Ad Code

Ticker

6/recent/ticker-posts

TNPSC|Notes|சந்திப்பிழை அறிதல்

 சந்திப்பிழை அறிதல்
சந்திப் பிழையை நீக்குதல்

வல்லின எழுத்துக்கள் ஆறு – க்ச்ட்த்ப் இவைகளில் க்ச்த்ப் ஆகிய எழுத்துகள் மிகவும் வலிமையானவைட்,ற – ஆகிய இரண்டு எழுத்துகளும் மொழிக்கு முதலில் வர இயலாதவை வல்லினம் என்று அழைக்கப்படும்.


வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும் வல்லினம் மிகும் இடங்கள்

1. இரண்டாம் வேற்றுமை உருபிற்குப் பின் வல்லினம் மிகும் ()


குழந்தையை கண்டேன்₌ குழந்தையைக் கண்டேன்

பொருளை தேடு ₌ பொருளைத்தேடு

புலியை கொன்றான் ₌ புலியைக் கொன்றான்

நூலை படி ₌ நூலைப்படி

2. நான்காம் வேற்றுமை உருபிற்குப் பின் வல்லினம் மிகும்.


வீட்டிற்கு சென்றான் ₌ வீட்டிற்குச் சென்றான்

கல்லூரிக்கு போனாள் ₌ கல்லூரிக்குப் போனாள்

3. ஆறாம் வேற்றுமைத் தொகையில் வலி மிகும். ‘அது’ – மறைந்திருப்பது


தாமரைபூ ₌ தாமரைப்பூ

குதிரை கால் ₌ குதிரைக்கால்

4. ஏழாம் வேற்றுமைத் தொகையில் வலி மிகும்.


குடி பிறந்தார் ₌ குடிப்பிறந்தார்

வழி சென்றார் ₌ வழிச்சென்றார்

5. வன்றொடர்க் குற்றியலுகரத்தின் பின் வல்லினம் வர மிகும் (வல்லெழுத்தை அடுத்து வந்த குற்றிலுகரம்)


பாக்கு தூள் ₌ பாக்குத்தூள்

தச்சு தொழில் ₌ தச்சுத்தொழில்

கேட்டு கொடு ₌ கேட்டுக்கொடு

பத்து பாட்டு ₌ பத்துப்பாட்டு

படிப்பு செலவு ₌ படிப்புச்செலவு

பற்று தொகை ₌ பற்றுத்தொகை

6. மென்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் சில இடங்களில் வல்லினம் மிகும்.


இரும்பு தூள் ₌ இரும்புத்தூள்

மருந்து கடை ₌ மருந்துக்கடை

கன்று குட்டி ₌ கன்றுக்குட்டி

7. உ என்னும் சுட்டெழுத்துகளின் பின்னும் ‘எ’ என்னும் வினா எழுத்திற்குப் பின்னும் வலி மிகும்.


கடல் ₌ அக்கடல்

இ பாடம் ₌ இப்பாடம்

உ சிறுவன் ₌ உச்சிறுவன்

எ தொழில் ₌ எத்தொழில்

8. சுட்டுவினாக்களின் திரிபுகளான அந்தஇந்தஎந்த என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகும்.


அந்த கிணறு ₌ அந்தக்கிணறு

இந்த +தமிழ் ₌ இந்தத்தமிழ்

எந்த செயல் ₌ எந்தச்செயல்

9. அந்தஇந்தஅப்படிஇப்படி என்னும் சுட்டுச் சொற்களின் பின் வல்லினம் மிகும்.


அந்த பையன் ₌ அந்தப்பையன்

இந்த சிறுவன் ₌ இந்தச்சிறுவன்

அப்படி செய் ₌ அப்படிச்செய்

இப்படி +பார் ₌ இப்படிப்பார்

10. எந்தஎப்படிஎங்கு என்ற வினாச் சொற்களின் பின் வல்லினம் மிகும்.


எங்கு பார்த்தாய் ₌ எங்குப்பார்த்தாய்?

எப்படி சாதித்தாய் ₌ எப்படிச்சாதித்தாய்?

எந்த செடி ₌ எந்தச்செடி?

11. நிலைமொழி ஈற்றில் உயிரெழுத்து நிற்கää வருமொழி முதலில் வரும் வல்லினம் மிகுந்து ஒலிக்கும் (உயிரீற்றுச் சொற்களின் பின் வல்லினம் மிகும்)


நிலாசோறு ₌ நிலாச்சோறு

மழைகாலம் ₌ மழைக்காலம்

பனி துளி ₌ பனித்துளி

12. இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வல்லினம் மிகும்


சாரை பாம்பு ₌ சாரைப்பாம்பு

மார்கழி திங்கள் ₌ மார்கழித்திங்கள்

மல்லி +பூ ₌ மல்லிப்பூ

13. பண்புத்தொகையில் வல்லினம் மிகும்


சதுரம் பலகை ₌ சதுரப்பலகை

வட்டம் பாறை ₌ வட்டப்பாறை

பச்சை பட்டு ₌ பச்சைப்பட்டு

14. அகர இகர ஈற்று வினையெச்சத்தின் பின் வல்லினம் மிகும்


தேட சொன்னான் ₌ தேடச்சொன்னான்

வர சொன்னான் ₌ வரச்சொன்னான்

ஓடி பிடித்தான் ₌ ஓடிப்பிடித்தான்

15. ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் வல்லினம் மிகும்


பூ +பறித்தான் ₌ பூப்பறித்தான்

கை கரண்டி ₌ கைக்கரண்டி

தீ பற்றியது ₌ தீப்பற்றியது

16. ஆய்போய் என்னும் வினையெச்சத்தின் பின் வல்லினம் மிகும்


நன்றாய் பேசினார்₌ நன்றாய்ப்பேசினார்

போய் தேடு ₌ போய்த்தேடு

17. இனிதனி மற்றுமற்றமற்றை என்னும் சொற்களின் பின் வரும் வல்லினம் மிகும்


இனி காணலாம் ₌ இனிக்காணலாம்

தனி தமிழ் ₌ தனித்தமிழ்

மற்று கண்டவை ₌ மற்றுக்கண்டவை

மற்றபொருள்கள் ₌ மற்றப்பொருள்கள்

மற்றை கூறுகள் ₌ மற்றைக் கூறுகள்

18. எனஆக என்னும் சொற்களுக்குப் பின் வரும் வல்லினம் மிகும்.


என கூறினான் ₌ எனக்கூறினான்

ஆக சொன்னான் ₌ ஆகச்சொன்னான்

19. சாலதவ என்னும் உரிச்சொற்களின் பின் வரும் வல்லினம் மிகும்


சால சிறந்தது ₌ சாலச்சிறந்தது

தவ பெரிது ₌ தவப்பெரிது

20. ஈறுகெட்ட எதிரிமறைப் பெயரெச்சத்தின் பின்வரும் வல்லினம் மிகும்


உண்ணா சோறு ₌ உண்ணாச்சோறு

ஓடா குதிரை ₌ ஓடாக்குதிரை

அழியா புகழ் ₌ அழியாப்புகழ்

21. தனிக்குறிலையடுத்து வரும் ஆ என்னும் நெடிலுக்குப் பின்வரும் வல்லினம் மிகும்


பலா சுளை ₌ பலாச்சுளை

இரா பகல் ₌ இராப்பகல்

கனா காலம் ₌ கனாக்காலம்

22. முற்றியலுகரச் சொற்களின் பின் வல்லினம் மிகும்


திரு குறள் ₌ திருக்குறள்

பொது சொத்து ₌ பொதுச்சொத்து

23. இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையில் வல்லினம் மிகும்


தண்ணீர் குடம் ₌ தண்ணீர்க்குடம்

மலர் கூடை ₌ மலர்க்கூடை

24. மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையில் வல்லினம் மிகும்


மரம் பெட்டி ₌ மரப்பெட்டி

இரும்பு சாவி ₌ இரும்புச்சாவி

25. நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையில் வல்லினம் மிகும்


சட்டை துணி ₌ சட்டைத்துணி

குடை கம்பி ₌ குடைக்கம்பி

26. ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையில் வல்லினம் மிகும்


அடுப்பு புகை ₌ அடுப்புப்புகை

விழி புனல் ₌ விழிப்புனல்

27. உவமைத்தொகையில் வல்லினம் மிகும்


பவளம் பற்று ₌ பவளப்பற்று

மலர் கண் ₌ மலர்க்கண்

28. ஒற்று இரட்டிக்கும் உயிர்தொடர்நெடி தொடர் குற்றியலுகரத்திற்குப் பின் வல்லினம் மிகும்


வயிறு போக்கு ₌ வயிற்றுப்போக்கு(உயிர்த்தொடர்)

முரடு காளை ₌ முரட்டுக்காளை

நாடு பற்று ₌ நாட்டுப்பற்று (நெடில்தொடர்)

காடு தேன் ₌ காட்டுத்தேன்

வல்லினம் மிகா இடங்கள்:


1. இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினமிகாது


தமிழ் கற்றார் ₌ தமிழ் கற்றார்

நீர் குடித்தான் ₌ நீர் குடித்தான்

துணி கட்டினான் ₌ துணி கட்டினான்

2. உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது


தாய் தந்தை ₌ தாய் தந்தை

இரவு பகல் ₌ இரவு பகல்

செடி+கொடி ₌ செடி கொடி

3. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் தவிர்த்து மற்றப் பெயரெச்சங்களின் பின் வல்லினம் மிகாது


நல்ல குழந்தை ₌ நல்ல குழந்தை

படித்த பெண் ₌ படித்த பெண்

செய்யாதசெயல் ₌ செய்யாத செயல்

4. உயர்திணைப் பொதுப்பெயர்களின் பின் வல்லினமிகாது


தொழிலாளர் தலைவர் ₌ தொழிலாளர் தலைவர்

மாணாக்கர் கூடினர் ₌ மாணாக்கர் கூடினர்

தாய் பாடினாள் ₌ தாய் பாடினாள்

5. அஃறிணை வினைமுற்றின் பின் வல்லினம் மிகாது


முழங்கின சங்குகள் ₌ முழங்கின சங்குகள்

பாடின குயில்கள் ₌ பாடின குயில்கள்

வந்தது கப்பல் ₌ வந்தது கப்பல்

6. எட்டுபத்து தவிர மற்ற எண்களின் பின் வல்லினம் மிகாது


ஒன்று கொடு ₌ ஒன்று கொடு

இரு சீர் ₌ இருசீர்

மூன்று கிளி ₌ மூன்று கிளி

7. அதுஇது என்னும் சட்டகளின் பின்னும் எதுயாதுஎன்னும் வினாச் சொற்களின் பின்னும் வல்லினம் மிகாது.


அது போயிற்று ₌ அது போயிற்று

இது பறந்தது ₌ இது பறந்தது

எது கண்டது ₌ எது கண்டது?

யாது சொல் ₌ யாது சொல்?

8. அத்தனைஇத்தனைஎத்தனை எனும் சொற்களின் பின் வல்லினம் மிகாது.


அத்தனை பழங்களா? ₌ அத்தனை பழங்களா?

இத்தனை பூக்களா? ₌ இத்தனை பூக்களா?

எத்தனை தேங்காய்? ₌ எத்தனை தேங்காய்?

9. வினாவை உணர்த்தும் ஆயா என்னும் வினா எழுத்துகளின் பின் வல்லினம் மிகாது


அவளா தைத்தாள் ₌ அவளா தைத்தாள்?

இவளோ போனாள் ₌ இவளோ போனாள்?

அவனே செல்வான் ₌ அவனே செல்வான்?

10. சிலபல என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகாது


பல குடிசைகள் ₌ பல குடிசைகள்

சில சொற்கள் ₌ சில சொற்கள்

11. விளிப்பெயர் பின்னும்வியங்கோள் வினைமுற்றின் பின்னும் வல்லினம் மிகாது


கண்ணா கேள் ₌ கண்ணாகேள்

வேலா செல் ₌ வேலாசெல்

வாழ்க தமிழ் ₌ வாழ்கதமிழ்

12. எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது


நாய் போனது ₌ நாய் போனது

வள்ளி படித்தாள் ₌ வள்ளி படித்தாள்

13. வினைத்தொகையில் வல்லினம் மிகாது


ஊறு காய் ₌ ஊறுகாய்

ஆடு கொடி ₌ ஆடு கொடி

விரி கதிர் ₌ விரி கதிர்

14. அடுக்குத் தொடரில் வல்லினம் மிகாது


தீ தீ ₌ தீதீ

பாம்பு பாம்பு ₌ பாம்புபாம்பு

15. சில ஆறாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது


வள்ளுவர் +கருத்து ₌ வள்ளுவர் கருத்து

ஒளவை சொல் ₌ ஒளவை சொல்

16. அவை இவை என்னும் சொற்களின் பின் வரும் வல்லினம் மிகாது


அவை+போயின ₌ அவை போயின

இவை செய்தன ₌ இவை செய்தன

17. படியென்னும் சொல் வினையோடு சேர்ந்து வருமிடத்தில் வல்லினம் மிகாது


வரும்படி +கூறினான் ₌ வரும்படி கூறினான்

போகும்படி சொன்னான் ₌ போகும்படி சொன்னான்

18. இரட்டைக் கிளவியில் வல்லினம் மிகாது


கல கல ₌ கலகல

பள பள ₌ பளபள

19. அவைஇவை என்னம் சுட்டுச் சொற்களின் பின் வல்லினம் மிகாது


அவை சென்றன ₌ அவை சென்றன

இவை செய்தன ₌ இவை செய்தன

20. அதுஇது என்னும் சுட்டுகளின் பின்வரும் வல்லினம் மிகாது


அது பறந்தது ₌ அது பறந்தது

இது கடித்தது ₌ இது கடித்தது

21. எதுயாது என்னும் வினாச்சொற்களின் பின் வல்லினம் மிகாது


எது பறந்தது ₌ எது பறந்தது?

யாது தந்தார் ₌ யாது தந்தார்?

22. இரண்டு வடசொற்கள் சேரும்போது வல்லினம் மிகாது


சங்கீதசபா ₌ சங்கீத சபா

மகாஜன சபா ₌ மகாஜன சபா

23. சில வினையெச்சத் தொடரில் வல்லினம் மிகாது


வந்து போனான் ₌ வந்து போனான்

செய்து கொடுத்தான் ₌ செய்து கொடுத்தான்

கருத்துரையிடுக

0 கருத்துகள்