Ad Code

Ticker

6/recent/ticker-posts

Advantage and disadvantage of online classes in Tamil

 

கொரோனா ஊரடங்கால் ஆன்லைனில் கல்வி என்ற புதிய கல்வி முறை அவதாரம் எடுத்துள்ளது. தற்போதைய சூழலில் ஆன்லைன் கல்வி தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. இந்தக் கல்விமுறை ஆசிரியர்களுக்கும் சரி, மாணவர்களுக்கும் சரி புதிய முறைதான். இரண்டு பக்கத்திலும் தடுமாற்றங்கள் உண்டு. நடுத்தரவயது ஆசிரியர்களுக்கு இந்தத் தொழில்நுட்பம் புதிது. ஆசிரியர்களும் ஆன்லைனில் பாடம் நடத்த பழக வேண்டி உள்ளது. பிறந்த சில மாதங்களிலேயே இக்கால குழந்தைகள் செல்போனை இயக்க பழகிவிடுவதால், இக்கால மாணவர்களுக்கு எளிதுதானே ஆன்லைன் கல்வி என்று நினைக்கலாம். ஆனால், அதிலும் சிக்கல்கள் இல்லாமல் இல்லை.இன்றைய பொருளாதார சூழ்நிலையில் வீட்டில் இரண்டு பிள்ளைகள் இருந்தால், இதுவரை ஆண்ட்ராய்டு போனை உபயோகிக்காத அந்தக் குடும்பம் இரண்டு போனோ, கம்ப்யூட்டரோ வாங்க வேண்டும். பொருளாதார ரீதியில் பின்தங்கியிருக்கும் குடும்பங்களில் இந்த ஆன்லைன் கல்விமுறை சாத்தியமா என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. அதற்குத் தீர்வாக 5 தனியார் சேனல்களில் இணைய பாடங்கள் ஒளிபரப்பப்படுகிறது. 

படித்த பெற்றோரே இந்த ஆப்பை டவுன்லோடு செய்யுங்கள், அந்த ஆப்பை டவுன்லோடு செய்யுங்கள் என்று மாற்றி மாற்றி பள்ளிகள், கல்லூரிகள் கூறும்போது குழம்பித்தான் போய்விடுகிறார்கள். பள்ளிப்படிப்பைத் தாண்டாத பெற்றோர்கள், படிக்காத பெற்றோர்களுக்கு தங்களது குழந்தைகளுக்கு செல்போனில் ஆப்பை டவுன்லோடு செய்வது, பள்ளி , கல்லூரிகளில் பாடத்திற்கேற்ப அவ்வப்போது அனுப்பும் லிங்க்கில் நுழைவது போன்றவை சவாலான காரியமாகத்தான் உள்ளது. இதையும் தாண்டி சில பள்ளிகள், பல கல்லூரிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்திக்கொண்டுதான் இருக்கின்றன. சீருடையுடன்தான் மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்று சில பள்ளிகளில் நடைமுறை உள்ளது. ஆன்லைன் கல்வி தற்போதைய சூழ்நிலையில் அவசியம் என்றாலும் அதிக நேரம் ஸ்கிரீனைப் பார்ப்பதால் மாணவர்களின் கண்கள், காதுகள் பாதிப்படைவது தலைவலி, தூக்கமின்மை போன்றவற்றால் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். எப்படியும் பிள்ளைகள் டிவி அல்லது போனில்தான் இருக்கப் போகின்றார்கள் அதற்கு இப்படி ஆன்லைனில் பாடம் படிப்பதை வரப்பிரசாதமாகவே கருதும் பெற்றோர்களும் உள்ளனர்.

தொழில்நுட்ப முன்னேற்றங்களை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்தக் கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு சிறப்பாகப் பாடம் எடுக்க ஒரே வழி இணைய வழி வகுப்புகளே. ஆசிரியர் நேருக்கு நேர் பாடம் எடுக்கும் அளவிற்கு இணைய வழி வகுப்புகள் திறன் வாய்ந்ததாக இருக்காது என்றாலும், தற்போதைய நிலைக்கு இது சிறந்த வழியே. மருத்துவ பாடம் என்று எடுத்துக்கொண்டால் நோயாளிகளின் பக்கம் நின்று படிப்பதே படிப்பு. வகுப்பறையில் உட்கார்ந்து படிப்பது அல்ல. இணையவெளி வகுப்புகள் மூலம் பல மாணவர்களை ஒருங்கிணைத்து ஒரே நேரத்தில் வகுப்புகளை எடுக்க முடியும். பாடம் எடுக்க உபயோகிக்கப்படும் பவர்பாய்ன்ட் பிரசன்டேஷன் வைத்து மாணவர்கள் பல முறை படிக்கலாம்.

செய்முறை வகுப்பு பாடங்களை மட்டும் மாணவர்கள், பள்ளி கல்லூரிகள் திறந்த பிற்பாடு பயின்று கொள்ளலாம். அனைத்து மாணவர்களுக்கும் இந்த இணைய வகுப்பில் பங்கேற்கத் தேவையான தொழில்நுட்ப உபகரணங்களை வைத்துள்ளார்களா, அல்லது வாங்க முடியுமா என்பதே கேள்வி. கேரளாவில் டிவி சேனல் ஒன்றை ஆரம்பித்து அதன் வழியாக வகுப்புகள் எடுக்கின்றனர். டிவி அனைவர் வீட்டிலும் இருக்கும்தானே, அதனால் இந்த யுத்தியைக் கையாள்கிறார்கள்.

இணைய வழி வகுப்புகளில் ஆசிரியர் மாணவர் உரையாடல் குறைந்தே இருக்கும். ஒரு வழி பேச்சு மாதிரியே இருக்கும். இணைய வழியில் பாடம் எடுக்க என்று சில செயலிகள் உள்ளன அவற்றிற்கு அனைவராலும் பணம் செலுத்த இயலுமா என்பதும் கேள்விக்குறிதான்.பாரம்பர்ய கரும்பலகை வகுப்புகள் போல் இல்லை என்றாலும் இணையவழி வகுப்புகளே எதிர்காலம். இந்தக் கொரோனா காலத்தில் இதை எதிர்த்துச் செயல்பட முடியாது. நிலைமை சீரான பிறகு, பள்ளி கல்லூரி வகுப்புகள் இயல்பு நிலைக்குத் திரும்பும்."



கருத்துரையிடுக

0 கருத்துகள்