும் உதவி வரைவாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டு இருக்கிறது. அதன்படி 798 நிள அளவையாளர், 236 வரைவாளர், 55 அளவர், மற்றும் உதவி வரைவாளர் என மொத்தம் 1089 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வருகிற 27ஆம் தேதி கடைசி நாள் ஆகும். தேர்வர்கள் விண்ணப்பித்த விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ள அடுத்த மாதம் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்படும். இவர்களுக்கான தேர்வு இரண்டு தாள்களாக நடத்தப்பட உள்ளது. அந்த வகையில் நவம்பர் மாதம் 6-ந் தேதி காலை 9:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை முதல் தாள் தேர்வும். அதே நாள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை இரண்டாம் தாள் தேர்வும் நடைபெற உள்ளன. இதில் முதல் தாள் தேர்வு ஐ.டி.ஐ தரத்திலும், இரண்டாம் தாள் தேர்வில் தமிழ் தகுதித்தேர்வு எஸ். எஸ். எல். சி தரத்திலும் பொதுப்பாடம் ஐ.டி.ஐ தரத்திலும் வினாக்கள் கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. முதல் தாள் தேர்வு 200 வினாக்கள் கேட்கப்பட்டு 300 மதிப்பெண்களுக்கும், இரண்டாம் தாள் தேர்வில் தகுதி தேர்வு 150 மதிப்பெண்ணுக்கும். பொதுப்பாடம் 150 மதிப்பெண்ணுக்கும் நடக்க உள்ளது இரண்டாம் தாள் தேர்வில் தகுதி தேர்வில் 40 சதவீதம் மதிப்பெண் எடுத்தால் மட்டுமே பொதுப்பாட மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படும். அந்த வகையில் மொத்தம் 450 மதிப்பெண்ணுக்கு வினாக்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியுடையோர் www.tnpsc.gov எனும் இணையளத்தில் ஆகஸ்ட் 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.


.

கருத்துரையிடுக

0 கருத்துகள்