Ad Code

Ticker

6/recent/ticker-posts

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் இரண்டாம் திருப்புதல் தேர்வுக்கான 2022 விடைகள்

1. பன்னாட்டுச் சங்கம் உருவாக்கப்படுவதில் முன்முயற்சி எடுத்தவர் யார்?

  1. ரூஸ்வெல்ட்
  2. சேம்பெர்லின்
  3. உட்ரோ வில்சன்
  4. பால்டுவின்

விடை ; உட்ரோ வில்சன்

2.எந்த ஆண்டில் உடன்கட்டை ஏறுதல் (சதி) ஒழிக்கப்பட்டது?

  1. 1827
  2. 1829
  3. 1826
  4. 1927

விடை ;  1829

3.  வேலூர் புரட்சிக்குப் பின் திப்பு சுல்தானின் மகன்கள் எங்கு அனுப்பப்பட்டார்கள்?

  1. கல்கத்தா
  2. மும்பை
  3. டெல்லி
  4. மைசூர்

விடை ; கல்கத்தா

4.அணிசேரா இயக்கத்தின் மாநாட்டில் இந்திய பிரதிநிதியாக கலந்து கொண்டவர்

அ) காந்தியடிகள்

ஆ) லால்பகதூர் சாஸ்திரி

இ) ஜவஹர்லால் நேரு

ஈ) வல்லபாய் பட்டேல்

விடை-இ) ஜவஹர்லால் நேரு


5. கூற்று: ஜோதிபா பூலே ஆதரவற்றோருக்கான விடுதிகளையும், விதவைகளுக்கான விடுதிகளையும் திறந்தார்.

காரணம்: ஜோதிபா பூலே குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார். விதவை மறுமணத்தை ஆதரித்தார்.

  1. கூற்று சரி. ஆனால் காரணம் கூற்றுக்குப் பொருத்தமானதாக இல்லை
  2. கூற்று சரி. காரணம் கூற்றுக்குப் பொருத்தமானதாக உள்ளது.
  3. இரண்டுமே தவறு.
  4. காரணம் சரி. ஆனால் கூற்று பொருத்தமற்றதாக உள்ளது.

விடை ; கூற்று சரி. ஆனால் காரணம் கூற்றுக்குப் பொருத்தமானதாக இல்லை

 

6. ___________ மண்ணில் இரும்பு ஆக்ஸைடு அதிகமாக காணப்படுகிறது

  1. வண்டல்
  2. கரிசல்
  3. செம்மண்
  4. உவர் மண்

விடை ; செம்மண்

7.


அ) வெள்ளப் பெருக்கு கால்வாய் ஆ) வற்றாத கால்வாய்
இ) ஏரிப்பாசனம் ஈ) கால்வாய்
விடை ; ஏரிப்பாசனம்  

 

8. மிக அதிகமாக கிடைக்ககூடிய ஆற்றல் வளம்

  1. உயிரி சக்தி
  2. சூரியன்
  3. நிலக்கரி
  4. எண்ணெய்

விடை : சூரியன்

 

9. சோட்டா நாகபுரி பீடபூமி பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு கருவாக இருப்பது

  1. போக்குவரத்து
  2. கனிமப்படிவுகள்
  3. பெரும் தேவை
  4. மின்சக்தி சக்தி கிடைப்பது

விடை : கனிமப்படிவுகள்

 

10. மக்கள் தொகையின் பல்வேறு அம்சங்கள் பற்றிய அறிவியல் பூர்வமான படிப்பு __________

  1. வரைபடவியல்
  2. மக்களியல்
  3. மானுடவியல்
  4. கல்வெட்டியல்

விடை : மக்களியல்

 

11. ஆளுநர் யாரை நியமனம் செய்வதில்லை?

  1. முதலமைச்சர்
  2. அரசுப் பணியாளர் தேர்வாணயத்தின் தலைவர்
  3. மாநில தலைமை வழக்குரைஞர்
  4. உயர் நீதிமன்ற நீதிபதிகள்

விடை : உயர் நீதிமன்ற நீதிபதிகள்

 

12. 1954இல் இந்தியா மற்றும் சீனாவால் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் இது தொடர்பானது.

  1. வியாபாரம் மற்றும் வணிகம்
  2. சாதாரண உறவுகளை மீட்டெடுப்பது
  3. கலாச்சார பரிமாற்றங்கள்
  4. ஐந்து கொள்கைகளுடன் இணைந்திருத்தல்

விடை ; ஐந்து கொள்கைகளுடன் இணைந்திருத்தல்

 

13. இந்திய அரசாங்கம் 1991இல் ஐ அறிமுகப்படுத்தியது

  1. உலகமயமாக்கல்
  2. உலக வர்த்த அமைப்பு
  3. புதிய பொருளாதார கொள்கை
  4. இவற்றில் எதுவுமில்லை

விடை : உலகமயமாக்கல்

 

14. _________________ இந்தியாவில் தோன்றியதால் உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற வழி வகுத்தது

  1. நீலப் புரட்சி
  2. வெள்ளைப் புரட்சி
  3. பசுமைப் புரட்சி
  4. சாம்பல் புரட்சி

விடை : பசுமைப் புரட்சி

 

 பகுதி-II

சுருக்கமாக விடையளிக்கவும்

15. முதல் உலகப்போருக்கு் பிந்தைய உலகத்தின் மூன்று முக்கிய சர்வாதிகாரிகள் யாவர்?

  1. முசோலின் – இத்தாலி
  2. ஹிட்லர் – ஜெர்மனி
  3. பிராங்கோ – ஸ்பெயின்

 

16.  முத்து துறைமுக நிகழ்வை விவரி

  • 1941 டிசம்பரில் ஹவாயிலுள்ள அமெரிக்கக் கப்பற்படைத் தளமான முத்துத் துறைமுகத்தின் மீது ஜப்பானிய விமானப்படைகள் முன்னறிவிப்பின்றி பெரும்தாக்குதலைத் தொடுத்தன.
  • அமெரிக்காவின் பசிபிக் கப்பற்படையை முடக்கிவிட்டால் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுக்கும்போது எதிர்ப்பேதும் இருக்காது என ஜப்பான் நினைத்ததே இதற்குக் காரணமாகும்.
  • இத்தாக்குதலில் பல போர்க்கப்பல்களும் போர்விமானங்களும் அழிக்கப்பட்டன. அமெரிக்க வீரர்கள் பலர் கொல்லப்பட்டனர்.
  • இதனைத் தொடர்ந்து அமெரிக்கா ஜப்பான் மீது போர்ப் பிரகடனம் செய்தது. சீனாவும் பிரிட்டனும் அமெரிக்காவுடன் இணைந்தன.

 

17. இராமலிங்க சுவாமிகளின் சீர்திருத்தங்கள் குறித்து சிறுகுறிப்பு வரைக.

  • இராமலிங்க சுவாமிகள் தன்னுடைய அன்பையும் இரக்கத்தையும் செடிகொடிகள் உட்பட அனைத்து உயிரினங்களிடமும் காட்டினார். இதை அவர் ஜீவகாருண்யம் என்றார்.
  • 1865இல் சமரச வேத சன்மார்க்க சங்கம் எனும் அமைப்பை நிறுவினார். பின்னர் அது சமரசசுத்த சன்மார்க்க சத்ய சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
  • 1866இல் தென்னிந்தியாவில் ஏற்பட்ட கொடிய பஞ்சத்தைக் கணக்கில் கொண்டு 1867இல் சாதி எல்லைகளைத் தாண்டி அனைத்து மக்களுக்குமான இலவச உணவகத்தை வடலூரில் நிறுவினார்.

 

18. களக்காடு போரின் முக்கியத்துவம் யாது?

  • நவாப் கூடுதல் படைகளை மாபூஸ்கானுக்கு அனுப்பி திருநெல்வேலிக்குச் செல்லும் படையை பலப்படுத்தினார்.
  • மேலும் கம்பெனியின் 1000 சிப்பாய்களோடு நவாபால் அனுப்பப்பட்ட 600க்கும் மேற்பட்ட படை வீரர்களையும் மாபூஸ்கான் பெற்றார்.
  • மேலும் அவருக்கு கர்நாடகப் பகுதியிலிருந்த குதிரைப் படை மற்றும் காலாட்படையின் ஆதரவும் இருந்தது.
  • மாபூஸ்கான் களக்காடு பகுதியில் தனது படைகளை நிலைநிறுத்தும் முன்பாக திருவிதாங்கூரின் 2000 வீரர்கள் பூலித்தேவரின் படைகளோடு இணைந்தனர்.
  • களக்காட்டில் நடைபெற்றப் போரில் மாபூஸ்கானின் படைகள் தோற்கடிக்கப்பட்டன.

 

19. திருச்சிராப்பள்ளி பிரகடனத்தின் (1801) முக்கிய கூறுகளைத் தருக.

  • மருது சகோதரர்கள் ஜூன் 1801இல் நாட்டின் விடுதலையை முன்னிறுத்திய ஒரு பிரகடனத்தை வெளியிட்டனர் இதுவே ‘திருச்சிராப்பள்ளி பேரறிக்கை’ என்றழைக்கப்படுகிறது.
  • பிரிட்டிஷாருக்கு எதிராக மண்டல, சாதி, சமய, இன வேறுபாடுகளைக் கடந்து நிற்பதற்காக முதலில் விடுக்கப்பட்ட அறைகூவலே 1801ஆம் ஆண்டின் பேரறிக்கை ஆகும்.
  • இப்பேரறிக்கை திருச்சியில் அமையப்பெற்ற நவாபின் கோட்டையின் முன்சுவரிலும், ஸ்ரீரங்கம் கோவிலின் சுற்றுச் சுவரிலும் ஒட்டப்பட்டது.
  • ஆங்கிலேயருக்கு எதிராகச் செயல்பட விழைந்த தமிழகப் பாளையக்காரர்கள் பலரும் ஒன்று திரண்டனர்.
  • சின்ன மருது ஏறத்தாழ 20,000 ஆட்களை ஆங்கிலேயர்களுக்கு எதிராகத் திரட்டினார்.
  • வங்காளம், சிலோன், மலேயா ஆகிய இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரிட்டிஷ் படைகள் விரைந்து வந்தன.
  • புதுக்கோட்டை, எட்டையபுரம் மற்றும் தஞ்சாவூரின் அரசர்கள் பிரிட்டிஷாருடன் கைகோர்த்தார்கள்.
  • ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கை என்ற உத்தி விரைவில் பாளையக்காரர்களின் படைகளில் பிரிவினையை ஏற்படுத்தியது.

 

20. இந்தியாவில் காணப்படும் மண்வகைகளின் பெயர்களைப் பட்டியலிடுக.

இந்தியாவில் காணப்படும் மண்வகைகளை 8 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவை

  1. வண்டல் மண்
  2. கரிசல் மண்
  3. செம்மண்
  4. சரளை மண்
  5. காடு மற்றும் மலை மண்
  6. வறண்ட பாலை மண்
  7. உப்பு மற்றும் காரமண்
  8. களிமண் மற்றும் சதுப்பு நில மண

 

21. கனிமங்கள் மற்றும் அதன் வகைகள் யாவை?

  • ஒரு குறிப்பிட்டவேதியியல் மற்றும் இயற்பியல் பண்புகளைக் கொண்ட உயிருள்ள மற்றும் உயிரற்ற இயற்கை மூலங்கள் கனிமங்கள் ஆகும்.
  • வேதியியல் மற்றும் இயற்பியல் பண்புகளின் அடிப்படையில் கனிமங்கள் இரண்டு பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன.
  1. உலோகக் கனிமங்கள்
  2. அலோகக் கனிமங்கள

 

22. நிலக்கரியின் வகைகளை அதன் கரிம அளவுகளுடன் குறிப்பிடுக

  • நிலக்கரி என்பது எளிதில் எரியக்கூடிய உயிரின படிமங்கள் கொண்ட ஒரு நீரக கனிமம் ஆகும். இது படிவுப் பாறைகளில் கிடைக்கிறது.
  • ஒரு நாட்டின் தொழிற்சாலை வளர்சசிக்கு மிக இன்றியமையாததாக இருப்பதால் இது கருப்பு தங்கம் (Black gold) என அழைக்கப்படுகிறது.
ஆந்திரசைட் 80 முதல் 90%
பிட்டுமினஸ் 60 முதல் 80%
பழுப்பு நிலக்கரி 40 முதல் 60%
மரக்கரி40%த்திற்கும் குறைவு. 

 

23. ’வேளாண்மை’–வரையறு.

வேளாண்மை என்பது குறிப்பிடப்பட்ட பயிர்களை உற்பத்தி செய்தும் மற்றும் கால்நடைகளை வளர்த்தும் மக்களுக்கு உணவையும் கால்நடைகளுக்கு தீவனத்தையும், நார் மற்றும் தேவையான இதர பொருள்களையும் வழங்குவதாகும்.

 

24. ஆளுநராக நியமிக்கப்படுவதற்கான தகுதிகள் யாவை?

  • அவர் இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
  • 35 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.
  • நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது சட்டமன்ற உறுப்பினராகவோ இருத்தல் கூடாது. அவ்வாறு இருப்பின் அவர் ஆளுநராக பதவியேற்கும் பொழுது தாமாகவே அப்பதவி காலியாகிவிடும்.
  • மேலும் அவர், இலாபம் தரும் எந்த தொழிலிலும் ஈடுபடக்கூடாது.

 

25. சார்க் உறுப்பு நாடுகளை பட்டியலிடுக

இந்தியா பூடான் நேபாளம்
மாலத்தீவு பாகிஸ்தான் இலங்கை
ஆப்கானிஸ்தான்வங்காளதேசம்

 

26. உலகமயமாக்கல் என்றால் என்ன?

உலகமயமாக்கல் என்பது உலக பொருளாதாரத்துவ நாடுகளை ஒருங்கிணைப்பதாகும். அடிப்படையில் உலகமயமாக்கல், சர்வதேசமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் செயல்முறையை குறிக்கிறது.

 

27. FAO வின்படி உணவு பாதுகாப்பை வரையறு.

“எல்லா மக்களும், எல்லா நேரங்களிலும், போதுமான, பாதுகாப்பான மற்றும் சத்தான உணவுக்கான உடல், சமூக மற்றும் பொருளாதார அணுகுமுறையை கொண்டிருக்கும் போது, அவர்களின் உணவுத் தேவைகளையும், சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான உணவு விருப்பங்களையும் பூர்த்தி செய்வதில் உணவு பாதுகாப்பு இருக்கிறது.” (FAO, 2009).

 

28. பல்நோக்குத் திட்டம் என்றால் என்ன? ஏதேனும் இரண்டு இந்திய பல்நோக்கு திட்டங்கள் பற்றி எழுதுக

இது ஒரு அறிவியல் முறையிலான நீர்வள மேலாண்மை திட்டமாகும். ஆற்றின் குறுக்கே பல்வேறு நோகக்கங்களுக்காக அணைகளைக் கட்டுவதால் இவை பல்நோக்கு ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்கள் என்று அழைக்கப்படுகிறது.

பக்ரா நங்கல் அணை

  • சடெலஜ் ஆற்றின் மீது கட்டப்பட்ட மிகப்பெரிய பல்நோக்கு இந்திய திட்டங்களில் ஒன்று
  • பக்ராநங்கல் அணை உலகின் மிக உயர்ந்த அணைகளில் ஒன்று
  • 10,000 மில்லியனுக்கு அதிகமான தண்ணீரை சேமிக்கும் திறன் கொண்டது
  • பஞ்சாப், ஹரியானா மற்றும் இராஜஸ்தான் பகுதிகள் பயனடைகின்றன.

ஹிராகுட் திட்டம்

  • மகாநதி ஆற்றின் மீது கட்டப்பட்ட மிகப்பெரிய பல்நோக்கு இந்திய திட்டங்களில் ஒன்று.
  • இது உலகின் மிக நீளமான அணை

பகுதி-III

விரிவாக விடையளிக்கவும்

29. இரண்டாம் உலகப்போரின் விளைவுகளை ஆய்வு செய்க

உலகம் இரு அணிகளாகப் பிரிதல்:-

இரண்டாவது உலகப்போர் உலகில் அடிப்படையானதும் முக்கியமானதுமான பலமாற்றங்களை ஏற்படுத்தியது. வல்லரசுகள் தலைமையிலான அணிகளைக் கொண்ட உலகம் இரு துருவங்களானது. ஒரு அணி கம்யூனிச எதிர்ப்புக் கருத்துக்களைக் கொண்ட அமெரிக்காவால் தலைமையேற்கப்பட்டது. மற்றொரு அணிக்கு சோவியத் யூனியன் தலைமை தாங்கியது. கம்யூனிச நாடுகள், கம்யூனிசமல்லாத நாடுகள் என ஐரோப்பா இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

அணு ஆயுதப் பரவல்:-

அமெரிக்க ஐக்கிய நாடுகளும் சோவியத் யூனியனும் அணுஆயுதங்களை அதிகரிக்கும் போட்டியில் இறங்கி, ஆயுதங்களைப் பெருக்கிக் குவித்தன. பல நாடுகளில் இராணுவத்திற்கான செலவினங்கள் உச்சத்தை எட்டின.

பன்னாட்டு முகமைகள்:-

பல பன்னாட்டு முகமைகள் குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை, உலக வங்கி, பன்னாட்டு நிதியம் (International Monetary Fund) போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டன.

காலனி நீக்கச் செயல்பாடு:-

காலனி நீக்கச் செயல்பாட்டின் அடிப்படையில் காலனியாதிக்கச் சக்திகள் தங்களது காலனிகளுக்கு விடுதலை வழங்கவேண்டிய கட்டாயத்திற்குள்ளாயினர். அதில் இந்தியா முதலாவதாய் சுதந்திரம் பெற்றது.

30)ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகளில் வேலுநாச்சியாரின் சிறப்புகளை விவரிக்கும்?










31. இந்தியச் சமூகத்தின் புத்தெழுச்சிக்கு இராமகிருஷ்ண பரமஹம்சரும் விவேகானந்தரும் ஆற்றிய தொண்டினைத்  திறனாய்வு செய்க

இராமகிருஷ்ண பரமஹம்சர்

  • கல்கத்தாவுக்கு அருகேயிருந்த தட்சிணேசுவரம் என்னும் ஊரைச்சார்ந்த எளிய அர்ச்சகரான இராமகிருஷ்ண பரமஹம்சர்
  • புனிதத்தாயான கடவுள் காளியின் தீவிர பக்தரான அவர் அக்கடவுளின் திருவிளையாடல்கள் முடிவற்றவை என அறிவித்தார்.
  • அவருடைய கருத்தின்படி அனைத்து மதங்களும் உலகளாவிய, எல்லோருக்குமான மூலக்கூறுகளைக் கொண்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினால் அவை வீடுபேற்றுக்கு இட்டுச்செல்லும்.
  • மனிதர்களுக்குச் செய்யப்படும் சேவையே கடவுளுக்குச் செய்யப்படும் சேவையாகும் என்றார்.

சுவாமி விவேகானந்தர்

  • நடைமுறை வேதாந்தமான மனித குலத்திற்குத் தொண்டு செய்தல் எனும் கோட்பாட்டைப் பரிந்துரைத்தார்.
  • பண்பாட்டுத் தேசியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார்
  • இந்து சமூகத்திற்குப் புத்துயிரளிக்க இந்திய இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்தார்.
  • இந்து சமயச்சடங்குகளில் கலந்துகொள்ளக்கூடாதென
    ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒடுக்கப்பட்ட மக்களும் அதுபோன்ற சடங்குகளில் கலந்துகொள்ளக்
    கட்டாயம் அனுமதிக்கப்படவேண்டும் என்றார்.
  • விவேகானந்தரின் செயலாக்கமிக்க கருத்துகள் மேற்கத்தியக் கல்வி பயின்ற வங்காள இளைஞர்களிடையே அரசியல் மாற்றங்களுக்கான நாட்டத்தை ஏற்படுத்தியது.
  • வங்கப்பிரிவினையைத் தொடர்ந்து நடைபெற்ற சுதேசி இயக்கத்தின் போது இளைஞர்களில் பலர் விவேகானந்தரால் ஊக்கம் பெற்றனர்.

 

32. வேலூரில் 1806இல் வெடித்த புரட்சியின் கூறுகளை விளக்குக.

  • வேலூர் புரட்சிக்கு முன்பாகவே 1792இல் திப்புவோடு ஏற்பட்ட மோதலுக்கு பின்பு சேலம், திண்டுக்கல், கோயம்புத்தூர் தஞ்சாவூர் கம்பெனி ஆட்சியுடன் இணைக்கப்பட்டது.
  • மனமுடைந்த சிற்றரசர்கள், நிலச் சுவான்தார்கள் போன்றோர் சிந்தித்து நிதானமாகச் செயல்பட்டதே 1806 ஆம் ஆண்டு வேலூர் புரட்சியாகும்.
  • பிரிட்டிஷ் இராணுவத்தில் பணியாற்றிய வீரர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்பட்டது. பதவி உயர்வும் குறைவாக இருந்தது.
  • சமய நம்பிக்கைகளுக்கு ஆங்கில அதிகாரிகள் குறைவான மதிப்பளித்தனர். அவர்களுத வேளாண் கொள்கை சிக்கலாக இருந்தது.
  • நிலக்குத்தகை முறையின் நிலையற்ற தன்மை, 1805-ம் ஆண்டு கடும் பஞ்சம், நெருக்கடி போன்றவைகள், பிரிட்டிஷ் இராணுவத்தின் புதிய அறிவுரைகள்
  • புதிய ரக துப்பாக்கிகளில் தடவப்பட்ட விலங்குகள் கொழுப்பு மற்றும் தோல் உறைகள்.
  • இவ்வாறு எதிரப்பு தெரிவித்த அனைத்தையுமே கம்பெனி நிர்வாகம் கவனத்தில் கொள்ளாமல் இருந்தது.
  • 1806 ஜூலை 10 அதிகாலையில் நடந்த புரட்சியில் ஆங்கில அதிகாரிகள் கொல்லப்பட்டது. இதற்கு பதிலடி கொடுத்த கர்னல் கில்லஸ்பியின் கொடுங்கோன்மை
  • இவ்வாறு பல கூறுகள் 1806 ஆம் ஆண்டு வேலூர் புரட்சிக்கு இட்டுச் சென்றன.

 

33. இந்திய மண் வகைகள் ஏதேனும் ஐந்தினைக் குறிப்பிட்டு, மண்ணின் பண்புகள் மற்றும் பரவல் பற்றி விவரி.

இந்தியாவில் 8 மண் பிரிவுகள் உள்ளன

அவை

  1. வண்டல் மண்
  2. கரிசல் மண்
  3. செம்மண்
  4. சரளை மண்
  5. காடு மற்றும் மலை மண்
  6. வறண்ட பாலை மண்
  7. உப்பு மற்றும் காரமண்
  8. களிமண் மற்றும் சதுப்பு நில மண்

1. வண்டல் மண்

  • சிற்றோடைகள் மற்றும் ஆறுகளின் வேகம் குறையும் பொழுது படிய வைப்பதினால் உருவாகின்றன
  • புதிய வண்டலான காதர் வெளிர் நிறமும், பழைய வண்டலான பாங்கர் அடர் நிறம் உடையது
  • கங்கை மற்றும் பிரம்மபுத்திரா ஆற்றுப் பள்ளத்தாக்குகள், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா, மேற்கு வங்காளம் மற்றும் பீகார் மாநிலங்களில் உள்ள சமவெளிப் பகுதிகள், கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஆற்று முகத்துவாரப் பகுதி சமவெளிப் பகுதிகளில் காண்ப்படுகிறது
  • நெல், கோதுமை, கரும்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் பயிரிட ஏற்ற மண்

2. கரிசல் மண்

  • தக்காணப் பகுதியில் உள்ள பசால்ட் பாறைகளில் இருந்து உருவானது.
  • டைட்டானியம் மற்றும் இரும்பு தாதுக்களால் கருப்பு நிறமாக உள்ளது.
  • மகாராஷ்டிரா மற்றும் மாளவப் பீடபூமி கத்தியவார் தீபகற்பம்,
    தெலங்கானா, ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ராயல்சீமா மற்றும் கர்நாடக மாநிலத்தின் வடபகுதிகளில் காண்ப்படுகிறது
  • பருத்தி, தினை வகைகள், புகையிலை மற்றும் கரும்பு பயிரிட ஏற்ற மண்

3. செம்மண்

  • பழமையான படிக பாறைகளான கிரானைட், நைஸ் போன்ற பாறைகள் சிதைவடைவதால் உருவாகின்றன.
  • இரும்பு ஆக்ஸைடு அதிகமாக காணப்படுவதால் சிவப்பு நிறமாக காணப்படுகிறது
  • தக்காண பீடபூமியின் கிழக்குப் பகுதி, தென் மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் சோட்டா நாகபுரி பீடபூமி, ஜார்க்கண்ட் பகுதிகளில் காண்ப்படுகிறது
  • பருத்தி, நெல், கோதுமை மற்றும் பருப்பு வகைகள் பயிரிட ஏற்ற மண்

4. சரளை மண்

  • வெப்பம் மற்றும் குளிர் அடுத்தடுத்து நிகழும் போது மண்சுவரல் (leaching) காரணமாக உருவாகிறது.
  • இரும்பு மற்றும் அலுமினியத்தின் நீரேற்ற ஆக்ஸைடுகளால் உருவானது.
  • உயரமான மலைப்பகுதிகளில் காணப்படுகிறது. ஈரப்பதத்தை தக்கவைத்து கொள்ளுவதில்லை
  • அசாம் குன்றுகள்,கேரளா மற்றும் கர்நாடகாவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதிகள், ஒடிசா மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காண்ப்படுகிறது
  • காபி, இரப்பர், முந்திரி மற்றும் மரவள்ளிக் கிழங்கு பயிரிட ஏற்ற மண்

5. காடு மற்றும் மலை மண்

  • பனிமழை வெப்பநிலை வேறுபாடுகளால் பௌதீக சிதைவின் காரணமாக உருவாகின்றது.
  • காலநிலைக்கு ஏற்ப இடத்திற்கு இடம் மாறுபடுகிறது.
  • இம்மண்ணில் செம்மையான மணல் மற்றும் பாறைத்துகள்கள் கலந்து காணப்படுகிறது.
  • மகாராஷ்டிரா மற்றும் மாளவப் பீடபூமி கத்தியவார் தீபகற்பம், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ராயல்சீமா மற்றும் கர்நாடக மாநிலத்தின் வடபகுதிகளில் காண்ப்படுகிறது
  • பருத்தி, தினை வகைகள், புகையிலை மற்றும் கரும்பு பயிரிட ஏற்ற மண்

6. வறண்ட பாலை மண்

  • வறண்ட கால நிலை, அதிக வெப்பம் காரணமாக ஆவியாதல் அதிகமாக இருப்பதால் மேல் மண் வறண்டு காணப்படுகிறது.
  • வெளிர் நிறமுடையது, தாவரங்கள் இல்லாமையால் இலை மட்குச் சத்து குறைவாகக் காணப்படுகிறது.
  • இராஜஸ்தான், குஜராத்தின் வட பகுதி, பஞ்சாப் மாநிலத்தின் தென் பகுதிகளில் காண்ப்படுகிறது
  • நீர் பாசன வசதியுடன் தினை வகைகள், பார்லி, பருத்தி, சோளம், பருப்பு வகைகள் பயிரிடப் படுகின்றன.

7. உப்பு மற்றும் கார மண்

  • சிதைக்கப்படாத பாறைகள் மற்றும் சிதைவுற்ற கனிமங்களை உடையது.
  • வடிகாலமைப்பு இல்லாமையால் நீர்பிடிப்புக் காரணமாக தீங்கு விளைவிக்கக் கூடிய உப்புகள் நுண்புழை நுழைவு காரணமாக மண்ணின் கீழ் அடுக்கிலிருந்து மேற்பரப்பிற்கு கடத்தப்படுகிறது. இதனால் இம்மண், உப்பு மற்றும் காரத் தன்மையுடன் காணப்படுகிறது
  • ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், பீகார், உத்தரப்பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், இராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களின் வறண்ட பகுதிகளில் காணப்படுகிறது
  • அதிக காரத்தன்மை காரணமாக இங்கு பயிர்கள் வளர்வதற்கு ஏற்ற சூழ்நிலை இல்லை.

8. களிமண் மற்றும் சதுப்பு நில மண்

  • அதிக மழையளவு, அதிக ஈரப்பதம் கொண்ட பகுதிகளில் காணப்படுகிறது
  • இவ்வகை மண் கருமை நிறம் மற்றும் அதிககாரத் தன்மை உடையது
  • கேரளாவில் கோட்டயம் மற்றும் ஆலப்புழை மாவட்டங்கள், ஒடிசா தமிழ்நாடு கடற்கரைப் பகுதிகள், மேற்கு வங்கத்தில் உள்ள சுந்தரவனப் பகுதிகள், பீகார், உத்தரகாண்ட் மாநிலத்தில் அல்மோரா மாவட்டம். போன்ற பகுதிகளில் காணப்படுகிறது
  • நெல், சணல் முதலியன பயிரிட ஏற்ற மண்

 

34.வேறுபடுத்துக

1. புதுபிக்க இயலும் மற்றும் புதுபிக்க இயலாத வளங்கள்

புதுபிக்க இயலும் வளங்கள்

  • பயன்பாட்டிற்கு பிறகு இயற்கை முறையில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடிய வளங்கள் புதுப்பிக்க இயலும் வளங்களாகும்.
  • சூரிய சக்தி, காற்று சக்தி, உயிரின கழிவு வாயு வளிமம், ஓதசக்தி, அலைசக்தி போன்றவை புதுப்பிக்கக்கூடிய வளங்கள் ஆகும்.

புதுபிக்க இயலாத வளங்கள்

  • பயன்பாட்டிற்கு பிறகு மீண்டும் மீட்டுருவாக்கம் செய்ய இயலா வளங்கள் புதுப்பிக்க இயலா வளங்கள் ஆகும்.
  • நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை வாயு போன்றவை புதுப்பிக் இயலாத வளங்கள் ஆகும்.

2. உலோகம் மற்றும் அலோக கனிமங்கள்

உலோகக் கனிமங்கள்

  • உலோகக் கனிமங்கள் என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உலோகங்களைக் கொண்டிருக்கும்.
  • உலோகக் கனிமப் படிவுகளில் இரும்பு, மாங்கனீசு, தாமிரம், பாக்சைட், நிக்கல், துத்தநாகம், காரியம், தங்கம் போனற உலோகங்கள் காணப்படுகின்றன.

அலோகக் கனிமங்கள்

  • அலோகக் கனிமங்களில் உலோகத் தன்மை இருப்பதில்லை.
  • மைக்கா, சுண்ணாம்பு, ஜிப்சம், நைட்ரேட், பொட்டஷ், டோலமைட், நிலக்கரி, பெட்ரோலியம் ஆகியன முக்கிய அலோகங்க கனிமங்களாகும்

காரணம் கூறுக

1. வேளாண்மை இந்தியாவின் முதுகெலும்பு.

காரணம்:-

இந்திய வேளாண்மை 50 சதவீதத்திற்கும் மேலான மக்களக்கு வேலைவாய்ப்பையும், நாட்டின் மொத்த வருமானத்தில் 25 சதவீதத்தையும் நாட்டிற்கு அளிக்கிறது.

 

35. நகரமயமாக்கம் என்றால் என்ன? அதன் சிக்கல்கள் யாவை?

கிராமப்புற சமுதாயம் நகர்புற சமுதாயமாக மாற்றமடைவதையே நகரமயமாக்கம் என்கிறோம்.

நகரமயமாக்களின் தாக்கங்கள்

  • நகரமயமாக்கலும் மக்கள் தொகை அடர்த்தியும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை.
  • நகர்புறமயமாக்கலின் விரைவான வளர்ச்சியான சமூக-பொருளாதார அபிவிருத்தியின் அடையாளமாக கருதப்படுகிறது.
  • இந்தியா போனற் வளரும் நாடுகளின் நகரமாயமாக்கம் விரைவாக அதிகரித்து வருகிறது
  • கிராமத்திலிருந்து நகரங்களுக்கு இடப்பெயர்தல் நகர்பகுதிகளில் மக்கள் தொகை வெடிப்பிற்கு வழிவகுக்கிறது.
  • மும்பை, கொல்கத்தா, புதுடெல்லி போன்ற பெருநகரங்கள் தங்கள் கொள்ளளவை விட அதிகமான மக்கள் தொகையுடன் காணப்படுகின்றன.
  • 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் நகர்புற மக்கள் தொகை 377 மில்லியன்களைக் கடந்து அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மொத்த மக்கள் தொகையை விட அதிகமாக உள்ளது.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் 50 சதவீதத்றிகும் அதிகமான மக்கள் நகர்புறங்களில் வசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் நகரமயமாக்கலால் ஏற்படும் பிரச்சனைகள்:

  • நகர விரிவாக்கத்தை ஏற்படுத்துகிறது.
  • நகர்புறங்களில் மக்கள் நெருக்கடியை தோற்றுவிக்கிறது.
  • நகர்புறங்களில் குடியிருப்புகளின் பற்றாக்குறையை உருவாக்குகிறது.
  • குடிசைப் பகுதிகள் தோன்ற காரணமாக உள்ளது.
  • போக்குவரத்து நெரிசலை அதிகப்படுத்துகிறது.
  • குடிநீர் பற்றாக்குறையை ஏற்படுத்துகின்றது.
  • வடிகால் பிரச்சனைகள் உண்டாகின்றன.
  • திடக்கழிவு மேலாண்மையை சிக்கலாக்கிறது.
  • குற்றங்கள் அதிகரிக்க காரணமாகின்றன.

 

36. பசுமைப் புரட்சி ஏன் தோன்றியது என்பதைப் பற்றி விவரி.

  • சுதந்திரத்திற்கு பிறகு, இந்தியா ஒரு திட்டமிட்ட வளர்ச்சியினை பின்பற்ற முடிவு செய்தது.
  • விவசாயத்தில் ஆரம்பத்தில் கவனம் செலுத்திய பின்னர், தொழில்மயமாக்கலுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. இந்தியாவில் ஏற்பட்டதொடர்ச்சியான வறட்சி, உணவு தானியங்களின் இறக்குமதியைச் சார்ந்திருக்க தள்ளப்பட்டது. இருப்பினும், அப்பொழுது இருந்த அந்நிய செலாவணி இருப்பானது, திறந்த சந்தைக் கொள்முதல் மற்றும் தானியங்களின் இறக்குமதிக்கு அனுமதிக்கவில்லை.
  • பணக்கார நாடுகளிலிருந்து உணவு தானியங்களை சலுகை விலையில் இந்தியா கோர வேண்டியிருந்தது. 1960 களின் முற்பகுதியில் அமெரிக்கா தனது பொது சட்டம் 480 (P.L. 480) திட்டத்தின் மூலம் இந்தியாவுக்கு உதவி வழங்கியது.
  • அதிக மக்கள் தொகையைக் கொண்ட வளர்ந்து வரும் ஒரு நாடு புரட்சிக்கு சாத்தியமான தேர்வாளராக கருதப்பட்டது. எனவே அமெரிக்க நிர்வாகம் மற்றும் ஃபோர்டு அறக்கட்டளை போன்ற மனிதநேய அமைப்புகள் உணவு உற்பத்தியை அதிகரிக்க கோதுமை மற்றும் அரிசியின் உயர் ரக விளைச்சல் வகைகளுக்கான (High Yielding Varieties) திட்டத்தை வகுத்து அறிமுகப்படுத்தியது.
  • இந்தத் திட்டம் நீர்ப்பாசனம் இருக்கும் இடத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது. திட்டங்களின் முடிவுகள் உறுதி செய்யப்பட்டதால், அதிக எண்ணிக்கையிலான மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டது.
  • இவ்வாறு, பசுமைப்புரட்சியானது நாட்டில் தோன்றி உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற வழிவகுத்தது. உயர் ரக விதைகளான (HYV) அரிசி மற்றும் கோதுமை போன்ற உணவு தானியங்கள் பயிரிடப்பட்ட பகுதியில் உற்பத்தியை அதிகரித்தது.

37. முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரி.

அமைச்சரவை தொடர்பானவை

  • முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் அமைச்சர்களை நியமிக்கிறார்.
  • அமைச்சர்களுக்குத் துறைகளை ஒதுக்கீடு செய்கிறார்.
  • தனது அமைச்சரவையை மாற்றியமைக்கிறார்.
  • அமைச்சரவைக் கூட்டத்தைத் தலைமை ஏற்று நடத்தி முடிவுகளை எடுக்கிறார்.
  • அமைச்சர்கள் அனைவரையும் கட்டுப்படுத்தி, வழிநடத்தி, இயக்கி, அவர்களது நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறார்.

ஆளுநர் தொடர்பானவை

கீழ்க்காணும் அலுவலர்களின் நியமனங்கள் தொடர்பாக ஆளுநருக்கு ஆலோசனை வழங்குகிறார்.

  • மாநில அரசு வழக்குரைஞர்
  • மாநில தேர்தல் ஆணையர்
  • அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
  • மாநில திட்டக்குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
  • மாநில நிதிக்குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்

சட்டமன்றம் தொடர்பானவை

  • சட்டமன்ற கூட்டத்தொடரை ஆரம்பிக்கவும் ஒத்திவைக்கவும் ஆளுநருக்கு முதலமைச்சர் ஆலோசனை வழங்குகிறார்.
  • சட்டமன்றத்தில் அரசின் கொள்கைகளை அறிவிக்கிறார்.
  • சட்டமன்றத்தில் மசோதாக்களை அறிமுகப்படுத்துகிறார்.
  • எந்நேரத்திலும் சட்டமன்றத்தைக் கலைக்க ஆளுநருக்குப் பரிந்துரை செய்கிறார்.

 

38. அணிசேரா இயக்கம் பற்றி விரிவான குறிப்பு எழுதுக

  • அணிசேரா இயக்கம்’ என்ற சொல் 1953இல் ஐ.நா. சபையில் உரையாற்றிய வி. கிருஷ்ண மேனன் என்பவரால் உருவாக்கப்பட்டது.
  • அணிசேராமை என்பது இந்திய வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சமாக விளங்குகிறது.
  • இதன் நோக்கம் இராணுவக் கூட்டணியில் சேராமல் வெளிநாட்டு விவகாரங்களில் தேசிய சுதந்திரத்தைப் பராமரித்தலாகும்.
  • அணிசேரா இயக்கமானது 120 உறுப்பு நாடுகளையும் 17 நாடுகளைப் பார்வையாளராகவும் 10 சர்வதேச நிறுவனங்களையும் கொண்டுள்ளது.
  • இது ஒரு அரசியல் இயக்கத்திலிருந்து பொருளாதார இயக்கமாக மாற்றம் கொண்டுள்ளது.

அணிசேர இயக்கத்தின் நிறுவனத் தலைவர்கள்

  • இந்தியா – ஜவகர்லால் நேரு
  • யுகோஸ்லாவியா – டிட்டோ
  • எகிப்து – நாசர்
  • இந்தோனேசியா – சுகர்னோ
  • கானா – குவாமே நிக்ரூமா

கொள்கை மாற்றம்

  • இந்தியா அணிசேரா இயக்கத்தில் இருந்த போதும் சோவியத் யூனியனுடன் 1971ஆம் ஆண்டில் இந்திய – சோவியத் ஒப்பந்தத்தின் மூலம் இணைந்தது. பின்னர் இந்தியா இராணுவ நவீனமயமாக்கலை மேற்கொண்டது.
  • வெளியுறவுக் கொள்கைகளை நிர்வகிப்பதில் ஏற்படும் குறைகளும் தவறுகளும் அவ்வப்போது சரி செய்யப்பட்டாலும் இந்தியாவின் அடிப்படைக் கொள்கையான அணிசேராமை இன்னும் நடைமுறையில் உள்ளது

 

39. உலகமயமாக்கலின் சவால்களை எழுதுக

  • உலகமயமாக்கலில் நன்மைகள் அனைத்து நாடுகளுக்கும் தானாக கிடைப்பதில்லை.
  • வளர்ந்து வரும் உலகில் உலகமயமாக்கல், உறுதியற்ற தன்மைக்கு வழிவகுக்கும் என்பது அச்சத்திற்குரியதாகும்.
  • உலகமயமாக்கலினால் உலகளாவிய போட்டி அதிகரித்த தொழில்துறை உலகில், ஊதியங்கள், தொழிலாளர் உரிமைகள், வேலைவாய்ப்பு நடைமுறைகள் ஆகியவற்றை அடிமட்டத்திற்கு கொண்டு செல்ல இது வழிவகுக்கும்.
  • இது உலகளாவிய சமத்துவமின்மைக்கு வழிவகுக்கிறது.
  • உலகமயமாக்கலால் குழந்தை தொழிலாளர் முறை மற்றும் அடிமைத்தனம் போன்ற நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது.
  • மக்கள் அதிகமாக துரித உணவுகளை உட்கொள்கிறார்கள். இதனால் உடல்நலக் குறைவு மற்றும் நோய் பரவுதலுக்கு இது வழிவகுக்கிறது.
  • உலகமயமாக்கல் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
41) காலக் கோடு

1905- வங்கப்பிரிவினை
1906-முஸ்லீம் லீக் கட்சி தோற்றம்
1907 - சூரத் பிளவு
1916- லக்னோ ஒப்பந்தம்
1919-ரெளலட் சட்டம்

 42)உலக வரைபடம்



பகுதி-IV

 

43. 19ஆம் நூற்றாண்டில் சீர்திருத்த இயக்கங்கள் நடைபெறுவதற்கு இட்டுச் சென்ற சூழ்நிலைகளை விவாதிக்கவும்.

  • சமூகத்தில் நிலவி வந்த சதி எனும் உடன்கட்டை ஏறுதல்
  • குழந்தைத் திருமணம் மற்றும் பலதார மணம் போன்ற மரபு சார்ந்த பழக்க வழக்கங்கள்
  • விதவைப் பெணகள் மறுமணம் செய்ய உரிமை மறுக்கப்பட்டது.
  • பெண் அடிமைத்தனம், ஆணை விட பெண் கீழானவர் எனும் நடைமுறைகள்
  • வரதட்சணைகள்
  • பெண் கல்வி மறுப்பு நடைமுறைகள்
  • எல்லையற்ற உபநிடதங்கள், போதனைகள்
  • பிராமணர் மேலாதிக்கம் செய்யும் சடங்கு
  • மூட நம்பிக்கைகள், பழக்க வழங்கங்களின் அதிக தாக்கங்கள்
  • பயங்கரமான சாதிக் கொடுமைகள், ஒடுக்கப்பட்ட மக்களின் துயரங்கள்
  • மேலை நாட்டு பகுத்தறிவுச் சிந்தனைகளை ஏற்க மறுத்தது

 

 

ஆ). கிழக்கிந்திய கம்பெனியாரை எதிர்த்து கட்டபொம்மன் நடத்திய வீரதீரப் போர்கள் பற்றி ஒரு கட்டுரை வரைக

  • பாஞ்சாலங்குறிச்சியின் பாளையக்காரராக தனது முப்பதாவது வயதில் வீரபாண்டிய கட்டபொம்மன் பொறுப்பேற்றார்.
  • கம்பெனி நிர்வாகத்திற்கும் கட்டபொம்மனுக்கும், மோதல் போக்கு வளர்ந்து கொண்டே வந்தது.
  • ஆட்சியர்கள் பாளையக்கரர்களை வரிகளை வசூலிக்க படையினைப் பயன்படுத்தினர். இதுவே கட்டபொம்மனுக்கும் ஆங்கிலேயருக்கும் இடையே பெரும் பகை ஏற்பட அடிப்படையானது.
  • கட்டபொம்மனிடமிருந்து வசூலிக்க வேண்டிய நிலவரி நிலுவையானது 1798ஆம் ஆண்டு வாக்கில் 3310 பகோடாக்களாக இருந்தது.
  • இவற்றை வசூலிப்பதன் அதிகாரம் ஜாக்சன் என்ற கர்வமுள்ளஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது
  • 1798 ஆகஸ்ட் 18இல் இராமநாதபுரத்தில் வந்து தன்னைச் சந்திக்குமாறு கட்டபொம்மனுக்கு அவர் ஆணை பிறப்பித்தார்.
  • கட்டபொம்மன் இராமநாதபுரத்தில் ஜாக்சனைச் சந்தித்தார்.
  • ஜாக்சனின் முன்பு கட்டபொம்மன் மூன்று மணி நேரம் நிற்க வைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
  • ஆபத்தை உணர்ந்த கட்டபொம்மன் தனது அமைச்சரான சிவசுப்ரமணியனாருடன் தப்பிச்செல்ல முயன்றேபாது, சிவசுப்ரமணியனார் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.
  • பாஞ்சாலங்குறிச்சிக்குத் திரும்பிய கட்டபொம்மன் ஆட்சியர் ஜாக்சன் தன்னை அவமானப்படுத்தியதை பற்றி கம்பெனி நிர்வாகத்திடம் தெரியப்படுத்தினார்.
  • சிவகங்கை மருது பாண்டியர்கள் ஏற்படுத்தியிருந்து தென்னிந்திய கூட்டமைப்பில் சேர்ந்து ஆங்கிலேயரை எதிர்ப்பது என முடிவெடுத்தார்.
  • 1799 மே மாதம் வெல்லெஸ்லி பிரபு கட்டளையின் படி கம்பெனி படையும் இணைந்து கட்டபொம்மனை சரணடையும் படி கோரின
  • கட்டபொம்மன் சரணடைய மறுத்து புதுக்கோட்டைக்கு தப்பியோடினார்.
  • புதுக்கோட்டை அரசர்களால் கட்டபொம்மன் பிடிபட்டு திருநெல்வேலிக்கு அருகே கயத்தாறில் உள்ள புளிய மரத்தில் தூக்கிலிடப்பட்டார்.
44) இந்திய வரைபடம்

 அ)



ஆ)













கருத்துரையிடுக

0 கருத்துகள்